விக்ரம் சாராபாய் நினைவு தினம் இன்று !


விக்ரம் சாராபாய் என்கிற பெயரை உச்சரிக்கிற பொழுதே பெருமிதம் கொள்ளவேண்டும் ஒவ்வொரு இளைஞனும்,இந்திய தேசத்தின் கனவுகளை கட்டமைத்த இளைஞர் கூட்டத்தில் அறிவியல் துறையில் மாபெரும் முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். இவரின் திருமணத்தின் பொழுது இவர் வீட்டில் இருந்து கலந்து கொள்ள யாருமே இல்லை -வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக போராடி எல்லாரும் சிறை சென்று இருந்தார்கள் ,கேம்ப்ரிட்ஜில் படித்து முடித்து விட்டு சி.வி.ராமனிடம் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்த இவர் தன் ஆய்வுகளை காஸ்மிக் கதிர்களை சார்ந்து செய்தார்.

நாட்டிற்கு அறிவியல் சார்ந்த பார்வை தேவை என நேரு வாதிட்ட பொழுது இந்திய விண்வெளி கழகத்தை அமைத்தார் சாராபாய் ;அதற்காக தாராள நிதியை அரசிடம் இருந்து வாதாடிப்பெற்றார். பல்வேறு கனவுத்திட்டங்களுக்கான விதைகளை ஊன்றி,இளைஞர்களை அறிவியல் துறைக்கு வர ஊக்குவித்தார். ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் மறைவுக்கு பின் இந்திய அணுசக்தி துறைக்கான பொறுப்பையும் ஏற்று செயல்பட்டார் .கல்பாக்கத்தில் Faster Breeder Test Reactor (FBTR),கொல்கத்தாவில் சைக்ளோட்ரான் திட்டம், இந்திய யூரேனிய கழகம் ஆகியவற்றையும் உருவாக்கி சாதித்தார். தும்பாவில் ராக்கெட் ஏவுதளமும் இவரால் உருவாக்கப்பட்டது

இன்றைக்கு உலகஅளவில் கவனம் பெறும் இந்திய மேலாண்மை மையங்களுள் முதன்மையான ஐ.ஐ.எம். அகமதாபாத் இவரின் உருவாக்கமே. விண்வெளிப்பயணங்கள் மாதிரியான விலை மிகுந்த பயணங்கள் இந்தியா மாதிரியான ஏழை நாட்டுக்கு தேவையா என்கிற கேள்விக்கு இப்படி பதில் சொன்னார் சாராபாய் :

“முன்னேற்றப்பாதையில் தற்போது தான் பயணிக்க ஆரம்பித்திருக்கிற ஒரு தேசத்துக்கு விண்வெளிப்பயணம் தேவையா என்று வினாக்கள் எழும்புகின்றன. இரு வேறு எண்ணங்கள் இல்லாமல் உறுதியாக நாங்கள் இந்த பயணத்தை முன்னெடுத்து இருக்கிறோம். நிலவை நோக்கியோ,கோள்களை கண்டறியவோ,மனிதர்களை விண்ணுக்கு கொண்டு செல்லும் பணக்கார நாடுகளோடு போட்டி போடுவதற்கான கனவுகள் இல்லை இவை ! பொறியியல் மற்றும் விஞ்ஞான நுணுக்கங்களை சராசரி மனிதனின் சிக்கலை தீர்ப்பதிலும் ,சமூக பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் தான் இந்த கனவு அமைப்பு. உலக சமூகத்துக்கு எந்த வகையிலும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேசத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு அர்த்தமுள்ள பணியே இது !”

ஐம்பத்தி இரண்டு வயதில் மறைந்து போன இந்த தீர்க்கதரிசியின் கனவுகளின் வெற்றிகள் தான் இன்றைக்கு இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தியில் பெற்று இருக்கும் இடம் .அவரின் நினைவுநாள் இன்று

சோவியத் ரஷ்யா உடைந்த தினம் !


சோவியத் ரஷ்யா உடைந்த தினம் இன்று. இரண்டாம் உலகப்போருக்கு பின் சோவியத் ரஷ்யாவும்,அமெரிக்காவும் பல்வேறு முனைகளில் பல்வேறு தளங்களில் பனிப்போரை நடத்திக்கொண்டு இருந்தன . ஸ்டாலின் காலத்தில் 1930 களில் கோர்பசேவின் இரு தாத்தாக்களும் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சைபீரியாவுக்கு நாடு
கடத்தப்பட்டிருந்தனர் .

அப்பா அறுவடை இயந்திரம் இயக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் ; கோர்பசேவ் சட்டம் படித்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் . எளிய பின்னணியில் இருந்து வந்த இவர் மிகக்குறுகிய காலத்தில் ரஷ்யாவில் மூன்று மூத்த தலைவர்கள் மறையவே,ரஷ்ய புரட்சிக்கு பிந்தைய காலத்தில் பிறந்த கோர்பசேவ் வசம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பதவி வந்து சேர்ந்தது
.பதவிக்கு வந்த பொழுது இவருக்கு வயது 54 .

சில வெளிநாடுகளுக்கு கட்சிப்பணிகள் காரணமாக பயணம் போனார் . மேலும் மக்களுக்கு விடுதலை,ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துதல்,தேக்கமடைந்து இருந்த
பொருளாதாரத்தை சீர்திருத்துதல் ஆகியன அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆயின.பீர் மற்றும் வோட்காவின் மீதான விலையை ஏற்றினார் ;அதை மிகக்குறைந்த அளவிலேயே அரசாங்கம் உற்பத்தி செய்யும் என்றார் . மது கிடைக்காமல் மக்கள் வாடினார்கள் ;கள்ள சந்தை கொழிக்க ஆரம்பித்தது . இதனால் அரசுக்கு பில்லியன் டாலர்களில் நட்டம் உண்டானது ,28 வருடங்களாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவரை வீட்டுக்கு போங்க என அனுப்பி வைத்தார்

.அமெரிக்காவை நோக்கி நட்புக்கரம் நீட்டினார் ;அணு ஆயுத குறைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .கூடுதலாக ஆப்கானை விட்டு 28,000 வீரர்களை இழந்திருந்த சோவியத் படைகளை வெளியேற்றினார் . பெர்லின் சுவரை கடந்து மக்கள் போக ஆரம்பித்த பொழுது அமைதி காத்தார் .கிழக்கு ஐரோப்பாவில் தான் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்த பொழுது உலகமே கொஞ்சம் ஸ்தம்பித்து தான் போனது . அங்கே இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகள் அப்படியே சீட்டுக்கட்டு போல சரிந்தன .

எழுபது வருடங்களாக மறுக்கப்பட்ட பேச்சுரிமை,எழுத்துரிமையை மக்களுக்கு வழங்கினார் ;அரசாங்க அமைப்புகளை விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் கிடைத்தது . தனியார் நிறுவனங்களை முக்கியமான துறைகளில் களமிறக்கினார் ;ஆனால்,மக்கள் ஒரு வேலை உணவுக்கே அலைய வேண்டிய நிலை உண்டானது . ரேசன் முறையில் உலகப்போர் சமயம் போல சாப்பாடு போட வேண்டியதாயிற்று .ஜனநாயகத்தை அமைப்புகளில் கொண்டு வந்தார் ;போரிஸ் யெல்ஸ்டின் மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக உருவாகிக்கொண்டிருந்தார்

கருத்துரிமை கிடைத்ததும் எப்படியெல்லாம் மற்ற நாட்டு மக்களின் குரல் நசுக்கப்பட்டிருந்தது என அவர்களுக்கே புரிய ஆரம்பித்தது . அது வரை அடங்கி இருந்த தேசிய உணர்ச்சி எல்லா நாடுகளிலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது ;மக்கள் தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்தார்கள் . நிலைமை ரொம்பவும் மோசமாகி இவரே மூன்று நாள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். தங்களை சோவியத் யூனியனில் இருந்து விடுவித்து கொள்வதாக தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டன .

மண்டேலாவிடம் அவரின் தேசத்தைதாண்டி கவர்ந்த ஆளுமைகள் யார் என்று கேட்ட பொழுது ,”காந்தியை எல்லாரையும் நேசித்து அமைதி வழியில் இணைந்து செயல்படவைக்கும் வழியை சாதியப்படுத்தியதற்காக பிடிக்கும். எந்த கொள்கையினுள்ளே தான் இத்தனை காலமாக வாழ்ந்தோமே அந்த கொள்கையை உள்ளிருந்தே கேள்வி கேட்டு அதன் தவறுகளை ஒத்துக்கொண்டு மாற்றங்களை முன்னெடுத்த கோர்பசேவையும் பிடிக்கும்” என்றார் 

சோவியத் ரஷ்யா இதே தினத்தில் சிதறுண்டது . கோர்பசேவ் பதவியை விட்டு விலகினார் ;அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . எத்தனையோ பாடங்கள் இவர் வாழ்வில் இருந்து கற்க முடியுமென்றாலும் மிக முக்கியமானது இதுவாகத்தான் இருக்கக்கூடும் -நோயாளி அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லாத பொழுது கத்தியை வைத்தால் கோரமான மரணம் தான் முடிவில் கிட்டும்

ஜங்கிள் புக் ஜாலிதாத்தா கிப்ளிங் !


ரூட்யார்ட் கிப்ளிங் எனும் அற்புதமான கதைசொல்லி பிறந்தநாள் டிசம்பர் முப்பது. இந்தியாவில் விடுதலைக்கு முந்தி அவரின் பெற்றோர் இருந்தனர் ;இவர் மும்பையில் பிறந்தார் . பின்னர் இங்கிலாந்துக்கு இவரைக்கொண்டு போனார்கள். இங்கிலாந்தில் இருந்த ரூட்யார்ட் ஏரியின் அழகில் மயங்கி இவருக்கு அந்த பெயரை வைத்தார்கள் .

மீண்டும் பதினேழு வயதில் இந்தியா வந்தார் ;பத்திரிக்கைகளில் எண்ணற்ற கதைகள் எழுதினார் . காடுகள் ,மலைகள் என பல்வேறு இடங்களில் சுற்றினார் .அவர் வெளியிட்ட நூல்களில் ஒரு ஸ்வஸ்திக் சின்னமும்,யானை தாமரைப்பூ ஏந்தி இருப்பதும் இணைந்தே இருக்கும் .இந்தியாவில் ஸ்வஸ்திக் அதிர்ஷ்டத்தை உணர்த்தியதால் அதை பயன்படுத்தினார் ;நாஜிக்கள் அதையே முத்திரை ஆக்கியதும் அதை நீக்கி விட்டார் .

ஜங்கிள் புக் மற்றும் தி செகண்ட் ஜங்கிள் புக் இவற்றில் காட்டிலுள்ள மிருகங்கள் மனிதர்களை போலவே பேசி பல அற்புதமான கருத்துக்களை சுவாரஸ்யமாக சொல்லுமாறு வடிவமைத்தார் . இந்த புத்தகத்தை சாரணர் இயக்கத்தை உருவாக்கிய பேடன் பாவல் பயன்படுத்தினார். கிப்ளிங் அறிவியல் புனைகதைகளும் எழுதினார் ,நாவல்களும் எழுதி தள்ளினார் .ஒருமுறை இவர் இறந்துவிட்டதாக ஒரு பத்திரிக்கை தவறாக செய்தி வெளியிட ,”நல்லது ;உங்கள் சந்தாதாரர் லிஸ்டில் இருந்து என்னை எடுத்து விடுங்கள் “என பதில் அனுப்பினார் .

முதல் உலகப்போரில் மகன் இறந்த பிறகு உருக்குலைந்து போனார் ; பின் மீண்டு பல வீரர்களுக்கு நினைவு சின்னம் எழுப்பும் குழுவில் பணியாற்றினா. .இந்தியர்கள் மீது நல்ல அபிப்ராயம் இவருக்கு இல்லை ;”இந்தியர்கள் சுயாட்சியை ஏற்படுத்தி கொள்ள முடியாதவர்கள். அவர்கள் நான்காயிரம் வருடம் பழமையானவர்கள். சுயாட்சி பற்றியெல்லாம் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகப்பழமையானவர்கள். அவர்கள் வேண்டுவது சட்டம் ஒழுங்கு.அதை அளிக்க நாம் இருக்கிறோம். !” என்றார் 

.இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அவரின் பிறந்தநாள் இன்று. தோல்விகளால்,காயங்களால் வீழ்கிற எல்லாருக்கும் உத்வேகம் தருகிற கவிதையாக அவரின் if கவிதை திகழ்கிறது. அதையே இந்திய பாதுகாப்பு அகாடமியில் எழுதி வைத்திருக்கிறார்கள். அக்கவிதை : 

எல்லாரும் தோற்கையில் 
தோல்விக்கு நீதான் காரணம் என்று விமர்சனங்கள் 
உன்னை நோக்கி வீசப்படுகையில் 
தலை நிமிர்த்தி நீ நடப்பாய் என்றால் ; 
எல்லாரும் உன்னை சந்தேகிக்கையில்
நீ உன்னை நம்புவாய் என்றால் ; 
அவர்களின் அச்சங்களை ஆமோதிப்பாய் என்றால் 
காத்திருக்க உன்னால் முடியுமென்றால் ; 
காத்திருப்பதால் களைப்படைய மாட்டாயானால் 
பொய்கள் உன்னிடம் சொல்லப்பட்டாலும் 
நீ பொய்யால் எதிர்கொள்ள மாட்டாயெனில்
வெறுக்கப்பட்டாலும் வெறுப்பு உன்னை வெல்ல முடியாதெனில் 
நீ நல்லவனாக தெரியாவிடினும்,புத்திசாலியாக பேசாவிட்டாலும் 

நீ கனவுகள் கண்டால்,கனவுகள் உன் எஜமானன் ஆகவிட விட்டால் 
நீ சிந்தித்தால்,சிந்தனைகள் மட்டுமே குறிக்கோளாகவிடின் 
பெருவெற்றியை,பெருந்தோல்வியை சந்தித்தாலும் 
இரண்டையும் ஒன்றாக நடத்த முடியுமென்றால் 
நீ பேசிய உண்மையை 
பொய்யர்கள் திரித்து முட்டாள்களுக்கு
வலை விரிப்பதை தாங்குவாய் என்றால் ;
அத்தனையும் அர்ப்பணித்தவை கண்முன்னால் காணாமல் போகையில் 
இடிபாடுகளில் இருந்து மீண்டும் சேர்த்து,தேய்ந்த கருவிகளோடு கட்டுவிப்பாய் கனவுகளை என்றால் 

வெற்றிகளையெல்லாம் குவித்து 
புது சூதாட்டம் ஒன்றினில் முயன்று 
வீழ்வாயெனில்; வீழ்ந்த பின் முதலில் இருந்து முயல்வாய் எனின் 
தோல்வி பற்றி ஒரு மூச்சும் விடமாட்டாய் என்றால் 
உன் தருணங்கள் போய் வெகுகாலம் ஆனபின்னும் 
எல்லாமும் போனபின்னர் எதுவும் உன்னிடம் இல்லையென்றாலும் 
“விடாமல் இரு” எனும் இதயக்குரல் மட்டும் கேட்டு 
கொண்ட கனவுக்காக நன்னெஞ்சு,நரம்பு,நாடி செலுத்தி 
ஓயாமல் உழைப்பாய் எனின் 

கூட்டங்களோடு பேசினாலும் ; உன் குணநலனை காப்பாய் என்றால் 
அரசர்களோடு நடந்தாலும் எளிமைக்குணம் இழக்க மாட்டாய் எனின் 
எல்லா மனிதரும் முக்கியம் என்றாலும் யாரும் அதிமுக்கியமில்லை எனின் 
மன்னிக்க முடியா ஒரு நிமிடத்தை 
வேறெங்கோ ஓடிப்போகும் அறுபது நொடியால் நிறைப்பாய் எனின் 
உலகமும் அதில் உள்ளவையும் உன்னுடையவை 
வேறென்ன வேண்டும் நீ மனிதனனாய் மகனே 

ஜங்கிள் புக் ஜாலிதாத்தா கிப்ளிங் !


ரூட்யார்ட் கிப்ளிங் எனும் அற்புதமான கதைசொல்லி பிறந்தநாள் டிசம்பர் முப்பது. இந்தியாவில் விடுதலைக்கு முந்தி அவரின் பெற்றோர் இருந்தனர் ;இவர் மும்பையில் பிறந்தார் . பின்னர் இங்கிலாந்துக்கு இவரைக்கொண்டு போனார்கள். இங்கிலாந்தில் இருந்த ரூட்யார்ட் ஏரியின் அழகில் மயங்கி இவருக்கு அந்த பெயரை வைத்தார்கள் .

மீண்டும் பதினேழு வயதில் இந்தியா வந்தார் ;பத்திரிக்கைகளில் எண்ணற்ற கதைகள் எழுதினார் . காடுகள் ,மலைகள் என பல்வேறு இடங்களில் சுற்றினார் .அவர் வெளியிட்ட நூல்களில் ஒரு ஸ்வஸ்திக் சின்னமும்,யானை தாமரைப்பூ ஏந்தி இருப்பதும் இணைந்தே இருக்கும் .இந்தியாவில் ஸ்வஸ்திக் அதிர்ஷ்டத்தை உணர்த்தியதால் அதை பயன்படுத்தினார் ;நாஜிக்கள் அதையே முத்திரை ஆக்கியதும் அதை நீக்கி விட்டார் .

ஜங்கிள் புக் மற்றும் தி செகண்ட் ஜங்கிள் புக் இவற்றில் காட்டிலுள்ள மிருகங்கள் மனிதர்களை போலவே பேசி பல அற்புதமான கருத்துக்களை சுவாரஸ்யமாக சொல்லுமாறு வடிவமைத்தார் . இந்த புத்தகத்தை சாரணர் இயக்கத்தை உருவாக்கிய பேடன் பாவல் பயன்படுத்தினார். கிப்ளிங் அறிவியல் புனைகதைகளும் எழுதினார் ,நாவல்களும் எழுதி தள்ளினார் .ஒருமுறை இவர் இறந்துவிட்டதாக ஒரு பத்திரிக்கை தவறாக செய்தி வெளியிட ,”நல்லது ;உங்கள் சந்தாதாரர் லிஸ்டில் இருந்து என்னை எடுத்து விடுங்கள் “என பதில் அனுப்பினார் .

முதல் உலகப்போரில் மகன் இறந்த பிறகு உருக்குலைந்து போனார் ; பின் மீண்டு பல வீரர்களுக்கு நினைவு சின்னம் எழுப்பும் குழுவில் பணியாற்றினா. .இந்தியர்கள் மீது நல்ல அபிப்ராயம் இவருக்கு இல்லை ;”இந்தியர்கள் சுயாட்சியை ஏற்படுத்தி கொள்ள முடியாதவர்கள். அவர்கள் நான்காயிரம் வருடம் பழமையானவர்கள். சுயாட்சி பற்றியெல்லாம் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகப்பழமையானவர்கள். அவர்கள் வேண்டுவது சட்டம் ஒழுங்கு.அதை அளிக்க நாம் இருக்கிறோம். !” என்றார் 

.இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அவரின் பிறந்தநாள் இன்று. தோல்விகளால்,காயங்களால் வீழ்கிற எல்லாருக்கும் உத்வேகம் தருகிற கவிதையாக அவரின் if கவிதை திகழ்கிறது. அதையே இந்திய பாதுகாப்பு அகாடமியில் எழுதி வைத்திருக்கிறார்கள். அக்கவிதை : 

எல்லாரும் தோற்கையில் 
தோல்விக்கு நீதான் காரணம் என்று விமர்சனங்கள் 
உன்னை நோக்கி வீசப்படுகையில் 
தலை நிமிர்த்தி நீ நடப்பாய் என்றால் ; 
எல்லாரும் உன்னை சந்தேகிக்கையில்
நீ உன்னை நம்புவாய் என்றால் ; 
அவர்களின் அச்சங்களை ஆமோதிப்பாய் என்றால் 
காத்திருக்க உன்னால் முடியுமென்றால் ; 
காத்திருப்பதால் களைப்படைய மாட்டாயானால் 
பொய்கள் உன்னிடம் சொல்லப்பட்டாலும் 
நீ பொய்யால் எதிர்கொள்ள மாட்டாயெனில்
வெறுக்கப்பட்டாலும் வெறுப்பு உன்னை வெல்ல முடியாதெனில் 
நீ நல்லவனாக தெரியாவிடினும்,புத்திசாலியாக பேசாவிட்டாலும் 

நீ கனவுகள் கண்டால்,கனவுகள் உன் எஜமானன் ஆகவிட விட்டால் 
நீ சிந்தித்தால்,சிந்தனைகள் மட்டுமே குறிக்கோளாகவிடின் 
பெருவெற்றியை,பெருந்தோல்வியை சந்தித்தாலும் 
இரண்டையும் ஒன்றாக நடத்த முடியுமென்றால் 
நீ பேசிய உண்மையை 
பொய்யர்கள் திரித்து முட்டாள்களுக்கு
வலை விரிப்பதை தாங்குவாய் என்றால் ;
அத்தனையும் அர்ப்பணித்தவை கண்முன்னால் காணாமல் போகையில் 
இடிபாடுகளில் இருந்து மீண்டும் சேர்த்து,தேய்ந்த கருவிகளோடு கட்டுவிப்பாய் கனவுகளை என்றால் 

வெற்றிகளையெல்லாம் குவித்து 
புது சூதாட்டம் ஒன்றினில் முயன்று 
வீழ்வாயெனில்; வீழ்ந்த பின் முதலில் இருந்து முயல்வாய் எனின் 
தோல்வி பற்றி ஒரு மூச்சும் விடமாட்டாய் என்றால் 
உன் தருணங்கள் போய் வெகுகாலம் ஆனபின்னும் 
எல்லாமும் போனபின்னர் எதுவும் உன்னிடம் இல்லையென்றாலும் 
“விடாமல் இரு” எனும் இதயக்குரல் மட்டும் கேட்டு 
கொண்ட கனவுக்காக நன்னெஞ்சு,நரம்பு,நாடி செலுத்தி 
ஓயாமல் உழைப்பாய் எனின் 

கூட்டங்களோடு பேசினாலும் ; உன் குணநலனை காப்பாய் என்றால் 
அரசர்களோடு நடந்தாலும் எளிமைக்குணம் இழக்க மாட்டாய் எனின் 
எல்லா மனிதரும் முக்கியம் என்றாலும் யாரும் அதிமுக்கியமில்லை எனின் 
மன்னிக்க முடியா ஒரு நிமிடத்தை 
வேறெங்கோ ஓடிப்போகும் அறுபது நொடியால் நிறைப்பாய் எனின் 
உலகமும் அதில் உள்ளவையும் உன்னுடையவை 
வேறென்ன வேண்டும் நீ மனிதனனாய் மகனே 

ரோமைன் ரோலாண்ட் எனும் மனிதநேயர் !


ரோமைன் ரோலண்ட் எனும் மாபெரும் மனிதநேயர் மறைந்த தினம் டிசம்பர் முப்பது. பிரான்ஸ் தேசத்தில் 1844 இல் பிறந்த இவர் தத்துவத்தில் பட்டம் பெற்றார் ; ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கினார் .எனினும் காலப்போக்கில் ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு உண்டானது ; மாணவர்களை அரட்டி,உருட்டி மிரட்டும் அது அவரின் கனிவான சுபாவத்துக்கு ஒத்துவராத பண்பாக இருந்தது .வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார் .அவரின் ஆரம்பகால நாடகங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை ;அவரை டால்ஸ்டாயின் எழுத்து ஈர்த்தது ;பீத்தோவனின் இசைக்கோர்வை அவரை ஈர்த்தது ;ஓயாத உழைப்புக்காரர் ஆன மைக்கேலாஞ்சேலோவும் தான் . மூவரின் வாழ்க்கை வரலாற்றையும் அற்புதமான நூல்கள் ஆக்கினார் .

அவருக்கு இந்தியாவின் ஆன்மீகத்தின் மீது காதல் வந்தது ;இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார் .தாகூரை அவர் அவர் தேசத்தில் சந்தித்த பொழுது ,”நீங்கள் விவேகானந்தரை படித்தால் இந்தியாவை புரிந்துகொள்ளலாம் என சொல்லப்படவே இவர் அவரின் நூல்களை வாசிக்க ஆவல் கொண்டார் .இவருக்கு ஆங்கிலம் தெரியாது ;பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தன . இவரின் சகோதரியின் உதவியோடு அவற்றை படித்து நெகிழ்ந்து போனார் .The Life of Ramakrishna and Vivekananda’s Life and Gospels.என்கிற அற்புதமான நூலை எழுதினார் .

ரோலண்ட் குறுகிய மனப்பான்மை கொண்டு நாடுகள் சண்டைப்போடுவதை கண்டு மனம் நொந்தார் . இரண்டு வெவ்வேறு துருவங்கள் எனக்கருதப்படும் மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா என கேள்வி எழுப்பிக்கொண்டார் . அதை JEAN-CHRISTOPHE என்கிற தன் நாவலுக்கு கருப்பொருள் ஆக்கினார் ; கதையின் நாயகன் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞன் அவன் இக்கட்டான சூழல்களிலும் பிரான்ஸ் தேசத்து இளைஞன் ஒருவன் மீது நட்பு பாராட்டுகிறான் -நாடுகளை கடந்து அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என அடித்து சொன்ன ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது 


காந்தியை மிகவும் நேசித்தார் ;அவரை சந்தித்த பொழுது காந்தி தன்னை முத்தமிட்ட தருணத்தை புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின் முத்தத்தோடு ஒப்பிட்டு சிலாகித்தார் .காந்தியை பெரும்பாலும் நம் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட ஒரு ஜீவனாக மட்டுமே பார்க்கிறோம் ;ஆனால்,ரோலண்ட் அப்படி பார்க்கவில்லை,உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கிற ஒரு மனிதராக தான் அவரை அவர் பதிவு செய்கிறார் .;காந்தியை பற்றிய இவரின் நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று ;உலகமே பாசிசம் கண்டு அஞ்சிக்கொண்டு இருந்த பொழுது இவர் வன்முறையின்மையை (PACIFISM )காந்தியின் வழியில் வலியுறுத்தினார் .

ரோமைன் ரோலாண்ட் எனும் மனிதநேயர் !


ரோமைன் ரோலண்ட் எனும் மாபெரும் மனிதநேயர் மறைந்த தினம் டிசம்பர் முப்பது. பிரான்ஸ் தேசத்தில் 1844 இல் பிறந்த இவர் தத்துவத்தில் பட்டம் பெற்றார் ; ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கினார் .எனினும் காலப்போக்கில் ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு உண்டானது ; மாணவர்களை அரட்டி,உருட்டி மிரட்டும் அது அவரின் கனிவான சுபாவத்துக்கு ஒத்துவராத பண்பாக இருந்தது .வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார் .அவரின் ஆரம்பகால நாடகங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை ;அவரை டால்ஸ்டாயின் எழுத்து ஈர்த்தது ;பீத்தோவனின் இசைக்கோர்வை அவரை ஈர்த்தது ;ஓயாத உழைப்புக்காரர் ஆன மைக்கேலாஞ்சேலோவும் தான் . மூவரின் வாழ்க்கை வரலாற்றையும் அற்புதமான நூல்கள் ஆக்கினார் .

அவருக்கு இந்தியாவின் ஆன்மீகத்தின் மீது காதல் வந்தது ;இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார் .தாகூரை அவர் அவர் தேசத்தில் சந்தித்த பொழுது ,”நீங்கள் விவேகானந்தரை படித்தால் இந்தியாவை புரிந்துகொள்ளலாம் என சொல்லப்படவே இவர் அவரின் நூல்களை வாசிக்க ஆவல் கொண்டார் .இவருக்கு ஆங்கிலம் தெரியாது ;பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தன . இவரின் சகோதரியின் உதவியோடு அவற்றை படித்து நெகிழ்ந்து போனார் .The Life of Ramakrishna and Vivekananda’s Life and Gospels.என்கிற அற்புதமான நூலை எழுதினார் .

ரோலண்ட் குறுகிய மனப்பான்மை கொண்டு நாடுகள் சண்டைப்போடுவதை கண்டு மனம் நொந்தார் . இரண்டு வெவ்வேறு துருவங்கள் எனக்கருதப்படும் மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா என கேள்வி எழுப்பிக்கொண்டார் . அதை JEAN-CHRISTOPHE என்கிற தன் நாவலுக்கு கருப்பொருள் ஆக்கினார் ; கதையின் நாயகன் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞன் அவன் இக்கட்டான சூழல்களிலும் பிரான்ஸ் தேசத்து இளைஞன் ஒருவன் மீது நட்பு பாராட்டுகிறான் -நாடுகளை கடந்து அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என அடித்து சொன்ன ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது 


காந்தியை மிகவும் நேசித்தார் ;அவரை சந்தித்த பொழுது காந்தி தன்னை முத்தமிட்ட தருணத்தை புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின் முத்தத்தோடு ஒப்பிட்டு சிலாகித்தார் .காந்தியை பெரும்பாலும் நம் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட ஒரு ஜீவனாக மட்டுமே பார்க்கிறோம் ;ஆனால்,ரோலண்ட் அப்படி பார்க்கவில்லை,உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கிற ஒரு மனிதராக தான் அவரை அவர் பதிவு செய்கிறார் .;காந்தியை பற்றிய இவரின் நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று ;உலகமே பாசிசம் கண்டு அஞ்சிக்கொண்டு இருந்த பொழுது இவர் வன்முறையின்மையை (PACIFISM )காந்தியின் வழியில் வலியுறுத்தினார் .

நானோ தந்த நாயகன்


நானோ தொழில்நுட்பம் எனும் துறை உருவாவதற்கான வித்தை போட்டவர் ரிச்சர்ட் ஃபெய்ன்மான் . யூதக்குடும்பத்தில் பிறந்த இவர்,இளம் வயதிலேயே மத நம்பிக்கை இல்லாதவராக வளர்க்கப்பட்டார் ,பேசும் திறன் இவருக்கு மூன்று வயது வரை கிட்டாது இருந்ததால் இவருடன் தொடர்ந்து இவரின் தந்தை பேசிக்கொண்டே இருப்பார் . வீட்டில் இருந்தே இவர் கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை கற்றுத்தேர்ந்தார் .

கொலும்பியா பல்கலைகழகத்துக்கு விண்ணப்பம் போட்டால் போ வெளியே என நிராகரித்து விட்டார்கள் . எம் ஐ டியில் சேர்ந்தார் ;இயற்பியலின் அத்தனை துறையிலும் சேர்ந்து பாடம் கற்றார் வரலாறு,ஆங்கிலம் இரண்டும் மனிதரை பாடாய் படுத்தின ; இரண்டிலும் கஷ்டப்பட்டு பாஸ் ஆனார் . அவர் முனைவர் பட்டத்துக்காக எடுத்துக்கொண்ட தலைப்பின் விளைவாக மின்னியக்கவிசையியலின் முக்கிய தத்துவமான வீலர்-ஃபெய்ன்மான் உட்கவர் தத்துவம் உருவானது .மனிதர் ஏகத்துக்கும் குறும்புக்காரர் .

அணுகுண்டை உருவாக்கிய மன்ஹட்டன் திட்டத்தில் பணியாற்றிய பொழுது சில குறிப்புகளை சங்கேத மொழியில் அங்கங்கே விட்டு சகாக்களை முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க வைப்பார் .இதனால் பலபேர் உளவாளி யாரோ நுழைந்து விட்டதாக பீதியாகி எல்லாம் இருக்கிறார்கள் .அணுகுண்டு வெடித்ததும் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளானார் ;இத்தனை உயிர்கள் இறந்து விட்டதே என்கிற கவலை அவருக்கு தான் வேலை பார்த்த பல்கலைகழகம் வேலைக்கு வர சொன்ன பொழுது அவர் போகாததால் வேலையும் போனது . 

அதற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார் குவாண்டம் மின்னியக்கவிசையியலின் மீது அவரின் ஆர்வம் மீண்டும் பொங்கியது ;ஃபெய்ன்மான் வரைபடங்களை உருவாக்கினார் ;அவற்றை இன்டக்ரல் பாதை தொகுப்பின் கொண்டு வரையறுத்தார் .அவற்றைக்கொண்டு இணை அணு துகள்களின் இடையே நடக்கும் உள்வினைகள் பற்றி துல்லியமாக விளக்கினார் .இதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது . அவருக்கு அப்பொழுது வயது 38 !

ஹீலியம் மிகக்குறைந்த வெப்பநிலையில் பாகுநிலை இல்லாத சூப்பர் திரவத்தன்மையை ஏன் கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார் .பாதை இன்டக்ரல்களை துல்லியமாக கணிக்கும் தத்துவத்தை இவர் உருவாக்கி தர அது செயற்கைக்கோள் செலுத்துதலை மிக துல்லியமானதாக ஆக்கிற்று .1959 இல் .”There’s plenty of room in the bottom “எனும் இவரின் புகழ்பெற்ற உரை நானோ தொழில்நுட்பத்துக்கான கதவுகளை திறந்து விட்டது . தன்னை அறிவியலின் மகத்தான பிள்ளைகளில் ஒருவராக தன்னைக்கருதிக்கொண்ட அவர் மதம் சார்ந்தோ,இனம் சார்ந்தோ தன்னை குறிப்பதை எதிர்த்தார் .நான் மனிதன் என்றார் அவர். அவரின் “There’s plenty of room in the bottom ” உரை நிகழ்த்தப்பட்ட தினம் இன்று .

மலிவு விலை விமான சேவையை சாத்தியமாக்கிய கோபிநாத் கதை


கேப்டன் கோபிநாத்தின் ‘simply fly’ நூலை வாசித்து மெய்மறந்து போனேன். இந்தியாவில் விமானப்பயணம் என்பதை எளியவர்களுக்கும் சாதியப்படுத்திய அவரின் சுவை மிகுந்த பயணம் இது. ஒரு தன்னம்பிக்கை நூல் என்பதை விட கிராமத்து இளைஞன் ஒருவன் எப்படி ஒரு பில்லியன் டாலர் கம்பெனியை நேர்மையோடு சாதித்தார் என்பதை நாவலைப்போல காட்டும் இந்நூலை வேகமாக படித்துவிட முடியும்.

முதலில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிவிட்டு அங்கு நேர்ந்த விபத்தால் விவசாயம் செய்யலாம் என்று ஊருக்கு திரும்பிய அவருக்கு பட்டுப்புழு வளர்ப்பு,தேங்காய் வளர்ப்பு என்று கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை, நடுவில் உடுப்பி ஹோட்டலை வாங்கி நடத்துகிறார். அங்கே ஹோட்டல் நடக்க விடாமல் மற்ற முதலாளிகள் சதி செய்ததும் திருமண சமையல்காரர்களை கொண்டு ஹோட்டலை ஆரம்பிக்கிறார்.

ஒரு கட்டத்துக்கு பிறகு வாழ்க்கையில் ஒரு தொய்வு ஏற்படுவதை சிசிபஸ் பற்றி காம்யூ சொன்னதோடு ஒப்பிடுகிறார். சிசிபஸ் கற்களை மலை உச்சி வரை கொண்டு போய் மீண்டும் கீழே தள்ளிக்கொண்டே இருக்கிறான் அவன். எதற்கு செய்கிறான் என்று யோசிக்காமலே கழியும் காலம் அவனுடையது. அதைப்போல தானும் இருப்பதாக உணர்கிறார். நடுவில் தேர்தலில் பிஜேபி சார்பாக போட்டியிடுகிறார். அப்பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட இடத்தில்,நேரத்தில் தேவகவுடா பிரச்சாரத்துக்கு வர கம்பீரமாக தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுப்பேன் என்று சொல்லி அவரை அங்கிருந்து வெளியேற்றி சாதித்துவிட்டு ,’நம்மிடம் தைரியமும்,உண்மையை உரக்க சொல்லும் பண்பிருந்தால் சாதிக்க முடியும் !’ என்று பதிவு செய்கிறார்.

விமான சேவையை துவங்க அவருக்கு உந்துதல் விமானப்படையில் பணியாற்றி காயமுற்று கொரியர் நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்த சாம் எனும் தோழரின் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்கிற வரிகள் ! வியட்நாமின் நேப்பாம் குண்டில் குடும்பம் இழந்து நிர்வாணமாக ஓடிய சிறுமியின் புகைப்படமே பலருக்கு தெரியும் . அந்த பெண் மீண்டும் தன் நாட்டுக்கு வந்து ஹெலிகாப்டர் சேவையை துவங்கி நாட்டில் [பல இடங்களை இணைத்து சாதித்தது கோபிநாத்துக்கு உத்வேகம் தந்தது.

முதலில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவதை தான் செய்ய முனைகிறார். அவரின் நம்பிக்கைக்கு சான்ஸ் நிகழ்வுகள் என சோமர்செட் மாம் சொல்கிற திருப்புமுனைகள் கைகொடுக்கின்றன. முதலீடுகள் வருகிறது,ஓயாமல் அரசாங்க கதவுகளை தட்டுகிறார். நிதி மேலாண்மை ஆலோசகர் சம்பளமே கேட்காமல் ஐந்து வருடங்கள் நம்பிக்கையோடு வழிகாட்டுகிறார். லஞ்சம் தராமல் பிரதமர் அலுவலகத்தில் இருந்த நண்பருக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் தனியாருக்கு அனுமதி பெறுவதை சாத்தியப்படுத்துகிறார். 
வெளிநாட்டில் இருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் பெரிய அளவில் சாதிக்கின்றன. இன்ஸ்டன்ட் ஹிட் அடிக்கின்றன

கோல்ட்ஸ்மித் வரிகளை சொல்கிறார் அப்பொழுது ,”நேர்மையாக ஒரு குடும்பத்தை உருவாக்கி அதை வளர்க்கிற குடும்பத்தலைவன் திருமணமே செய்துகொள்ளாமல் மக்களைப்பற்றி குறை சொல்பவனை விட மேலானவன் !” என்று. ஹெலிகாப்டரில் திருமணம் செய்ய அனுமதித்து ஓசி விளம்பரம் தேடுகிறார். கிரிக்கெட் போட்டியின் பொழுது பயன்படுத்த ஹெலிகாப்டர் கொடுத்து டிவியில் நிறுவனப்பெயர் வர வைத்து சாதிக்கிறார்.

குறை சொல்வதை விடுத்து காரியத்தில் இறங்கிய அவர் அடுத்ததாக ஓகில்வி சொன்னதை செய்கிறார். மாட்ரியோஷ்க்கா எனும் ரஷ்ய பொம்மையினுள் திறக்க திறக்க குட்டி குட்டி பொம்மைகள் இருக்கும். “உங்களை விட சிறியவர்களை சேர்த்தல் நீங்கள் காணாமல் போவீர்கள் ; பெரியவர்களை சேர்த்துக்கொண்டு இணைகிற பொழுது இன்னமும் ஆச்சரியங்கள்,வளர்சிகள் இயல்பாக சாத்தியம் என்கிற அவரின் கோட்பாட்டை இணைத்து அற்புதமான எதிர்க்கருத்து சொல்பவர்களை இணைத்து எளியவர்களுக்கான விமான சேவையை உருவாக்க நகர்கிறார்.

இரண்டு வருடங்களாக கோப்பு அதிகாரிகளின் இழுத்தடிப்பால் தேங்கி நிற்கிறது. குலாம் நபி ஆசாத்தை நேரில் சந்தித்து தன்னுடைய தரப்பை பல மாத காத்திருப்புக்கு பின்னர் சொன்னதும் உடனே அனுமதி வாங்குகிறார். சிக்கலை உண்டு செய்யக்கூடும் என்று கருதப்பட்ட விமானத்துறை அமைச்சர் இப்ராஹிமையே துவக்க விழா சிறப்பு விருந்தினர் ஆக்குகிறார். பெரிய ஊர்களில் விமான சேவை என்றால் பெரிய நிறுவனங்கள் டெக்கான் ஏவியேசன் என்கிற தன்னுடைய நிறுவனத்தை காலி செய்துவிடும் என்று குட்டி குட்டி ஊர்களை மட்டும் குறிவைக்கிறார்.

இவரின் எளியவர்களுக்கு விமான சேவை என்கிற கான்செப்ட் சுண்டி இழுக்க ராஜீவ் கொட்டியால் என்கிற உலக அளவில் சிறந்த பைலட் கிளம்பி வருகிறார். கூடவே எப்படி இது சாத்தியம் என்று கேட்பவர்களிடம் ,”உடுப்பி ஹோட்டலை போல சர்வர் வைக்காமல்,உட்கார்ந்து வெட்டியாக கழிக்க நேரம் தராமல் \குறைவான செலவில் நிறைவான உணவை தருவதைப்போல தான் இதுவும் !” என்று கோபிநாத் சொல்ல சாத்தியமில்லை என்று சிரிக்கிறார்கள் மற்றவர்கள்.

விமானத்தில் சீட்களை அதிகப்படுத்துகிறார், இடைத்தரகர்களை ஒழித்து e டிக்கெட்களை கொண்டுவருகிறார். விமானத்தில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தி வித்தியாசம் காட்டுகிறார். ஏர் ஹாஸ்டஸ்களை நடுத்தர குடும்பங்களில் இருந்து தெரிவு செய்வது,உணவுகளை கபே டே நிறுவனத்தை சப்ளை செய்ய விட்டது,போஸ்ட் ஆபீஸ்,பெட்ரோல் பங்க்குகளில் டிக்கெட் விற்பனை,லக்ஷ்மனின் காமன் மேன் சித்திரத்தின் மூலம் விளம்பரம் என்று தூள் பண்ணியது. முன்னாடியே புக் செய்தால் தள்ளுபடி என்பது போட்டிகளை குறுக்கியது. கிராமத்து பெண்கள் தொடங்கி எளியவர்கள் எல்லாரும் விமானப்பயணத்தை சாத்தியமாக்கி கொண்டார்கள். சிந்தி பழங்குடியின மக்கள் அங்கே பயணம் செய்த தருணத்தை நெகிழ்வோடு குறிக்கிறார் கோபிநாத் 

சி.கே.ப்ரகாலாத் சொல்வது போல பிரமிடின் அடிமட்டத்தில் உள்ள மக்களைக்கண்டு கொண்டு அவர்களின் மூலம் பொருளாதார வாய்ப்புகளை சாதிக்க முடியும்,வேண்டும் ! என்று ஊக்கம் பொங்க நிரூபித்த கோபிநாத் வெறும் ஏழாயிரம் ரூபாய் சேமிப்போடு தன் கனவுகளை துவங்கினார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். டென்னிசனின் கவிதையோடு நூல் முடிகிறது 

“அதே பழைய பலமில்லை இப்பொழுது 
நிலமும்,நீள் சொர்க்கமும் இடையே நாம் நாமே நாம் நாமே !
வீரர்களின் இதயத்தின் பொறுமையெல்லாம் 
காலமும்,கொடுவிதியும் கரைத்தாலும் 
கலங்காத உள்ளம் உண்டு நமக்கு 
போராடுவோம்,தேடிடுவோம்,அறிந்திடுவோம்,என்றும் வீழமாட்டோம் !

collins business வெளியீடு 
ஐநூறு ரூபாய் 
370 பக்கங்கள்

 

 

 

 

கலைக்க சொன்ன காந்தி,கரைத்த இந்திரா-காங்கிரஸ் கதை இது !


இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினமிது ; 1885 இல் ஆலன் ஆக்டேவியன் ஹீயும் மற்றும் யுமேஷ் சந்திர பானர்ஜி முதலிய பல தலைவர்கள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் . மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது .டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானதும் , ஹீயும் மற்றும் அவருக்கிடையே நடந்த கடித போக்குவரத்துகளால் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வால்வு போல செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது ;ஆனால் அதற்கு பதிய ஆதாரமில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் .

முதலில் வேண்டுகோள்கள்,விண்ணப்பங்கள்,தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக்கொண்டு இருந்தது மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்த பொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் .ஆனால்,அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு செய்தது . வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடித்துக்கொள்ள வேண்டுமா என்கிற பிரச்சனையில் தீவிரவாதிகள்,மிதவாதிகள் (கோகலே தலைமையில் ஆன குழுவும் உடைந்தது ; பின் மீண்டும் இணைந்தார்கள் .அரவிந்தர் மற்றும் திலகரின் மதவாத அரசியலை இந்திய அரங்கிலிருந்து நீக்கி அதை எல்லா மக்களுக்கான அரசியல் கட்சியாக காந்தி மாற்றினார் .

படித்தவர்களை மட்டுமே சென்றடைந்து இருந்த காங்கிரசை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் . நாலணாவாக கட்சி உறுப்பினர் நிதி குறைக்கப்பட்டது எண்ணிக்கையை மிகவும் அதிகப்படுத்தியது. தேர்தலில் நிற்க எண்ணிய 1919 மாண்டேகு செம்ஸ்போர்ட் தீர்மானம் தந்த உத்வேகத்தில் ஆட்சிபீடத்தை பிடித்து காங்கிரசில் இருந்து விலகிய சுயராஜ்ய கட்சி ஆட்சி அமைத்தது ;அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை . போஸ் பூரண சுதந்திரம் வேண்டும் அதிரடி திட்டங்களே உதவும் என சொல்லி காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்தார். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை . ‘என்னுடைய திட்டத்தை மூத்த தலைவர்கள் செயல்படுத்தட்டும் !” என்றார் போஸ். அவர் செயல்படுத்தட்டும் நாங்கள் எல்லாம் விலகி நிற்கிறோம் என்றார்கள் மற்றவர்கள். காந்தி பக்கம் நிற்பவர்கள் எல்லாரையும் வலதுசாரிகள் என்று அவர் சொன்னது இன்னமும் சிக்கலை அதிகப்படுத்தியது. விலகினார் அவர் .

பின் நேரு ,படேல் ஆகியோரின் கை ஓங்கியது .1947 இல் விடுதலை கிடைத்ததும் காங்கிரசை கலைத்து விடவேண்டும் . விடுதலைக்கு பாடுபட்ட பலர் இப்பொழுது வெவ்வேறு தளங்களில் நின்று போராட முடியாமல் விடுதலைக்கு போராடிய கட்சி என்கிற பிம்பம் காங்கிரசை அதிகாரம் பெற்ற வெற்றிக்கட்சியாக்கி விடும் என காந்தி சொன்னார் . கேட்கவில்லை இவர்கள் . படேல் நேரு இருவருக்கும் இடையே மோதல் மூண்டன. கட்சியின் கட்டுப்பாடு படேலிடமே இருந்தது. அவர் இறந்ததும் கட்சி நேரு வசம் வந்தது. 


நேருவுக்கு பின் சாஸ்திரியை காமராஜர்-நிஜலிங்கப்பா முதலிய சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். வந்தார் . அடுத்து வந்த இந்திரா -காங்கிரசை மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட பிணக்கில் உடைத்தார் . உட்கட்சி ஜனநாயகத்தை அப்படியே காணாமல் போக வைத்தார். “நீங்கள் சொன்னால் எங்கேயும் பெருக்க கூட நான் தயார் !” என்று ஒரு தலைவர் சொல்கிற அளவுக்கு விசுவாசம் கொடி கட்டிப்பறந்தது. காங்கிரஸ் தான் இந்திரா,இந்திரா தான் காங்கிரஸ் என்றானது. காங்கிரஸ் இரண்டாக உடைந்தது . காளைமாடு சின்னம் காணாமல் போனது. 

பின் எமர்ஜென்சி சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் உண்டாயின . அதற்கு பிறகு கட்சி பெரிய அளவில் பிரிவினை இல்லாமல் இருந்த பொழுது வங்கத்தில் மம்தாவும் ,மகாராஷ்ட்ராவில் சரத் பவாரும் கட்சியை உடைத்தார்கள் . ஆட்சியை இழந்த காலத்தில் இருந்து கட்சியை மீட்டெடுத்து சோனியா சாதித்தார். மொத்தம் பதினொரு ஆண்டுகள் மட்டுமே பிறகட்சிகள் ஆண்ட பொழுது நாட்டை மீதிகாலமெல்லாம் ஆண்ட காங்கிரசின் வரலாறும் இந்திய வரலாறும் பிரிக்க முடியாததும் உண்மை .

கலைக்க சொன்ன காந்தி,கரைத்த இந்திரா-காங்கிரஸ் கதை இது !


இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினமிது ; 1885 இல் ஆலன் ஆக்டேவியன் ஹீயும் மற்றும் யுமேஷ் சந்திர பானர்ஜி முதலிய பல தலைவர்கள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் . மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது .டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானதும் , ஹீயும் மற்றும் அவருக்கிடையே நடந்த கடித போக்குவரத்துகளால் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வால்வு போல செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது ;ஆனால் அதற்கு பதிய ஆதாரமில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் .

முதலில் வேண்டுகோள்கள்,விண்ணப்பங்கள்,தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக்கொண்டு இருந்தது மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்த பொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் .ஆனால்,அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு செய்தது . வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடித்துக்கொள்ள வேண்டுமா என்கிற பிரச்சனையில் தீவிரவாதிகள்,மிதவாதிகள் (கோகலே தலைமையில் ஆன குழுவும் உடைந்தது ; பின் மீண்டும் இணைந்தார்கள் .அரவிந்தர் மற்றும் திலகரின் மதவாத அரசியலை இந்திய அரங்கிலிருந்து நீக்கி அதை எல்லா மக்களுக்கான அரசியல் கட்சியாக காந்தி மாற்றினார் .

படித்தவர்களை மட்டுமே சென்றடைந்து இருந்த காங்கிரசை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் . நாலணாவாக கட்சி உறுப்பினர் நிதி குறைக்கப்பட்டது எண்ணிக்கையை மிகவும் அதிகப்படுத்தியது. தேர்தலில் நிற்க எண்ணிய 1919 மாண்டேகு செம்ஸ்போர்ட் தீர்மானம் தந்த உத்வேகத்தில் ஆட்சிபீடத்தை பிடித்து காங்கிரசில் இருந்து விலகிய சுயராஜ்ய கட்சி ஆட்சி அமைத்தது ;அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை . போஸ் பூரண சுதந்திரம் வேண்டும் அதிரடி திட்டங்களே உதவும் என சொல்லி காந்தியின் வேட்பாளரையே தோற்கடித்தார். கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை . ‘என்னுடைய திட்டத்தை மூத்த தலைவர்கள் செயல்படுத்தட்டும் !” என்றார் போஸ். அவர் செயல்படுத்தட்டும் நாங்கள் எல்லாம் விலகி நிற்கிறோம் என்றார்கள் மற்றவர்கள். காந்தி பக்கம் நிற்பவர்கள் எல்லாரையும் வலதுசாரிகள் என்று அவர் சொன்னது இன்னமும் சிக்கலை அதிகப்படுத்தியது. விலகினார் அவர் .

பின் நேரு ,படேல் ஆகியோரின் கை ஓங்கியது .1947 இல் விடுதலை கிடைத்ததும் காங்கிரசை கலைத்து விடவேண்டும் . விடுதலைக்கு பாடுபட்ட பலர் இப்பொழுது வெவ்வேறு தளங்களில் நின்று போராட முடியாமல் விடுதலைக்கு போராடிய கட்சி என்கிற பிம்பம் காங்கிரசை அதிகாரம் பெற்ற வெற்றிக்கட்சியாக்கி விடும் என காந்தி சொன்னார் . கேட்கவில்லை இவர்கள் . படேல் நேரு இருவருக்கும் இடையே மோதல் மூண்டன. கட்சியின் கட்டுப்பாடு படேலிடமே இருந்தது. அவர் இறந்ததும் கட்சி நேரு வசம் வந்தது. 


நேருவுக்கு பின் சாஸ்திரியை காமராஜர்-நிஜலிங்கப்பா முதலிய சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். வந்தார் . அடுத்து வந்த இந்திரா -காங்கிரசை மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட பிணக்கில் உடைத்தார் . உட்கட்சி ஜனநாயகத்தை அப்படியே காணாமல் போக வைத்தார். “நீங்கள் சொன்னால் எங்கேயும் பெருக்க கூட நான் தயார் !” என்று ஒரு தலைவர் சொல்கிற அளவுக்கு விசுவாசம் கொடி கட்டிப்பறந்தது. காங்கிரஸ் தான் இந்திரா,இந்திரா தான் காங்கிரஸ் என்றானது. காங்கிரஸ் இரண்டாக உடைந்தது . காளைமாடு சின்னம் காணாமல் போனது. 

பின் எமர்ஜென்சி சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் உண்டாயின . அதற்கு பிறகு கட்சி பெரிய அளவில் பிரிவினை இல்லாமல் இருந்த பொழுது வங்கத்தில் மம்தாவும் ,மகாராஷ்ட்ராவில் சரத் பவாரும் கட்சியை உடைத்தார்கள் . ஆட்சியை இழந்த காலத்தில் இருந்து கட்சியை மீட்டெடுத்து சோனியா சாதித்தார். மொத்தம் பதினொரு ஆண்டுகள் மட்டுமே பிறகட்சிகள் ஆண்ட பொழுது நாட்டை மீதிகாலமெல்லாம் ஆண்ட காங்கிரசின் வரலாறும் இந்திய வரலாறும் பிரிக்க முடியாததும் உண்மை .