சச்சினை பற்றி எண்ணற்ற கதைகள்,கட்டுரைகள் உலகம் முழுக்க வடிக்கப்படும் .யோசித்து பார்க்கையில் எத்தனையோ களங்களில் ஜெயித்த சச்சின் வயதுடன் இரண்டாவது ரவுண்டில் தோற்றுப்போய் இருக்கிறார் .2004 இல் நடந்த முதல் சுற்றில் கண்ணீரோடு போனவர் திரும்பி வந்து சாதித்தது இன்னமும் பசுமையாக இருக்கிறது .அப்பொழுது எண்டுல்கர் என சச்சினை குறித்ததற்காகவே அந்த செய்தித்தாளை இன்றுவரை வாங்குவதில்லை நான் .
23 வருடங்களில் எல்லா தலைமுறையையும் குதூகலிக்க வைக்கிற ஒரு கச்சிதமான ஆட்டக்காரராக அவர் இருந்திருக்கிறா…ர் -“a perfect entertainer !”.கிரிக்கெட்டுடன் ஆன எந்த என் வயது இளைஞனின் ஞாபகமும் சச்சினோடு தான் ஆரம்பமாகி இருக்கும் .டிவி ஹால்களில் கண்ணிடுக்கி ஹே சச்சின் போர் அடிச்சுட்டார் என குதித்த தருணத்தில் எத்தனையோ பேரை குழந்தை ஆக்கிய அபார ஆட்டம் அவருடையது .யோசித்து பார்க்கையில் நூறு கோடிக்கும் மேற்பட்ட இத்தனை ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூக்கி கொண்டு வலித்துக்கொண்டிருந்த அவரின் தோள்களுக்கு ஓய்வை வயது தந்திருக்கிறது
ஆஸ்திரேலியாவின் எகிறி வரும் பிட்ச்களில் இளம் வயதில் அடித்து ஆடிய சச்சின் ,சறுக்கிப்போகும் பனி விளையாட்டு வீரன் போல சுழற்பந்துவீச்சை காதலோடு அணுகி ஆடிய அந்த ஜாலக்காரன் .ஜெயித்துக்கொண்டே இருந்த நாயகர்கள் உலகில் எங்கேயுமில்லை .தோற்ற பொழுதெல்லாம் இன்னுமொரு நாளிருக்கிறது நமக்கு என்கிற நம்பிக்கையை இருபதாண்டு காலம் தன் ஆட்டத்தின் மூலம் இந்தியர்களின் மனதில் விதைத்ததே ஒரு உளவியல் சாதனை தான் .
பலபேர் என்ன பெரிய கடவுள் எனக்கேட்கலாம்;ஒன்று வய்சாகிப்போன ஆட்களாக இருப்பர்.அல்லது சச்சினின் ஆட்டத்தை விமர்சனப்பார்வையோடு பார்த்தவர்களாக இருப்பர் .தரை டிக்கெட்டாக உட்கார்ந்து கொண்டு எந்த நுணுக்கமும் தெரியாமல் ஆட்டம் பார்க்கிற ரசிகனாக அத்தனைபேரையும் மாற்றிய வசீகரம் அந்த ஆட்டத்தில் இருந்தது .கண்ணீரோடு தான் இதை அடிக்கிறேன் .எந்த வகையான தனிமனித ஆராதனையையும் விமர்சிக்கிற நான் காலம் முழுக்க சச்சின் காதலன் .இன்னும் பலரும் .ஒரு பதிமூன்று வருடகாலம் அவர் ஆடியதை பார்த்தேன் என நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கண்ணிடுக்கி சொல்லும் பொழுது அவர்களுக்கு புரியாமல் போகாது என்கிற நம்பிக்கை இருக்கிறது -காலங்கள் சிலரைத்தான் காலங்களை கடந்து நிலைக்க வைக்கிறது .கிரிக்கெட்டில் டான் பிராட்மானுக்கு பின் அந்த கிரீடம் இவருக்கு தான் .
டென்னிசை விட்டு வெளியேற்றம் ,வேகப்பந்து வீச்சை துறந்த தருணம் ,முதுகு வலி ,ஷேன் வார்னேவை நொறுக்கி எடுத்த தருணம் ,1996 இன் ஸ்டம்பிங் ,கேப்டன் பதவியும் -வலிகளும்,ஷார்ஜாவில் சூறாவளி,அப்பாவின் மரணம்,கைநழுவிப்போன 203 உலகக்கோப்பை , டென்னிஸ் எல்போ,முதுகுவலி,2007 இல் மீண்டும் ஒரு பெருந்தோல்வி ,ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு ஊழித்தாண்டவம் ,200,2011 இல் உலகக்கோப்பை,செஞ்சுரியில் நூறு  -நாயகனில்லை இவர் -வார்த்தைகளில் அடக்க முடியாத சாகசப்பயணம் கூட்டிப்போன தேவன் .ராஜா ஹரிச்சந்திராஸ் பாக்டரியில் ஒரு காட்சி வரும் படம் முதன்முதலில் தயாரானதும் அதை பார்க்கும் பால்கேவின் மன உணர்வை ப்ரொஜக்டரின் ஒளிக்கீற்றுகளை காண்பித்து நம்மை உணர வைப்பார்கள் .அப்படித்தான் இந்த கட்டுரையும் ..இப்படி சில வரிகளில் கதையை அடக்குகிற பொழுது படிக்கிற பொழுது அவர் ஆடிய ஏதோ ஒரு இன்னிங்க்ஸ் நிழலாடும் .நெருடா எதையெல்லாமோ தான் கண்டதாக ஒரு கவிதையில் சொல்வார் suddenly I saw the heavens unfastened and open, planets, palpitating planations, shadow perforated, riddled with arrows, fire and flowers, the winding night, the universe.
அவற்றை காட்டிய நாயகன் சச்சின் தான் பலருக்கு கண்ணீரோடு விடைக்கொடுக்கிறோம் சச்சின்
Photo: கிரிக்கெட்டின் கடவுள் தன் படைப்பை நிறுத்திக்கொண்டார் ! அடுத்த கடவுள் வர நூற்றாண்டாகலாம் !

அரசியலார்வமற்ற மேதாவிகள் எனும் இக்கவிதை எழுதி ஆண்டுகள் பல ஆனாலும் இன்றைய அவலநிலைக்கும் பொருந்தவே செய்கிறது Apolitical Intellectuals – Otto Rene Castillo   ———————— ஒரு நாள் கடையர்கள் அரசியலார்வமற்ற என் … நாட்டு மேதாவிகளை வினாக்களால் விளாசுவார்கள்
இந்த தேசம் தனியாக,மெதுவாக … அழிவுத்தீயில் பொசுங்கிக்கொண்டு இருந்தபொழுது என்ன செய்தீர்கள் என அவர்கள் கேட்கப்படுவார்கள்
அப்பொழுது அவர்களின் ஆடம்பர ஆடைகள் நிறைந்த மதிய உணவுக்கு பிந்திய நீண்ட உறக்கங்கள் எதுவுமில்லா நோக்கங்களோடு ஆன மலடான அவர்களின் கேலி யுத்தங்கள் பணம் கொட்டி பெறப்பட்ட கல்வி அவர்களின் கல்வி எதுவும் கவனம் பெறாது
புராணங்களை பற்றி கேள்விகள் கேட்கப்படமாட்டாது அவர்களின் உள்ளே உள்ள மனசாட்சி கோழையின் மரணம் உற்ற பொழுது அவர்கள் கொண்ட அருவருப்பு பற்றி கவனம் கொடுக்கபடாது
மொத்த பொய்மையின் நிழலில் ஊடாக விளைந்த அவர்களின் அபத்த நியாயப்படுத்தல்கள் பற்றி வெறுமையே மிஞ்சி நிற்கும் அந்த நாளில் எளியவர்கள் வருவார்கள்
அரசியலார்வம் அற்ற மேதாவிகளின் கீதங்களிலும்,நூல்களிலும் இல்லாத அவர்களுக்கு சோறிட்டவர்கள் அவர்களின் வண்டிகளை ஒட்டியவர்கள் அவர்களின் நாயோடும்,தோட்டத்தோடும் அன்பு மொழி பேசியவர்கள் வருவார்கள்
அவர்கள் உங்களை கேட்பார்கள் “ஏழைகள் அழுத பொழுது அவர்களின் வாழ்வும்,நலமும் தீயின் கங்குகளில் அழிக்கப்பட்ட பொழுது என்ன செய்தீர்கள் ?”
என் இனிய தேசத்தின் அரசியலார்வம் அற்ற மேதாவிகளே உங்களால் விடை தர முடியாது உங்கள் துக்கம்
அமைதி எனும் கழுகு உங்களின் ஆண்மையை தின்று செல்லும் உங்கள் துன்பம் உங்கள் ஆன்மாவை உருவி எடுக்கும்
நீங்கள் அவமானத்தால் வெட்கி மௌனம் காப்பீர்கள்

THE LIFE AND TIMES OF C.N.ANNADURAI என்கிற அற்புதமான நூலை படித்து முடித்தேன் .அண்ணா என்கிற சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கையை முழுமையாக ஆதாரப்பூர்வமாக ஆராதனை தொனி இல்லாமல் விமர்சகர்களின் பார்வையையும் சேர்த்து இந்நூல் பதிவு செய்திருக்கிறது .அதில் என்னை ஈர்த்த அண்ணாவை பற்றிய பதிவுகள் மட்டும் இங்கே
அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ;அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்கு தெரியாது ; முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது… என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்
பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை கண்ணீர் துளிகள் என்று மாற்றினார்
முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போடா காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார்
திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை ;பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION.பத்திர்க்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது
”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார்.
அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார் ;பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் .NUISANCE என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் .
உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை ;இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை குணாளா குலக்கொழுந்தே என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் தோழர் அண்ணாதுரை என பெயர் சொல்லி விளித்த பொழுது வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன் என்கிறார்
சிவாஜி கட்சியை  விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”என கேட்டாராம்
அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் .அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர்
சட்டமன்றம் முதல் முறை போனதும் நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள் என கேட்டார் அண்ணா
காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார்
பொடி  போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் .அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ்
அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது .தலைப்பிலை என தலைப்பு தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு
எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டாராம்
  சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் .அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு  காட்டியது
தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் ,காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது மத்தியில் ஒருவர் மந்திரி ஆவது போனதே என வருந்துகிறார் .அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதலவர் என்ற பொழுது ,”வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாக சொன்னார் Photo: THE LIFE AND TIMES OF C.N.ANNADURAI என்கிற அற்புதமான நூலை படித்து முடித்தேன் .அண்ணா என்கிற சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கையை முழுமையாக ஆதாரப்பூர்வமாக ஆராதனை தொனி இல்லாமல் விமர்சகர்களின் பார்வையையும் சேர்த்து இந்நூல் பதிவு செய்திருக்கிறது .அதில் என்னை ஈர்த்த அண்ணாவை பற்றிய பதிவுகள் மட்டும் இங்கே 

அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ;அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்கு தெரியாது ; முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள்
யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்

பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை கண்ணீர் துளிகள் என்று மாற்றினார் 

முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போடா காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார் 

திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை ;பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION.பத்திர்க்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது 

''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல்
இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.


அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார் ;பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் .NUISANCE என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் .

உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை ;இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை குணாளா குலக்கொழுந்தே என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் தோழர் அண்ணாதுரை என பெயர் சொல்லி விளித்த பொழுது வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன் என்கிறார் 

சிவாஜி கட்சியை  விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,"அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?"என கேட்டாராம் 

அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் .அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர் 

சட்டமன்றம் முதல் முறை போனதும் நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள் என கேட்டார் அண்ணா 

காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் 

பொடி  போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் .அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ் 

அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது .தலைப்பிலை என தலைப்பு தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு 

எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டாராம் 

 சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் .அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு  காட்டியது 

தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் ,காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது மத்தியில் ஒருவர் மந்திரி ஆவது போனதே என வருந்துகிறார் .அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதலவர் என்ற பொழுது ,"வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் "என்று அப்பாவியாக சொன்னார் 

''எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என இமேஜ் பார்க்காமல் சொன்னவர் 

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என பெயர மாற்றம் பண்ணினார் ;கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் .

சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை 


தமிழில் சாருகேசி விகடன் பிரசுர வெளியீடு 

ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடு
”எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது” என இமேஜ் பார்க்காமல் சொன்னவர்
சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என பெயர மாற்றம் பண்ணினார் ;கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் .
சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை
Photo: THE LIFE AND TIMES OF C.N.ANNADURAI என்கிற அற்புதமான நூலை படித்து முடித்தேன் .அண்ணா என்கிற சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கையை முழுமையாக ஆதாரப்பூர்வமாக ஆராதனை தொனி இல்லாமல் விமர்சகர்களின் பார்வையையும் சேர்த்து இந்நூல் பதிவு செய்திருக்கிறது .அதில் என்னை ஈர்த்த அண்ணாவை பற்றிய பதிவுகள் மட்டும் இங்கே 

அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ;அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்கு தெரியாது ; முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள்
யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்

பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்கு கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா என சொல்லி அதை கண்ணீர் துளிகள் என்று மாற்றினார் 

முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போடா காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார் 

திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை ;பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தை சுமப்பது வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION.பத்திர்க்கைகள் DMK என குறிப்பிட அப்படியே ஆகிப்போனது 

''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல்
இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.


அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார் ;பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் .NUISANCE என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் .

உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்து கடுஞ்சொல் சொன்னதில்லை ;இவர்களின் விரல்களை வெட்டுவேன் என சொன்ன காமராஜரை குணாளா குலக்கொழுந்தே என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் தோழர் அண்ணாதுரை என பெயர் சொல்லி விளித்த பொழுது வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன் என்கிறார் 

சிவாஜி கட்சியை  விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,"அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?"என கேட்டாராம் 

அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிர தலைவர் இல்லை என சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது செயலாளர் பதவியை தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு கொடுத்திருக்கிறார் .அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி தேர்தலில் போட்டியிட்டவர் அவர் 

சட்டமன்றம் முதல் முறை போனதும் நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள் என கேட்டார் அண்ணா 

காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் என கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் 

பொடி  போடுவதை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் .அமெரிக்காவில் காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ் 

அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது .தலைப்பிலை என தலைப்பு தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு 

எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் என கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி என கேட்டாராம் 

 சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரை தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் .அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற அளவுக்கு கூட்டம் அவர் மீது அன்பு  காட்டியது 

தேர்தலில் வென்று விட்டோம் என சொல்கிறார்கள் ,காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது மத்தியில் ஒருவர் மந்திரி ஆவது போனதே என வருந்துகிறார் .அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதலவர் என்ற பொழுது ,"வெட்கத்தை விட்டு சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் "என்று அப்பாவியாக சொன்னார் 

''எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என இமேஜ் பார்க்காமல் சொன்னவர் 

சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என பெயர மாற்றம் பண்ணினார் ;கல்விக்கு காங்கிரசை விட ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் .

சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதை படித்துவிட்டு செத்துப்போகலாம் என்றாராம் உச்சபட்சமாக அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை 


தமிழில் சாருகேசி விகடன் பிரசுர வெளியீடு 

ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடு
தமிழில் சாருகேசி விகடன் பிரசுர வெளியீடு
ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடு

மிருகங்கள் ஒவ்வொரு முனையிலும் பாய காத்திருக்கின்றன
தடதடக்கும் தண்டவாள வண்டியை போல பீதியில் கழிகிறது என் காலம்
காற்றாட நடப்பதற்கு என் கால்கள் மறுக்கின்றன
  யாவும் முடிந்த பின் போராளி அழைக்கப்படுகிறேன் ;
நைந்து போன அரசாங்க சுவரில் என்னைப்பற்றிய அவச்சொற்கள்
… கோர்க்கப்படுகின்றன
மெழுகுவர்த்திகளில் நியாய வெளிச்சம் தெரிவதாக குருடர்கள் குதூகலிக்கிறார்கள்
பாருங்கள் வார்த்தைகளை விடுவதில்லை நான்
படிக்க தெரிவதில்லை சுதந்திரம்,கற்பு எனும் உங்கள் அகராதியின் வரிகளை
வன்முறைகளை விரும்புவதில்லை நான்
துர்மரணங்களை வெறுக்கிறேன் நான்
பின் ஏன் நொறுக்கப்படுகிறேன்
தெரிந்தால் சொல்லுங்கள் !Photo
 

ஜன்னலின் ஓரம் காதல்களையும்
வீட்டுக்கு வெளியே கோபங்களையும்
முற்றத்தில் பால்யத்தின் பொழுதுகளையும்
தாழ்வாரத்தில் குதூகலத்தின் எச்சங்களையும்
தேக்கி வைத்திருக்கும் வீட்டோடு
கதைத்து இருக்கிறீர்களா என்றாவது ?


பிரிவினையும்,மாயக்கம்பள கடனும்
கதை சொல்லுங்கள் என்கிறாள் வானுலகின்   கடைசிவாரிசின் ஆணைக்காக …

மெதுவாக மென்சுருள் முடியின் ஊடாக உண்மைகளை உறங்கவிட்டு சொல்லப்பட்ட சங்கதிகள் இவை
இருட்டுக்கடையின் கூட்டத்துக்கு நடுவே  வியர்வை வழிய எப்பொழுதாவது வரும் அடுத்ததெரு பெயரில்லா நரிக்குறவ பிள்ளைக்கு அல்வா வாங்க எத்தனிக்கும் திருநெல்வேலி தாத்தா
நீச்சலே தெரியாத நெடுமர குழந்தைக்கு நீர்த்திவலைகளில் அன்பை தோய்த்து கடற்கரங்களில் வீணைமீட்டி அதனறுந்த நரம்பொன்றை வலம்புரி சங்கில் அடைத்து தரும்பொழுதில் தேவனாகும் நாகர்கோயில் யுவன்
ஏறாத கடையெல்லாம் சொல்லத்தெரியாத பெயரெல்லாம் சொல்லி சேமிப்பை தேர்தல்கால வாக்குறுதி போலகொட்டி கோயிலில் அழும் குட்டிக்கு பிடித்த பொம்மையை வாங்கி அன்போடு கண்ணீர் உகுக்கும் பிள்ளைப்பேறில்லாத சென்னை மாடிவீட்டு உலகன்னை
எங்கெங்கோ மரணமடையும் ஏதோ ஒரு சகோதரனுக்கு தன் பசியாலும்,கண்ணீராலும் உணர்வுக்கடிதம் எழுதும் எல்லாவூர் கால்கிலோ இதயத்தை கரைந்தோடும் வேலையில்லா வெள்ளந்தி அன்பன்கள்
குலுக்குங்கள் ஊரை எல்லாம் இப்பொழுது எனக்கதை கேட்ட தேவதை உலக மின்மினி உத்தரவு நாகர்கோயில் நாசிக் ஆகுக திருநெல்வேலி திருப்பதி ஆகலாம் சென்னை செகந்திராபாத் என உச்சரிக்கபடலாம்
அங்கேயும் அதே தாத்தானும்,தோழனும், அம்மாவும்,அன்பனும்   அன்புப்போர்வையை போர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் இருள்சூழ்ந்த வேற்றுமைக்குளிர் உலகம் முழுக்க
எல்லாரையும் காட்டிவிட்டு கேட்கவேண்டும் “பிரிச்சு விளையாடி என்னத்தை கண்டீர்கள் ? ” என்கிற  தலைமுறைக்கான கேள்வியை அரசியல்வாதிகளிடம் அதற்கான மாயக்கம்பளத்தை உங்கள் வீட்டு வாண்டுவிடம் இரவல் வாங்கித்தாங்கள்

கற்பழித்தலின் உடற்கூறு


டெல்லியில் பேருந்தில் காமுகர்களால் குதறப்பட்ட சகோதரி பூஜா அதற்குப்பின் எழுதிய  வலி தரும் கவிதை 😦 மொழிபெயர்க்கிற பொழுதே கலங்கின  கண்கள் 😦

எண்ணற்ற வழிகளில் ஒரு பெண்ணை நேசிக்கலாம் 101 வழிகளை  சொல்லும் புத்தகத்தின் 51 வது பக்கத்தை திறந்து படி
உன்னுடைய சிறிய,நலமிகுந்த இதயத்திற்கு … அவளை எப்படி பேருந்தில்,தொடர்வண்டியில் நிர்வாணப்படுத்தத வேண்டும் எனத் தெரியாவிட்டால் தெரிந்துகொள் இன்னமும் பலமிருப்பின் மிதிவண்டியில் செல்லும் மென் பெண்ணிடமும் இதை நீ செய்ய இயலும்
கூட்டாக நண்பர்களோடு இணைந்து புணர்தல் எப்படி என்றும்  எப்படி அவளின் அழுகுரலை அடக்குவது  எனவும் அருகே நிற்பவர்கள் தங்கள் பங்கிற்கு இந்த மாமிச வேட்டையில் பங்கு பெறுவது எப்படி எனவும் கண்டறி
அடுத்த பக்கத்தை நேரமிருந்தால் திருப்பு அப்பெண் உன் சகோதரியாக இருக்கும் நேரத்தில்   என்ன செய்ய வேண்டும் என விவரிக்கும் அப்பக்கத்தின் வரிகளை படித்துப்பார்

அழ ஆசையாக இருக்கிறது


கோப்பை விஷம் கொடுங்கள்
பாவிகளின் ரத்தத்தால் உதட்டை நிரப்பிக்கொண்டு
பேச மறுக்கப்பட்ட
அல்லது ஒடுக்கப்பட்ட
அலறல்களை என் மூச்சின் ஊடாக வழிந்தோட செய்ய
ஒரு கருவி தாருங்கள்
மரணத்திற்கும் வாழ்வுக்கும்
நடுவில் அவலம் வழிந்தோடும்
புகழ்ச்சி கீதங்களுக்கு கோப்பை விஷத்தை
பன்னீராக தெளிக்க சித்தம்
இவையெல்லாம் முடியாது என்றால்
அழ திராணியற்ற எல்லாருக்காகவும் அழ ஆசை
அழிந்து போன பிறருக்கான அழுகையை தருகிறீர்களா ?

காதல் கவிதைகள் எழுதுவதில்லை அவன் பேனா


உலர்ந்துபோன நீதியின்
கண்ணீருக்கு வண்ணம்தீட்ட
அவன் பேனா பயன்படலாம்
உறைந்துபோன சகோதரியின் உதிரத்தை
சேகரம் செய்ய அவன் பேனா
உதவலாம்
நீர் காய்ந்து மலடான பட்டாம்பூச்சியின்

கர்ப்பப்பையின்
ஆற்றாமையை அறுத்து காண்பிக்க
கத்தியாகலாம் அவன் பேனா
தூர்ந்து போன வீரத்தின்
மிச்சங்களை அருங்காட்சியகம் கொண்டு செல்ல
அவன் பேனா சாவியாகலாம்
விதிமுறையே இல்லாத பரமபதத்தில் அவன் பேனா
தாயக்கட்டை ஆகலாம்
ஓடாத கடிகார முள்ளின் துடிப்பை போல
தத்தி நடக்கும் அரசாங்க குதிரையின்
கால் புண்ணிற்கு களிம்பு பூச அவன் பேனா மை
பயன்படும் என நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்
ஏனோ
அவன் பேனா
காதல் கவிதைகள் எழுதுவதில்லை !