டுத்தடுத்து நீண்ட காலமாக நேசித்து வரும் நண்பர்களின் காதல்கள் ஜாதியின் பெயரால், குடும்பக் கவுரவத்தின் பெயரால் பலி வாங்கப்படுவதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். “பதிவுத் திருமணமோ, விலகி வந்தோ கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா?” என்று கேட்டால் என்னமோ எழுதி வைத்தது போல ஒரு பதிலை சொல்கிறார்கள்.
“எங்க அப்பா, அம்மா எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம அவங்க அளவில் பார்த்துக்க முயற்சி பண்ணினாங்க. வாழ்க்கையில் யார்கூட ட்ராவல் பண்ணனும்னு முடிவு பண்ணுறதுக்கு அவங்க தடை சொல்ல மாட்டாங்கனு நினைச்சோம். இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு. தொடர்ந்து பேசிப் பார்ப்போம். அவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் கண்டிப்பா பண்ணிக்க மாட்டோம். சொந்தக்காரன் என்ன நினைப்பான், தெருக்கடைசியில இருக்கிறவன் என்ன நம்மளைப் பத்தி பேசுவான்னு கவலைப்படுறாங்க. நாங்க என்ன நினைப்போம்னு யோசிச்சு இருக்கலாம்.”
இதில் யார் பெரியவர்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை