விலை போகுதல்
உண்மை என் கரங்களில் இருக்கிறது
பொய் என் கிரீடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது
புன்னகை பல்லில் இருந்து நழுவதற்கு முன்னமே
வன்மம் பாய்ந்து போர் செய்கிறது
காணாத கடவுளுக்கு கீதங்கள் பாடுமுன்னே
சாத்தானின் கச்சேரி களை கட்டிவிடுகிறது
உயிரை காத்த உத்தமர் என பல்லவி பாடுவதற்குள்
ரத்தம் குடித்த பெருங்கதைகள் உலகை உலுக்குகின்றன
ஜெயித்தேன் என்று சொல்லிவிடத்தான் ஒவ்வொருவரும்
ஆசைப்படுகிறார்கள்
ஆனால்,ஒவ்வொரு முறை ஜெயித்தேன் என்கிற பொழுதும்
தோற்றேன் என்று தான் கேட்கிறது காதுகளுக்கு !
விலை போகுதல் உலக வழக்கா என்ன ?