அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்,
உங்களிடம் ஒரு பேருதவியை எதிர்நோக்கி எழுதுகிறேன். தமிழ்நாட்டில் புனைவு, அல்புனைவில் வெளிவரும் ஆக்கங்கள் அற்புதமானதாக இருந்தாலும் எப்போதும் ஒரு குறை உண்டு. அவை பிற மொழிகளிலோ, ஆங்கிலத்திலோ முறையான மொழியாக்கம், செம்மையாக்கம் இல்லாததால் சென்று சேர்வதே இல்லை. இப்போது எதற்கு இதெல்லாம்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன்.
அமெரிக்க-இந்திய அரசுகள் இணைந்து Fulbright-Nehru Fellowship ஒன்றை உருவாக்கின. இதன் நோக்கம் ஒன்று தான். அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான உதவியை நல்கும் திட்டமாகும். பல்வேறு கட்டத் தேர்வுகள், நேர்முகத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகள் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு என்று J1 விசா வழங்கப்படும். இந்த விசா சற்று வேறுபட்ட ஒன்று. இந்த விசாவில் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் இந்தியாவிற்கு திரும்பி விடவேண்டும். கல்விக்காலம் முடிந்த பிறகு அங்கே வேலை பார்த்து கல்விக்கடன், செலவுகளை ஈடுகட்டும் வாய்ப்பு அறவே இல்லை. Fullbright Fellowship கல்விக்காலம் முடியும் வரை, குறிப்பிட்ட உதவித்தொகையை மாதாமாதம் வழங்கும். இந்த உதவித்தொகை பாதி கல்விக்கட்டணத்திற்கு தான் போதுமானது. மீதமுள்ள தொகையை கற்கப்போகும் மாணவரே திரட்ட வேண்டும். Inlaks Scholarship, JN Tata Endowment loan scholarship என்று சிற்சில உதவித்திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாருக்கும் உதவுவதில்லை.

இப்போது ஆனந்த் தட்சிணாமூர்த்தியை சந்திப்போம். அவரின் சொற்களிலேயே ,
“என் பெயர் ஆனந்த் தட்சிணாமூர்த்தி. நியூயார்க் பல்கலைக்கழகத்தின், ‘Centre for Publishing’ ஆனது ‘Publishing: Digital and Print Media’ -ல் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. இக்கனவை எட்டுவதற்கு இப்படிப்பிற்கு செலுத்த வேண்டிய கட்டணமே தடையாக கண்முன் நிற்கிறது.
பெருமைமிகு Fulbright-Nehru Fellowship எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தரப்படவுள்ள உதவித்தொகைமேற்படிப்பினை முடிக்க போதுமானதில்லை. பாதிக்கு பாதி கட்டணத்தை கட்ட முடியாத நிலையில் உள்ளேன். இக்கட்டணத்தை செலுத்த உங்களின் மேலான உதவியை நாடுகிறேன்.
பதிப்புத்துறையில் மேற்படிப்பில் கால்பதிக்கப் போகும் முதல் Fullbright Scholar நானாகவே இருப்பேன். பதிப்புத்துறையில் புதியன விரும்பும் ஒருவனாக இக்கனவை துரத்துகிறேன்.
அம்மாவை இளம்வயதிலேயே பறிகொடுத்துவிட்ட என்னை என் அப்பா தான் தனியொருவராக வளர்த்தெடுத்தார். அப்பா தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். (சட்டம், பொருளாதாரம் என்று அவரின் கல்வித்தாகம் விரிந்து கொண்டே இருந்தது ). அப்பா, சங்க இலக்கியத்தை நிலாச்சோறுடன் ஊட்டி வளர்த்தார். என்னை பகுத்தறிவாளனாக வளர்த்தெடுத்தார். பக்தி இலக்கியத்தின் கவிதைகளை ஆழமாக அறிந்துகொள்ள மட்டுமே ஆலயங்களை நோக்கி பயணித்தோம். தீவிர இலக்கிய கூட்டங்களின் வழியாக தமிழ் இலக்கியத்தில் மனதைப் பறிகொடுத்தேன். பெரும்பாலான மாணவர்களை போல பொறியியல் படித்து முடித்தேன். இருந்தாலும் மனதெல்லாம் கலை, இலக்கியத்தை சுற்றியே சுழன்றது.

‘Young India Fellowship’ (YIF) எனும் இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பல்கலை பயிற்சியினை வழங்கும் படிப்பினில் இணைந்தேன். இப்படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாணவர்களில் முழு உதவித்தொகை பெற்ற வெகு சிலரில் நானும் ஒருவன். அங்கே வழங்கப்பட்ட எழுத்துப்பயிற்சி, கடுமையான பாடம் சார்ந்த தேடல்கள் எழுதுவதற்கான ஊக்கமாக அமைந்தது. தமிழிலக்கியத்தினை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் என் கனவுகள் அங்கேயே துலக்கம் பெற்றன. தயங்கி தயங்கி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த நான் நம்பிக்கை மிளிர பேசவும், எழுதவும் ஆரம்பித்தேன். என் வாழ்க்கையும், இலக்கும் தெளிவானது. எனக்கான திசை புலப்பட்டது.
What have I done so far?
YIF-ல் வாசிப்பின் மீது தீராக்காதல் பெருக்கெடுத்தது. பல்வேறு எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை சந்தித்தேன். எப்படி மைய நீரோட்ட பதிப்பாளர்கள் இந்திய மொழிகளில் வெளிவரும் ஆக்கங்களை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று கண்முன்னே பார்த்தேன். ராயல்டி என்று சொற்பத்தொகை மட்டுமே படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவதை கண்டேன். மேற்கத்திய நாடுகளில் எப்படி படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஏலம் விடப்படுகின்றன, நம்ப முடியாத அளவுக்கு படைப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுவதையும் அறிந்து கொள்ள முடிந்தது. பதிப்பாளரால் தான் பதிப்புத்துறையின் போக்கை மாற்றி, உள்ளூர் மொழிகளில் இயங்கும் எழுத்தாளர்களை உலகமெங்கும் கொண்டு சேர்க்க முடியும் என்று புரிந்தது.
இதே காலகட்டத்தில் இதழியல், படைப்புகளை சந்தைப்படுத்தல், பலரிடம் படைப்புகளை சென்று சேர்த்தல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவரான சேகர் குப்தாவுடன் இணைந்து ThePrint எனும் செய்தித்தளத்தை வளர்த்தெடுப்பதில் ஈடுபட்டேன். அங்கே அரசியல் கட்டுரைகள், ஆளுமைகள் குறித்த ஆக்கங்கள், நெடுங்கட்டுரைகள் ஆகியவற்றை இடைவிடாமல் எழுதினேன்.
You can find all the articles under my byline here – https://theprint.in/author/aananth-daksnamurthy/
இப்பணிக்கு பிறகு, தமிழ்நாட்டின் கலைப்படிப்புகளுக்காக உருவான முதல் தனியார் பல்கலைக்கழகத்தினை வளர்த்தெடுப்பதில் பங்காற்றினேன். தமிழ்நாடு அரசின் தொழிற்துறையில் ‘ Content & brand communications’-னை தலைமையேற்று நடத்தினேன். 70 பக்க அளவில் வெளிவரும் தொழிற்துறையின் காலாண்டிதழினை தொகுப்பது, எடிட் செய்வதில் ஈடுபட்டேன். முதலமைச்சரின் உரைக்கான கருத்துகளை வடிவமைப்பதிலும் பங்காற்றினேன்.
https://investingintamilnadu.com/DIGIGOV/TN-pages/enewsletters.jsp?pagedisp=static
இவை போக வெவ்வேறு ஆவணப்படங்களின் மொழியாக்கத்திலும் ஈடுபட்டேன்.
CNA Insider docuseries-ல் வெளிவந்த ‘Race to feed the world’ ஆசியாவின் உணவுப்பாதுகாப்பு குறித்து பேசுகிறது.
https://www.channelnewsasia.com/watch/race-feed-world/question-space-1925316
‘The Longest Day’ எனும் ஆவணப்படம் பருவநிலை மாற்றத்தினால் ஆசியா எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை விவசாயிகள், மக்கள் நலப்பணியாளர்கள், இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோரின் குரல்களின் வழியாக ஆவணப்படுத்தியது.
https://www.channelnewsasia.com/watch/longest-day/water-1463951
அண்மையில், அல்புனைவு தமிழ் நூலொன்றின் சில பகுதிகளை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தேன். தமிழ் இலக்கிய ஆர்வலராக இருந்ததில் இருந்து பதிப்புத்துறையின் ஆழ, அகலங்களை அறியும் இடத்திற்கு வந்து நிற்கிறேன்.
என்னுடைய கனவு அயலகத்திற்கும், தமிழகத்திற்கும் பாலம் அமைக்கும் ஒன்றாகும். நம் நாட்டின் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்களை அமெரிக்காவின் புகழ் மிக்க பதிப்புத்திட்டங்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு கனவு. உலகமெங்கும் பரவிக்கிடக்கும் ஆகச்சிறந்த சிந்தனைகள், திறன்கள், வளங்களை இந்திய மொழிகளுக்கான பதிப்புத்துறைக்குள் கொண்டு சேர்ப்பது மற்றொரு கனவு. இதனை இப்பட்டப்படிப்பு சாத்தியப்படுத்தும்.
மேற்படிப்புக்கு ஆகும் செலவு:
NYU | இரண்டாண்டு படிப்பு | |
முதலாண்டு (12 மாதங்கள் ) | இறுதியாண்டு (10 மாதங்கள் ) | |
tuition | $42,462 | $44,797 |
கல்விக்கட்டணம் | $2,346 | $2,475 |
காப்பீடு | $3,845 | $4,056 |
விடுதிக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் | $26,220 | $21,850 |
புத்தகங்கள் | $1,200 | $1,000 |
மொத்தம் | $76,073 | $74,178 |
Fulbright Award | $39,995 | $44,056 |
பற்றாக்குறை | $36,078 | $30,122 |
ஏறத்தாழ 66,190 $ பற்றாக்குறை உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான வாய்ப்பினை வேண்டாம் என்று சொல்கிற மனநிலைக்கு வந்து விட்டேன். எனக்கான கல்விக்கான வாசல் கதவுகளை திறக்க தமிழ்ச்சமூகம் உதவும் என்கிற நம்பிக்கையில் உங்களிடம் உதவி கேட்கிறேன். நியூயார்க் பல்கலையில் படிக்கும் வாய்ப்பினை பெறுவதற்கு தாராளமாக உதவிடுங்கள்.
Milaap தளத்தில் ஆனந்தின் மேற்படிப்புக்கு உதவுவதற்காக சுட்டி: https://milaap.org/fundraisers/support-aananth-daksnamurthy
உங்களின் நேரத்திற்கும், பேரன்பிற்கும் நன்றிகள்,
அன்புடன், ஆனந்த் தட்சிணாமூர்த்தி
வங்கிக்கணக்கு விவரம்:
Account holder name: Aananth D
Account number: 002001001623067
Bank name: City Union Bank
IFSC code: CIUB0000153
Swift Code: CIUBIN5M
மேலதிக விவரங்களுக்கு:
aananth95@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்
வங்கிக்கடன் முதலியவற்றை முயன்று பார்க்கலாமே?:
என் தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வூதியத்தை சார்ந்து வாழும் அவரால் இவ்வளவு பெரிய தொகைக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. எப்படியாவது இந்த கட்டணத்தை கட்ட நான் முயன்று பார்த்து விட்டேன். வேறெந்த வழியும் இல்லாத நிலையில் தான், உங்களின் உதவியை வேண்டுகிறேன்.
இப்படிப்பிற்கு பின்பு என்ன திட்டம் ?
படிப்பு முடிந்ததும், இந்தியாவிற்கு திரும்பி இந்திய மொழிகளில் பதிப்புத்துறையில் உடனடியாக இயக்குவேன். சிறிய அளவிலான பதிப்பகம் ஒன்றை துவங்கி நடத்தும் திட்டம் உள்ளது. வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் பயன்பெறும் வண்ணம் உள்ளுறை உதவித் திட்டங்களை எடுத்து நடத்தும் திட்டமும் உள்ளது.