ஜாக்கி சானிடம் படிக்க பத்து பாடங்கள் !


ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள் :

துவக்கத்தால் துவளாதே :
பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா நோக்கி அவர்கள் நகர்ந்த பின்பு ஹாங்காங்கில் கூலி வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஜாக்கிக்கு உண்டானது. இன்றைக்கு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர் !

செய்வதில் சிறந்திடு :
மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம் போதாமல் போனதால் அம்மா,அப்பாவுடன் சேர்ந்திருக்க ஆஸ்திரேலியா கிளம்பினார். போர்க்கலைகள் கற்றிருந்தபடியால் அங்கே ஸ்டன்ட்மாஸ்டராகவே வேலை கிடைத்தது. நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். ஆனாலும்,செய்கிற ஸ்டன்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். வில்லி சான் என்பவரின் கவனம் திரும்பியது. நாயகனாக நடிக்கும் ‘ ‘fist of fury’ படத்தின் வாய்ப்பு ஒரே ஒரு டெலிகிராம் மூலம் வந்து சேர்ந்தது.

சுயத்தை நம்பு :
ஹாங்காங்கில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. யோசித்து பார்க்கையில் தன்னுடைய திறமையை முழுமையாக இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவருக்கு புரிந்தது. ஆக்ஷன் என்றால் முகத்தை சீரியஸ் ஆகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உடைத்து அதில் நகைச்சுவையை புகுத்தினார். தன்னுடைய ஐடியாக்களை படத்தில் இணைத்து நடிக்க பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள் குவிந்தன.

உண்மையை சொல் ! உயர்ந்து நில் :
ஆரம்ப காலத்தில் போர்னோ படத்தில் ஜாக்கி நடித்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட பொழுது ,”ஆமாம் ! வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அப்படி படத்தில் நடிக்கவே செய்தேன். அதில் எனக்கு வருத்தமொன்றும் இல்லை.” என்று சொன்னார் ஜாக்கி. அவரின் ஆங்கிலம் சகிக்கலை என்று விமர்சகர்கள் எழுதிய பொழுது ,”அதுவும் சரியே ! ஸ்டன்ட் செய்வதை விட ஆங்கிலம் பேசுவது கடினமான ஒன்றே !” என்று ஒப்புதல் தந்தார் ஜாக்கி !

பிடிக்காவிட்டாலும் காத்திரு :

ரஷ் ஹவர் எனும் அமெரிக்க படத்தில் நடித்தார் ஜாக்கி சான். அமெரிக்காவின் கதை சொல்லும் பாணி,அவர்களின் நகைச்சுவை எதுவுமே பிடிக்காமலே அப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் அதே சீரீசில் வந்த பொழுது நல்ல சம்பளம் என்று நடிக்க ஒப்புக்கொண்டார். “எனக்கு பிடிக்கவில்லை தான் ; அதற்காக வருகிற வாய்ப்பை கைவிட நான் முட்டாள் இல்லை !” என்று பிற்காலத்தில் சொன்னார் அவர். 

உடைவது உன்னதம் பெறவே ! :

இடுப்பு எலும்பு உடைந்து இருக்கிறது,முகமே சின்னாபின்னம் ஆகியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு எல்லா பாகமும் காலி ஆகி இருக்கிறது ஜாக்கி சானுக்கு. ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணிநேர போராட்டமே அவரை மீட்டது. அந்த ஓட்டையை செயற்கை பூச்சின் மூலம் அடைத்துக்கொண்டு நடிக்க அவர் மீண்டும் வந்த பொழுது பலருக்கு நெஞ்சடைத்தது.

வழிகளைத் தேடாதே ! உருவாக்கு :
போலீஸ் ஸ்டோரி படத்தில் இவருடன் நடிக்க வந்த ஸ்டன்ட் ஆட்கள் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே மறுத்தார்கள். வேறு வழியே இல்லை என்று எல்லாரும் கை விரித்த பொழுது தானே ஸ்டன்ட் பயிற்சி பள்ளி ஆரம்பித்து ஆட்களை உருவாக்கினர் ஜாக்கி. அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முழு மருத்துவ செலவை அவரே ஏற்றுகொள்ள படம் அதிவேகத்தில் உருவானது.
Photo: ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள் :

துவக்கத்தால் துவளாதே :
பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா நோக்கி அவர்கள் நகர்ந்த பின்பு ஹாங்காங்கில் கூலி வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஜாக்கிக்கு உண்டானது. இன்றைக்கு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர் !

செய்வதில் சிறந்திடு :
மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம் போதாமல் போனதால் அம்மா,அப்பாவுடன் சேர்ந்திருக்க ஆஸ்திரேலியா கிளம்பினார். போர்க்கலைகள் கற்றிருந்தபடியால் அங்கே ஸ்டன்ட்மாஸ்டராகவே வேலை கிடைத்தது.   நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். ஆனாலும்,செய்கிற ஸ்டன்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். வில்லி சான் என்பவரின் கவனம் திரும்பியது. நாயகனாக நடிக்கும் ' 'fist of fury' படத்தின்   வாய்ப்பு ஒரே ஒரு டெலிகிராம் மூலம் வந்து சேர்ந்தது.

 
சுயத்தை நம்பு :
ஹாங்காங்கில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. யோசித்து பார்க்கையில் தன்னுடைய திறமையை முழுமையாக இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவருக்கு புரிந்தது. ஆக்ஷன் என்றால் முகத்தை சீரியஸ் ஆகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உடைத்து அதில் நகைச்சுவையை புகுத்தினார். தன்னுடைய ஐடியாக்களை படத்தில் இணைத்து நடிக்க பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள் குவிந்தன.

உண்மையை சொல் ! உயர்ந்து நில் :
ஆரம்ப காலத்தில் போர்னோ படத்தில் ஜாக்கி நடித்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட பொழுது ,"ஆமாம் ! வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அப்படி படத்தில் நடிக்கவே செய்தேன். அதில் எனக்கு வருத்தமொன்றும் இல்லை." என்று சொன்னார் ஜாக்கி. அவரின் ஆங்கிலம் சகிக்கலை என்று விமர்சகர்கள் எழுதிய பொழுது ,"அதுவும் சரியே ! ஸ்டன்ட் செய்வதை விட ஆங்கிலம் பேசுவது கடினமான ஒன்றே !" என்று ஒப்புதல் தந்தார் ஜாக்கி !

பிடிக்காவிட்டாலும் காத்திரு :

ரஷ் ஹவர் எனும் அமெரிக்க படத்தில் நடித்தார் ஜாக்கி சான். அமெரிக்காவின் கதை சொல்லும் பாணி,அவர்களின் நகைச்சுவை எதுவுமே பிடிக்காமலே அப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் அதே சீரீசில் வந்த பொழுது நல்ல சம்பளம் என்று நடிக்க ஒப்புக்கொண்டார். "எனக்கு பிடிக்கவில்லை தான் ; அதற்காக வருகிற வாய்ப்பை கைவிட நான் முட்டாள் இல்லை !" என்று பிற்காலத்தில் சொன்னார் அவர்.  

உடைவது உன்னதம் பெறவே ! :

இடுப்பு எலும்பு உடைந்து இருக்கிறது,முகமே சின்னாபின்னம் ஆகியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு எல்லா பாகமும் காலி ஆகி இருக்கிறது ஜாக்கி சானுக்கு. ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணிநேர போராட்டமே அவரை மீட்டது. அந்த ஓட்டையை செயற்கை பூச்சின்  மூலம் அடைத்துக்கொண்டு நடிக்க அவர் மீண்டும் வந்த பொழுது பலருக்கு நெஞ்சடைத்தது.

வழிகளைத் தேடாதே ! உருவாக்கு :
போலீஸ் ஸ்டோரி படத்தில் இவருடன் நடிக்க வந்த ஸ்டன்ட் ஆட்கள் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே மறுத்தார்கள். வேறு வழியே இல்லை என்று எல்லாரும் கை விரித்த பொழுது தானே ஸ்டன்ட் பயிற்சி பள்ளி ஆரம்பித்து ஆட்களை உருவாக்கினர் ஜாக்கி. அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முழு மருத்துவ செலவை அவரே ஏற்றுகொள்ள படம் அதிவேகத்தில் உருவானது.

வெல்லும் வரை விடாதே  :
டிராகன் லார்ட் படத்தில் ஜியான்ஜி கேம் பற்றிய ஒரு காட்சியில் ஜாக்கி எதிர்பார்த்தது போல காட்சி அமையவே இல்லை. எத்தனை டேக்குகள் எடுத்து அந்த காட்சியை ஓகே செய்தார் அவர் தெரியுமா ? மூச்சைப்பிடித்து கொள்ளுங்கள் :  2900 !

சொந்த காலில் நில் மகனே ! :
தன்னுடைய பல நூறு கோடி சொத்துக்கு தன் மகன் வாரிசில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜாக்கி. " அவன் சம்பாதித்து வாழட்டும். நான் ஈட்டியவை அறக்காரியங்களுக்கு பயன்படட்டும் !" என்று சொல்கிற ஜாக்கி முழுச்சொத்தையும் அந்த மாதிரி பணிகளுக்கே எழுதி வைக்க போவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய பிள்ளையை இளமைக்காலத்தில் ராணுவத்துக்கு அனுப்பி பண்பட வைத்தார் !  

பாணியை மாற்று ! :
பல வருட காலமாக ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். "எனக்கு இப்படிப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்க முடியாது ! வயதாகி விட்டது. நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமில்லை ; நான் ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விரும்புகிறேன். என் மீது இருக்கும் இமேஜை உடைக்கவே ஆசை. ஆசியாவின் ராபர்ட் டி நிரோ என்று பெயர் எடுக்க ஆசை எனக்கு ! என்னால் நடிக்கவும் முடியும். அதை சீக்கிரமே காண்பீர்கள் !" என்றிருக்கிறார் அவர். அது தான் ஜாக்கி சான் !
வெல்லும் வரை விடாதே :
டிராகன் லார்ட் படத்தில் ஜியான்ஜி கேம் பற்றிய ஒரு காட்சியில் ஜாக்கி எதிர்பார்த்தது போல காட்சி அமையவே இல்லை. எத்தனை டேக்குகள் எடுத்து அந்த காட்சியை ஓகே செய்தார் அவர் தெரியுமா ? மூச்சைப்பிடித்து கொள்ளுங்கள் : 2900 !

சொந்த காலில் நில் மகனே ! :
தன்னுடைய பல நூறு கோடி சொத்துக்கு தன் மகன் வாரிசில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜாக்கி. ” அவன் சம்பாதித்து வாழட்டும். நான் ஈட்டியவை அறக்காரியங்களுக்கு பயன்படட்டும் !” என்று சொல்கிற ஜாக்கி முழுச்சொத்தையும் அந்த மாதிரி பணிகளுக்கே எழுதி வைக்க போவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய பிள்ளையை இளமைக்காலத்தில் ராணுவத்துக்கு அனுப்பி பண்பட வைத்தார் ! 

பாணியை மாற்று ! :
பல வருட காலமாக ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். “எனக்கு இப்படிப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்க முடியாது ! வயதாகி விட்டது. நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமில்லை ; நான் ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விரும்புகிறேன். என் மீது இருக்கும் இமேஜை உடைக்கவே ஆசை. ஆசியாவின் ராபர்ட் டி நிரோ என்று பெயர் எடுக்க ஆசை எனக்கு ! என்னால் நடிக்கவும் முடியும். அதை சீக்கிரமே காண்பீர்கள் !” என்றிருக்கிறார் அவர். அது தான் ஜாக்கி சான் !

கார் தந்த ஃபோர்ட்


ஹென்றி ஃபோர்டு… அமெரிக்காவில் இன்று எல்லாரும் கார் வைத்து இருப்பதற்கான அச்சுப்புள்ளி இந்த மனிதரால்தான் போடப்பட்டது. ஒற்றை டைம் பீஸ் பரிசை அக்குவேறு ஆணிவேராக பிரித்துப் போட்டு சேர்த்ததில் தொடங்கிய இயந்திரக் காதல் வாழ்நாள் முழுக்க இந்த ஃபோர்ட் எனும் மேதைக்கு தொடர்ந்தது.

ஒரு நகரும் ட்ராக்டரை முதன்முதலில் பார்த்து வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டார் அவர். நீராவி இயந்திரங்களை கழட்டி சேர்ப்பது அவற்றை பழுது பார்ப்பது என்று இயங்கிக்கொண்டு இருந்த அவர் ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்தது திருப்பம். அதை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தது தான் திருப்பம்.

உதிரிப் பாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார்.

ப்ரேக் இல்லாத பின்னோக்கி செலுத்த முடியாத அந்த வாகனத்துக்கு quadricycle என்று பெயரிட்டார். அந்த வாகனத்தை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மேலிட பணிகள் முடிந்த பின்னர் அவர் முனைந்த பொழுது தான் வாசல் குறுகலாக இருக்கிறது என்று அவருக்கு புரிந்தது. சில நொடிகளில் ஆயுதத்தை எடுத்து சுவற்றை உடைத்து நொறுக்கிவிட்டு அதே வேகத்தோடு பெட்ரோல் வாகனத்தில் பயணம் போனார்.

எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை. அடுத்தடுத்து பலபேர் ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் பல லட்சம் கார்களை அதிவேகமாக உருவாக்கி சாதித்தார். அவரின் கார் சில நூறு டாலர்களில் கிடைக்க அமெரிக்காவில் கார் இல்லாத ஆளே இல்லை என்கிற சூழல் உண்டானது. கஸ்டமரின் ரசனையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை உள்ளவர் அவர். “என்னுடைய கஸ்டமரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருந்தால்,’ இன்னமும் வேகமாக ஓடும் குதிரை வேண்டும் !’ என்று தான் கேட்டிருப்பார். நான் தான் அவர்களை ஈர்க்கும் கார்களை உற்பத்தி செய்யவேண்டும்”

தன் மனைவியை வைத்துக்கொண்டு தான் உருவாக்கிய புத்தம் புது மாடலை சோதித்து பார்த்தவர் இவர். அதிக விற்பனை, அதில் தொழிலாளர்களுக்கும் அதிக சம்பளம், டீலர்களையும் மதித்து நடத்துவது என இவர் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் அமெரிக்காவிற்கு முன்னோடி. தான் வாழ்ந்த க்ரீன்பீல்ட் கிராமத்தை அப்படியே அருங்காட்சியமாக மாற்றியவர். அம்மா மீது தீராத அன்பு கொண்டவர்.

சிகரெட் பழக்கத்துக்கு எதிராக அமெரிக்க முழுக்க பிரபலங்களிடம் கையெழுத்து பெற்று விழிப்பு உணர்வு ஏற்படுத்த முயன்றவர். போர்ட் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி அறக்காரியங்களுக்கு எக்கச்சக்க பணம் செலவிட்டார் போர்ட். போருக்கு எதிராக நின்றவர் என பல அற்புதமான முகங்களும் அவருக்கு இருக்கச் செய்தது. ஆனால் தன் மகனின் இறப்புக்கு பின் பொறுப்பேற்றபோது, கம்பெனியை லாபத்தில் இயங்க வைக்கமுடியவில்லை. இறந்தபோது மாபெரும் வலியோடுதான் விடைபெற்றார்.

“If you think you can do a thing or think you can’t do a thing, you’re
right ” எனச் சொன்ன ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.

ஹீத் லெட்ஜர் எனும் ஜோக்கர் நாயகனின் வலி மிகுந்த வாழ்க்கை !


ஹீத் லெட்ஜெர் பிறந்த நாள் என்று நண்பன் பரிதி சொல்லித்தான் தெரியும். நடிப்புலகின் உச்சம் இவர் என்று உலகம் சொல்வதற்கான கணம் வருவதற்கு முன்பே மரணத்தின் உதடுகள் இருபத்தி எட்டு வயதில் பற்றிக்கொண்ட நாயகன் அவர்.

ஆஸ்திரலியாவில் பிறந்த லெட்ஜெருக்கு ஹீத் என்கிற பெயர் வுதரிங் ஹைட்ஸ் படத்தின் ஆண்டி-ஹீரோவின் நினைவாக வைக்கப்பட்டு இருந்தது. அவரின் வாழ்க்கையிலும் சோகம் விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை அப்பொழுதே பெற்றோர் உணர்ந்திருந்தார்களோ என்னவோ ?

பத்து வயதை தொட்ட பொழுது இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்திருந்தன. அவரின் அப்பாவும்,அம்மாவும் பிரிந்திருந்தார்கள். இரண்டு வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து அன்பின் சுவடுகள் அவருக்கு என்ன என்றே தெரியாமல் போயின. வகுப்பில் சமையல் அல்லது நடிப்பு ஆகிய இரண்டில் ஒன்றை பாடமாக தெரிவு செய்ய வேண்டும் ! சமையலில் இருந்து தப்பித்தால் போதும் என்று தான் நாடகத்தின் பக்கம் வந்தார் அவர்.

செஸ் மற்றும் மோட்டார் விளையாட்டில் கலக்கிக்கொண்டு இருந்த லெட்ஜரை இரண்டாவது விஷயத்தில் ஈடுபடுத்தி பெரிய ஆள் ஆக்கலாம் என்று தந்தை விரும்பினார். விடுங்கள் என்னை என்று பதினாறு வயதில் பள்ளியை விட்டு நீங்கி நண்பனோடு நடிப்புலகில் தனக்கான இடத்தை தேடி சிட்னி நகருக்கு சில சென்ட்களோடு வந்து சேர்ந்தார்.

அங்கே டி.வி.சீரியல்களில் வேடங்கள் கிடைத்தன. “நன்றாக நடிக்கிறாய் நீ !” என்று சொன்னதோடு நில்லாமல் ஹாலிவுட் போய் பார் என்று உடனிருந்தவர்கள் ஊக்கப்படுத்த அமெரிக்காவுக்கு வந்தார். சில படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக கவனம் பெறாமல் போயின. ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு முறை பண்ணிய வேடத்தின் சாயலில் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்திருந்தார் லெட்ஜெர்

h“10 Things I Hate About You,” படத்தில் ரொமாண்டிக்கான ரோலில் பின்னியிருந்தார் அவர். அதே மாதிரி வேடங்கள் ஒருவருடம் முழுக்க வந்த பொழுது அவற்றை ஏற்க மறுத்தார் அவர். அமெரிக்காவின் விளம்பரப்படுத்தும் யுக்திகள் அவருக்கு கைவரவே இல்லை. வெறும் டாப் ரேமன் நூடுல்ஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்றோடு பணமில்லாமல் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் படத்துக்காக காத்திருந்தார் அவர். “பணம் உங்களுக்கு முக்கியமில்லையா ?” என்று கேட்கப்பட்ட பொழுது ,”என் ஊரில் இருந்து கிளம்பி வந்த பொழுது என்னிடம் பணம் எதுவும் இல்லை. இப்பொழுதும் பணம் எனக்கு முக்கியமாகப்படவில்லை. !” என்று அழுத்தமாக சொன்னார் அவர்.

தி லைப் ஆப் பை படமெடுத்து ஆங் லீ இரண்டு கௌபாய்களுக்கிடையே ஏற்படும் ஓரினச்சேர்க்கை உறவும் பிரிந்து மீண்டும் அவர்கள் சந்திக்கிற பொழுது உண்டாகும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்ட படத்தில் இவரை ஒரு கௌபாயாக நடிக்க வைத்தார். அந்த ப்ரோக்பாக் மவுண்டென் படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு அந்த சிறுகதையை எழுதியவர் ,”என் கதையை இப்படிக்கூட நடிப்பால் இன்னமும் ஒரு படி மேலே கொண்டு போய் விட முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை !” என்று சிலிர்த்துப்போய் சொன்னார். அந்த படத்துக்கு சிறந்த நடிகருக்கான அகாடமி விருது நூலிழையில் கிடைக்காமல் போனது.

ஓரிரு காதல்கள் உடைந்த பிறகு மிச்செல் உடன் காதல் கைகூடி இருந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அன்பெனும் அற்புதம் லெட்ஜரின் வாழ்க்கையில் வீச ஆரம்பித்தது. “ஆறு பிள்ளைகள் பெற்றுக்கொள்ள எண்ணியிருக்கிறோம் நாங்கள் !” என்று பேட்டியெல்லாம் கொடுத்தார்கள். திடீரென்று ஒரு நாள் பிரிந்தார்கள். ஹெராயின் பழக்கம் தொற்றிக்கொண்டது.

நோலன் The Dark Knight படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடிக்க இவரை புக் செய்த பொழுது பலர் அதிர்ந்தது உண்மை. “இந்த வேடத்தில் லெட்ஜரை எல்லாம் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. படத்தை கண்டிப்பாக நான் பார்க்கப்போவதில்லை !” என்றொரு விமர்சகர் எழுதினார். நான்கு மாதங்கள் தனியாக ஒரு அறையை அமெரிக்காவில் எடுத்துக்கொண்டு தனிமையில் மூழ்கி,தூக்கம் தொலைத்து,டைரியில் ஜோக்கருக்கு பிடித்த விஷயங்களால் நிரப்பி அவர் தயாராகி இருந்தார். 

படத்தின் கதாப்பாத்திரத்தை இப்படி விவரித்தார் அவர் :”psychopathic, mass-murdering, schizophrenic clown with zero empathy.” இரண்டே மணிநேரம் மட்டுமே தூங்கி,தன்னை வருத்திக்கொண்டு ஜோக்கராகவே மாறியிருந்தார் அவர். எப்பொழுதும் செட்டில் ஒவ்வொரு ஷாட்டிலும் தானே முழுமையாக இயக்கம் நோலன் இவரை சில காட்சிகளை இயக்க சொல்கிற அளவுக்கு அசத்திக்கொண்டு இருந்தார் ஹீத் லெட்ஜர். ஜோக்கர் கை தட்டுகிற காட்சி படத்தின் ஷூட்டிங்கின் பொழுது அந்த கணத்தில் இவரே தன்னிச்சையாக செய்தது. அதோடு ஹான்ஸ் ஜிம்மரின் இசை சேர்ந்து என்னவோ செய்தது ரசிகர்களை ! 

படத்தின் எடிட்டிங் நடந்து கொண்டிருந்த பொழுதே தன்னுடைய அறையில் அதீதமாக தூக்க மருந்தை எடுத்துக்கொண்டதால் உடலில் ஆடையின்றி இறந்து கிடந்தார் லெட்ஜர். படம் வந்த பிறகு அவருக்காகவே பல கோடி பேர் படத்தை பார்த்து கொண்டாடி கண்ணீர் விட்டார்கள். ஆஸ்கர்,கோல்டன் க்ளோப்,பாஃப்டா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை ஜோக்கர் வேடத்துக்காக வென்ற லெட்ஜர் மரணத்துக்கு முந்தைய தினம் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ? தன்னுடைய இரண்டு வயது மகளோடு விளையாடிக்கொண்டிருந்தார் !!

மார்லன் பிராண்டோ எனும் வசீகர கலைஞன்


 
Posted Date : 08:51 (03/04/2014)Last updated : 08:53 (03/04/2014)

மார்லன் பிராண்டோ

உலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் திரைப்படம். அந்த படத்தில் நடித்த மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை அத்தனை அற்புதமானது. ஒரு நடிகன் என்பவன் வானத்தில் இருந்து குதித்தவன் என்பதைப்போன்ற மனோபாவமே பெரும்பாலும் கொண்டிருக்கும் நமக்கு அவரின் வாழ்க்கை ஆச்சரியங்களை அள்ளி வழங்குகிறது.  பத்தே   துளிகளில் அந்த பெருங்கடல் உங்களுக்காக :

துன்பங்கள் செதுக்கும் உன்னை !:

அம்மா நடிகை, அப்பா பல ஊர்களுக்கு சென்று பொருட்களை விற்கும் சேல்ஸ் ரெப். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு அம்மா குடியிலேயே மூழ்கிப்போக அன்பு என்பது என்ன என்றே தெரியாமல் தான் வளர்ந்தார் மார்லான் பிராண்டோ. இருபது வயதை தொடுவதற்கு முன்னரே தீவிர நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. அப்பா மிலிட்டரி ஸ்கூலில் இருந்து டிராப்பான இவரைப்பார்த்து ,”நீயெல்லாம் உருப்படவே மாட்டே !” என்று அடித்துச் சொன்னார்/ மனப்பிறழ்வுக்கு உள்ளாகி மருத்துவமனையில் கதியாக கிடந்து மீண்டு வந்தார் பிராண்டோ.

மீள்வதே வாழ்க்கை :

சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பிராண்டோ ஒரு காலத்துக்கு பிறகு ஹாலிவுட்டில் காணாமல் போனார்.  எங்கே அவர் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஒரு தீவில் போதும் சினிமா என்று ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் ! கப்போலா காட்ஃபாதர் கதையோடு அவரைத்தேடி வந்தார். சுருக்கம் விழுந்து, கண்கள் ஒளி இழந்து அமர்ந்திருந்த இவர் இதற்கு சரிப்படுவாரா என்று அவருக்கு சந்தேகமே வந்து விட்டது.

கதையை அமைதியாக கேட்டுவிட்டு கதவை பிரிந்து போய் சாற்றிக்கொண்டார் பிராண்டோ. கதவுகள் திறந்த பொழுது முழு ஒப்பனையோடு ஒப்புமை இல்லாத இத்தாலி நாட்டை சேர்ந்த காட்ஃபாதர் நின்று கொண்டு இருந்தார். ஆஸ்கரில் வந்து நின்றது அந்த கம்பீரம் !

நடிகன் ஒன்றும் தேவனில்லை :

புகழின் உச்சியில் வெகுகாலம் இருந்த மார்லான் பிராண்டோ நடிகர்களை இறைவன் போல கொண்டாடுவதை வெறுத்தார். கூட்டங்கள் அவருக்கு கடுப்பைத்தந்தன.   ஒரு பாராட்டு விழாவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட வைத்த பொழுது ,”கர்த்தரே ! நான் ஏன் எந்த நகரத்திற்கு வரவேண்டும் !” என்று புலம்பிய ஒரே கலைஞன் அவராகத்தான் இருக்க முடியும்

உலகம் வலிகளால் நிரம்பியது :

உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். “இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன !” என்று கச்சிதமாக அவர் குறித்தார்.

விருதெல்லாம் வீண் ! :

மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார்.

கண்ணீர் விடலாம் கலைஞன் :

லண்டன் நகரத்துக்கு படப்பிடிப்புக்கு போனவர் அங்கே அப்பாவி கறுப்பின மக்களை கைது செய்து வைத்திருக்கும் அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேரணி போவதை கண்டார். அந்த மெழுகுவர்த்தி பேரணியில் தான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்பதை தூக்கி கிடாசிவிட்டு கலந்து கொண்டார் அவர். மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது உரையை நிகழ்த்தும் பொழுது அதை கேட்க ஓடோடி வந்தவர் அவர். அவர் இறந்த பொழுது படப்பிடிப்பை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு மண்டியிட்டு கண்ணீர் விட்டார் அவர் !

வாசிப்பை நேசிப்பாய் நண்பா ! :

செவ்விந்திய மக்களை எப்படி கொன்றும்,குலைத்தும் அமெரிக்கா எழுந்தது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து பதைபதைத்து போனார் அவர். கறுப்பின மக்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளவும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்தார் அவர். தென் அமெரிக்காவில் எழுந்த போராட்டங்கள் பற்றியும் தீவிர வாசிப்பு மற்றும் பயணத்தால் தெரிந்து கொண்டு எளியவர்களுக்கு குரல் கொடுத்தார் அவர்.

சொந்த நாட்டை விமர்சிப்பதே தேசபக்தி :

காட்ஃபாதர்  படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார். அதே போல இந்தியாவின் பீகாரில்  நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு பெருந்தடைகள் எழவே “அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை !” என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.

பணம் வாங்கத்தான் நடிக்கிறேன் நான் :

“நான் ஹாலிவுடில்  இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை !” என்று ஓபனாக பேசிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

தேவை ஒரு நாயகன் :

“மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்” என்று அவர் சொன்னது எத்தனை உண்மையானது !

சுவைத்து துப்ப சுவிங்கம் கதை


Wrigley சுவிங்கம் உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கும் ;அதை தயாரிக்கும் நிறுவனம் துவங்கப்பட்டது இன்று தான் .ஒட்டகம் புகுந்த வீடு கூடார கதை தான் இந்த சுவிங்கம் வந்ததுக்கு பின் இருக்கிறது .சோப்பை தயாரித்து முதலில் விற்றுக்கொண்டு இருந்தார்கள் ;அதனுடன் இலவசமாக பேக்கிங் பவுடர் கொடுக்க ஆரம்பித்தார்கள் .பேக்கிங் பவுடருக்கு வரவேற்பு அதிகமாக இருக்க அதை விற்க ஆரம்பித்தார்கள் .அதற்கு கூட தரப்பட்ட இலவசம் தான் சுவிங்கம் அதற்கு ஆதரவு பெருக அதை விற்க ஆரம்பித்தார்கள் .

 

பார்கோடை பயன்படுத்திய 
உலகத்தின் முதல் பொருளாக இது மாறியது .அசாபர்டமே எனும் இனிப்பானுக்கு பதிலாக குறைந்த சைலிடோல்(கலோரி குறைவு,சர்க்கரையை அமிலமாக மாற்றி பல்லை சிதைக்கும் சிக்கலும் குறைவு )
பற்சிதைவை கட்டுப்படுத்தும் பொருளை சேர்த்து ஆர்பிட்டை விட்டு இன்னமும் மார்க்கெட்டை விரிவாக்கி கொண்டது இந்நிறுவனம்

ரிசர்வ் பேங்க் தந்த அம்பேத்கர் !


இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி எழுபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது இன்று தான் .சட்ட வல்லுனராக,ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக நம்மில் பலரால் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் தான் இந்த வங்கி உருவாவதற்கு காரணம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் .

முதல் உலகப்போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஒரு தனி வங்கியை இந்தியாவுக்கு என்று துவங்க வேண்டும் என ஆங்கிலேய அரசு யோசித்து அதற்கான ஹில்டன் எங் குழுவை அமைத்தது .அக்குழுவின் உறுப்பினர்கள் எல்லாரின் கையிலும் இருந்த நூல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய The Problem of the Rupee – It’s origin and it’s solution எனும் நூல் .அதன் வழிக்காட்டுதலில் ரிசர்வ் வங்கி உருவானது .முதலில் கொல்கத்தாவில் தலைமையகம் அமைக்கப்பட்டு பின் மும்பைக்கு மாற்றப்பட்டது .

Photo: இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி எழுபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது இன்று தான் .சட்ட வல்லுனராக,ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக நம்மில் பலரால் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் தான் இந்த வங்கி உருவாவதற்கு காரணம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் .

முதல் உலகப்போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஒரு தனி வங்கியை இந்தியாவுக்கு என்று துவங்க வேண்டும் என ஆங்கிலேய அரசு யோசித்து அதற்கான ஹில்டன் எங் குழுவை அமைத்தது .அக்குழுவின் உறுப்பினர்கள் எல்லாரின் கையிலும் இருந்த நூல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய The Problem of the Rupee – It’s origin and it’s solution எனும் நூல் .அதன் வழிக்காட்டுதலில் ரிசர்வ் வங்கி உருவானது .முதலில் கொல்கத்தாவில் தலைமையகம் அமைக்கப்பட்டு பின் மும்பைக்கு மாற்றப்பட்டது .

தனியார் பங்குகளை கொண்டு இயங்கிக்கொண்டிருந்த அமைப்பு விடுதலைக்கு பின் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது .நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது இந்த வங்கியே .தனி நபர்கள் இதில் கணக்கு வைக்க முடியாது .பர்மாவுக்கும் விடுதலைக்கு முன் வரை மத்திய வங்கியாக இதுவே செயல்பட்டது ;பாகிஸ்தானுக்கு கூட விடுதலைக்கு பின் பத்து மாதம் வரை வங்கியாக செயல்பட்டது .இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதில்,உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இதற்கு சொல்வோம் ஹாப்பி பர்த்டே

தனியார் பங்குகளை கொண்டு இயங்கிக்கொண்டிருந்த அமைப்பு விடுதலைக்கு பின் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது .நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது இந்த வங்கியே .தனி நபர்கள் இதில் கணக்கு வைக்க முடியாது .பர்மாவுக்கும் விடுதலைக்கு முன் வரை மத்திய வங்கியாக இதுவே செயல்பட்டது ;பாகிஸ்தானுக்கு கூட விடுதலைக்கு பின் பத்து மாதம் வரை வங்கியாக செயல்பட்டது .இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதில்,உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இதற்கு சொல்வோம் ஹாப்பி பர்த்டே

பசுமைத்தாய் வங்காரி மாத்தாய்


வங்காரி மாத்தாய் எனும் ஆப்ரிக்க மர அன்னை பிறந்தநாள் இன்று . அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .
Photo: வங்காரி மாத்தாய் எனும் ஆப்ரிக்க மர அன்னை பிறந்தநாள் இன்று . அமெரிக்காவுக்கு பட்டப்படிப்பு படிக்க கென்யாவில் இருந்து கிளம்பி செல்லும் பொழுது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர் தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு வந்தார் .

மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ளியது .மூன்றில் ஒரு பங்கு காடுகள் ஒரு காலத்தில் கென்யா முழுக்க போர்த்தி இருந்தன .நிலைமை இவர் வந்த பொழுது தலைகீழ் மூன்று சதவிகிதத்துக்கு போயிருந்தது . பெண்கள் தேசிய இயக்கத்தில் சேர்ந்த இவர் கிரீன் பெல்ட் இயக்கத்தை ஆரம்பித்தார் .

மரத்தை வெட்டினால் பணம் என அரசாங்கம் சொன்ன பொழுது மரத்தை நட்டால் பணம் என முழங்கினார் .மக்களின் வீடுகளுக்கு போய் பேசினார் ;பெண்களை தன் பின்னே அணிவகுக்க செய்தார் ; வனத்துறை உதவியது . ஒரு வீட்டில் கணவன் மனைவி என இரண்டு கன்றுகள் என ஆரமபித்த இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளில் நான்கு கோடியே முப்பது லட்சம் கன்றுகளை நாட்டு பெரும்பாலும் அவை பராமரிக்கப்பட்டு பசுமைக்கோலம் பூண்டது நாடு 

.அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு 2004 இல் வழங்கப்பட்டது .அவரின் செயல்களை இரண்டாவது விடுதலைப்போர் என வர்ணிக்கிற அளவுக்கு சாதித்த மரங்களோடு மந்தகாச மொழி பேசிய அவரின் பிறந்தநாள் இன்று
மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ளியது .மூன்றில் ஒரு பங்கு காடுகள் ஒரு காலத்தில் கென்யா முழுக்க போர்த்தி இருந்தன .நிலைமை இவர் வந்த பொழுது தலைகீழ் மூன்று சதவிகிதத்துக்கு போயிருந்தது . பெண்கள் தேசிய இயக்கத்தில் சேர்ந்த இவர் கிரீன் பெல்ட் இயக்கத்தை ஆரம்பித்தார் .

மரத்தை வெட்டினால் பணம் என அரசாங்கம் சொன்ன பொழுது மரத்தை நட்டால் பணம் என முழங்கினார் .மக்களின் வீடுகளுக்கு போய் பேசினார் ;பெண்களை தன் பின்னே அணிவகுக்க செய்தார் ; வனத்துறை உதவியது . ஒரு வீட்டில் கணவன் மனைவி என இரண்டு கன்றுகள் என ஆரமபித்த இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளில் நான்கு கோடியே முப்பது லட்சம் கன்றுகளை நாட்டு பெரும்பாலும் அவை பராமரிக்கப்பட்டு பசுமைக்கோலம் பூண்டது நாடு 

.அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு 2004 இல் வழங்கப்பட்டது .அவரின் செயல்களை இரண்டாவது விடுதலைப்போர் என வர்ணிக்கிற அளவுக்கு சாதித்த மரங்களோடு மந்தகாச மொழி பேசிய அவரின் பிறந்தநாள் இன்று

ஏப்ரல் ஒன்று அன்று ஏமாற்றிய கதைகள் !


எப்படி ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று ஆக்கினார்கள் என்பதைப்பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. கிரிகோரியன் காலண்டருக்கு மாறாமல் ஏப்ரல் ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிய பிரெஞ்சு காரர்களை கிண்டல் செய்ய அந்த விழா உண்டானது என்று சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் உறுதியாக  இல்லை. மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது. கவனமாக படியுங்கள் :

ஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரொம்பவும் சீரியஸாக தொலைகாட்சி முன்னர் தோன்றிய தொகுப்பாளர் எல்லா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளையும் நைலான் உறையொன்றை பொருத்தி நீக்குவதன் மூலம் வண்ணத்தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று அறிவிக்க பற்றிக்கொண்டது ஸ்வீடன். அப்புறம் ஜாலியாக ஸாரி சொன்னார்கள் !

ஏப்ரல் 1, 1998 அன்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலையை வால்ட் டிஸ்னியின் நிறுவனத்திடம் விற்று விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அக்கல்வி நிறுவன தளம் தெரிவித்தது. பல்கலை இடிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அதன் கிளைகள் ஏற்படுத்தப்படும் என்று அது அறிவித்த பொழுது அதிர்ந்து போனார்கள். அப்புறம் அக்கல்விக்கூட மாணவர்கள் தளத்தை ஹாக் செய்த விஷயம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.

ஏப்ரல்  1, 1976 அன்று பிபிசியின் ரேடியோ வானவியல்  அறிவிப்பாளர் சனி மற்றும் ப்ளூட்டோவுக்கு இடையே ஏற்படும் இணைப்பால் புவியின் புவி ஈர்ப்பு விசை குறையும் என்றும்  9:47 a.m க்கும் சரியாக குதித்தால் மக்கள் மிதக்கலாம் என்று அறிவித்து அதை அப்படியே செய்து விழுந்தார்கள் பலபேர் !

அதே பிபிசி 1957 இல் நூடுல்ஸ் போன்ற உணவான ஸ்பாகாட்டி ஸ்விட்சர்லாந்து நாட்டில் மரத்தில் விளைவதாக அறிவிக்க அந்த மரத்தின் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா என்று போன் கால்கள் ஓயாமல் வந்து சேர்ந்தன

1980 இல் பிக் பென் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போவதாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பெரிய கூத்து ஜப்பானிய பிபிசி அந்த கடிகாரத்தின் பாகங்களை முதலில் அழைக்கும் நாலு பேருக்கு விற்பதாக சொல்ல அட்லாண்டிக் கடலின் நடுவில் இருந்து ஒரு நேயர் அழைத்து அசடு வழிந்தார் !

ஆறு வருடங்களுக்கு முன்னர் அண்டார்டிகாவில் பென்குயின்கள் பறக்கின்றன பாஸ் என்று இன்னொரு போலி வீடியோவோடு வந்தது பிபிசி. அதையும் நம்பினார்கள் மக்கள் !

பொலிடிகன் எனும் கோபன்ஹெகன் நகர செய்தித்தாள் டேனிஷ் அரசு நாய்கள் எல்லாவற்றுக்கும் வெள்ளை பெய்ன்ட் அடித்து இரவில் அவற்றின் மீது வாகனங்கள் மோதாமல் தடுக்க சட்டம் கொண்டு வந்திருப்பதை சொல்ல பல் நாய்கள்
பாவம் வெள்ளை பூச்சுக்கு மாறின !

ஐரீஷ் டைம்ஸ் 1995 இல் டிஸ்னி நிறுவனம் லெனினின் பாதுகாக்கப்பட்ட உடலை வாங்கி தன்னுடைய பொழுது போக்கு மையத்தில் வைக்க இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் குரல் கசியும் என்று வதந்தியை கசிய விட்டது !

The China Youth Daily பத்திரிக்கை சீனாவில் முனைவர் ஆய்வில் ஈடுபடுவர்கள் ஒரு பிள்ளை மட்டுமே என்கிற சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கிளப்பிவிட்டு அதை சில செய்தி நிறுவனங்கள் உலகம் ழுக்க கொண்டு போய் சேர்த்தன.

முதல் உலகப்போரின்  April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது. வெகுநேரம் வெடிக்காமலே இருக்கவே,அருகில் போய் அதை பார்த்தால் கால்பந்தை சியிருக்கிறார்கள் ! அதில் “ஏப்ரல் ஃபூல் !” என்று எழுதி வேறு ஒட்டியிருந்தார்கள் !

பர்கர் கிங் எனும் அமெரிக்க நிறுவனம் இடது கைப்பழக்கம் உள்ள மூன்றரை கோடி அமெரிக்கர்கள் உன்ன இடக்கை வோப்பர் எனும் உணவுப்பண்டத்தை கொண்டு வந்திருப்பதாக சொல்ல வலக்கை பழக்கம் உள்ளவர்கள் சண்டைக்கு வந்துவிடவே அதுவே புரூடா என்று புரிய வைத்தார்கள்.

கூகுள் ஏப்ரல் தினத்தில் குறிப்பிட்ட தயாரிப்பை வெளியிடுவதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 1, 2004 இல் மின்னஞ்சல் சேவையை துவங்குவதாக சொல்ல எல்லாரும் ஏமாற்றப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகியிருந்தார்கள். ஜிமெயிலை மெய்யாலுமே உருவாக்கி ஷாக் தந்தது கூகுள் ! இப்படியும் ஏமாற்றலாம் பாஸ் !

லண்டன் டைம்ஸ் இதழ் 1992  இல் பெல்ஜியத்தின் ஒரு பாதியை நெதர்லாந்தும் இன்னொரு பாதியை பிரான்சும் பிரித்துக்கொள்ளும் என்று அறிவிக்க அதை பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி உண்மை என்று நம்பி டிவி ஷோவில் வாதிக்க கிளம்பி விட்டார். அப்புறம் அஸ்கு,புஸ்கு சொன்னார்கள் அவருக்கு!

இந்தியாவின் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பிப்பதாக கிளப்பி விட்டார்கள்.

லேஸ் சிப்ஸ் நிறுவனம் செய்தித்தாளில் வெளிச்சத்தால் இயங்கும்  டிவி பார்க்கலாம் என்றொரு விளம்பரம் தர அதை உண்மையென்று செய்தித்தாளை ஆட்டிப்பார்த்து ஏமாந்து போனார்கள் எண்ணற்ற வாசகர்கள் !