செயற்கரிய சேவைகள் புரிந்த மருத்துவர் சுனிதி சாலமன்


மருத்துவர் சுனிதி சாலமன் (14 அக்டோபர், 1939 – ஜூலை 28, 2015)

மருத்துவர் சுனிதி சாலமன் அவர்களை இந்தியாவில் முதன்முதலில் எய்ட்ஸ் நோய்த்தொற்றைக் கண்டறிந்த குழுவினை வழிநடத்தியவர் என்கிற ஒரு வரிச்செய்தியோடு கடந்துவிட முடியாது. அவரின் குடும்பம் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டது. தோல் பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி கொண்டிருந்த கைடொண்டே குடும்பத்தில் பிறந்தார். வீட்டிற்கு வந்து அம்மை நோய்த்தடுப்பு ஊசி போடும் மருத்துவரின் கனிவில் இருந்து தானும் டாக்டராக வேண்டும் என்கிற கனவு அவருக்குத் துளிர்த்தது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரின் மனு ஏற்கப்படவில்லை. அப்போதைய சுகாதாரச் சேவைகள் துறையின் பொது இயக்குனர் சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவரிடம் நேரடியாக வாதிட்டு தனக்கான இடத்தைப் பெற்றார்.

எம்.எம்.சி.யில் படிக்க வந்த சுனிதிக்கு சக மாணவர் சாலமன் விக்டர் மீது காதல் பூத்தது. “நான் ஓயாம பேசிக்கிட்டே’ இருப்பேன். அவர் குறைவா தான் பேசுவார். அவர் தமிழ். நான் மராத்தி. மதமும் வேற. அம்மாகிட்டே போய் நான் வேற மதத்து பையன் ஒரு கிறிஸ்டியன் இல்லை முஸ்லீம்னு வெச்சுக்கோயேன் அவன லவ் பண்ணினா என்ன பண்ணுவேன்னு கேட்டேன்.’ அம்மா, ‘அதுல என்னடா இருக்கு. எல்லாரும் ஒரே கடவுளோட படைப்பில பூத்த பூக்கள் தான?’ அப்படின்னு கேட்டாங்க. ஆனா, சாலமனை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னப்ப அவங்க ‘நான் உன்னை நினைச்சு அப்படிச் சொல்லலைன்னு சொன்னாங்க’ என்று பின்னாளில் எடுக்கப்பட்ட lovesick ஆவணப்படத்தில் பதிந்திருந்தார் சுனிதி.

ஒருவழியாக சாலமனை மணமுடித்தார்.மருத்துவர் சதாசிவம் அவர்களின் வழியில் இதய மருத்துவராக வேண்டுமென்று லண்டனில் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் பணியாற்ற சாலமன் பயணமானார். அவரோடு பயணமான சுனிதியும் லண்டனின் கிங்க்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்துறையில் பணியாற்றினார். இருவரின் உலகமும் பணிப்பளுவால் நிரம்பிக்கொண்டது. ஒருவர் இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு திரும்ப வரும் போது, இன்னொருவர் பணிக்கு கிளம்பியிருப்பார். சமையலறையில் துண்டுச் சீட்டுகளின் மூலம் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டிய கொடுங்காலமாக அது கழிந்தது.

அடுத்து அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்குப் பயணம் என்கிற சூழல் வந்த போது, பணியையும்-குடும்பத்தையும் ஒருங்கே கவனித்துக் கொள்ளும் வகையில் சுனிதியை கிளினிக்கல் துறையல்லாத படிப்பை தேர்ந்தெடுக்கச் சொல்லி சாலமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சுனிதி நோயியல் துறையில் மேற்படிப்பினை சிகாகோவின் குக் கவுண்டி மருத்துவமனையில் பயின்றார். அதற்குள் சாலமனின் வழிகாட்டி சதாசிவம் இறந்துவிடத் துறையைத் தூக்கி நிறுத்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு இருவரும் திரும்ப நேர்ந்தது. சுனிதி தன்னுடைய பொது மருத்துவக் கனவுகளில் இருந்து மைக்ரோபயாலஜி துறைக்கு நகர்ந்திருந்தார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சுனிதி சாலமன். ஒவ்வொரு பேராசிரியரின் கண்காணிப்பின் கீழ் இரு மேற்படிப்பு மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். அப்படிச் சேர்ந்த நிர்மலா செல்லப்பனிடம் ஹெச்.ஐ.வி கிருமி தமிழ்நாட்டிலும் காணப்படுகிறதா எனத் தேடுவோம் என்று சுனிதி சொன்னார். அப்போது முதலில் தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஆண்களிடம் எய்ட்ஸ் கண்டறியப்பட்டு இருந்தது. அதனால், ‘இங்கே எல்லாம் அவங்களைத் தேடி நான் எங்கே போவேன்’ என்று நிர்மலா கேட்டார். சுனிதி பாலியல் தொழிலாளிகளிடம் தேடலாம் என்று பரிந்துரைத்தார்.

இரண்டு குட்டிக் குழந்தைகளின் தாயான நிர்மலாவிற்கு அச்சமாக இருந்தது. அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தி பெரும் ஆதரவு நல்கினார். அவரின் பைக்கில் பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறை கண்காணிப்பில் வைத்திருந்த இல்லங்களுக்குச் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்தார். இவற்றை ஐஸ் பெட்டி ஒன்றில் எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் ஏறினார்கள். கணவனும், மனைவியும் ஆட்டோ பிடித்துச் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பரிசோதனையில் ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. அவர்களால் நம்பவே முடியவில்லை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்குப் புதிய மாதிரிகளை அனுப்பி வைத்த போது, அவர்களும் ஹெச்.ஐ.வி இந்தியாவின் கதவுகளைத் தட்டிவிட்டதை உறுதி செய்தார்கள். 1986-ல் அச்செய்தி அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

(சுனிதி சாலமன்-நிர்மலா செல்லப்பன்)

தமிழகம் பேரதிர்ச்சிக்கு ஆளானது. சுனிதி மராத்தி, அவர் தமிழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்க பார்க்கிறார் என்றெல்லாம் வசைகள் பாய்ந்தன. சுனிதி சாலமனை வேறொரு கவலை சூழ்ந்திருந்தது. ஹெச்.ஐ.வி நோயாளிகளை மருத்துவர்கள் தொட மறுத்தார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்க்க முடியாதென்று கதவுகள் மூடப்பட்டன. ‘எய்ட்ஸ் தொற்று பாலியல் தொழிலாளிகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்நோய் ஒழுக்கக் கேடானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை முதன்முதலில் பச்சிளம் குழந்தைகளிடம் இந்நோய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் இத்தனை வெறுப்பும், அருவருப்பும் இருந்திருக்காதோ என்னவோ’ என்று பின்னாளில் சுனிதி பேசினார்.

தான் கண்டுபிடித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் வெறுத்து ஒதுக்குவது சுனிதியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. முதன்மையான காரணம், அவர் கண்ட ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் கதைகள். முதன்முதலில் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டவர்களில் பதிமூன்று வயது சிறுமி ஒருவரும் இருந்தார். கடத்தப்பட்டு மூன்று நாட்கள் பட்டினி போட்டு அவரை வன்புணர்வு செய்த கொடூரத்தில் இருந்து தப்பி வந்திருந்தார். அவரை மாதிரி எத்தனையோ மக்களின் வாழ்க்கைக்குள் சத்தமில்லாமல் அவநம்பிக்கை, மரண பயம் சூழ்ந்திருந்தது.

சுனிதியிடம் ஒரு பெரும் பணக்காரர் வந்தார். தன்னுடைய தங்கை, மருமகனை மகளுக்கு மணமுடிக்கக் கேட்டிருந்தார். அப்போது தான், தன்னுடைய மகனுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதை அவர் சொன்னார். கதவுக்குப் பின்னிருந்து அதனைக் கேட்ட மனைவி, மகனிடம் உண்மையைச் சொன்னார். விஷத்தை குடித்துவிட்டு வண்டியோட்டிக் கொண்டு போய் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். ‘என்னோட மருமவள எய்ட்ஸ் வராம காப்பாத்தனும்னு நான் நினைச்சது தப்பா டாக்டரம்மா’ என்று அவர் கேட்டார். அரற்ற முடியாமல் சுனிதி நேராக வீட்டிற்குப் போனார். தன்னுடைய நாய்க்குட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்.

ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரின் கனவாக மாறியிருந்தது. இத்தனைக்கும் எம்.எம்.சியிலேயே இலவச சிகிச்சை, கலந்தாய்வு மையம் ஒன்றை அவர் ஏற்படுத்தியிருந்தார். எனினும், மக்கள் அங்கே வர அஞ்சினார்கள். இனிமேலும், இப்படியே விடமுடியாது என்கிற கட்டத்தில், பதவியை விட்டுவிட்டு முழுநேரமாக அவர்களுக்கு உதவ முனைந்தார். சாலமன் முடியாது என்று அரற்றினார். எண்ணற்ற தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள், பல பேருடன் உறவு கொண்டவர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என்று ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களோடு புழங்கி உயிரை போக்கிக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அவருக்கு இருந்தது. “சாலி! என்கூட வாங்க. அவங்க கதைங்கள கேட்டுப் பாருங்க. அவங்க கண்ணில இருக்கிற மரணப் பயத்தைப் பாருங்க. இவங்கள நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவா?” என்று கணவரை ஏற்க வைத்தார்.

அந்த பெரும் பயணம் 1993-ல் துவங்கியது. கையில் பெரிதாகப் பணமில்லை. அன்பு தோய்ந்த கனவு மட்டுமே இருந்தது. விடுதிகளில் அறையை வாடகை எடுத்துச் சிகிச்சை தர ஆரம்பித்தார். நண்பர்களின் இல்லங்களில் இருந்த காலியிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. பொதுக் கிளினிக் ஒன்றை தியாகராய நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் துவங்கியிருந்தார். யார் வேண்டுமானாலும் வரக்கூடிய மருத்துவமனையாக இருந்தாலும் எய்ட்ஸ் பயம் உள்ளவர்கள், சிகிச்சை வேண்டுபவர்கள் வந்து சேரக்கூடிய இடமாக மாறியது அவரின் மருத்துவமனை. மூன்று பேரோடு துவங்கிய YRG Care முன்னூறு பேரோடு கிட்டத்தட்ட இருபதாயிரம் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கிற மையமாக வளர்ந்து நிற்கிறது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய தொழுநோய் வார்ட் ஒன்றை V.H.S அமைப்பிடம் இருந்து தன்னுடைய மையத்திற்காகச் சுனிதி பெற்றுக்கொண்ட அவர் . ‘எய்ட்ஸ் தான் புதிய தொழுநோய்’ என்று சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளைப் பெருமளவு இலவசமாக வழங்க உலகத்தின் பல்வேறு நாடுகள், அமைப்புகளின் ஆய்வுப்பணிகளில் தன்னையும், தன்னுடைய அமைப்பினரையும் தீவிரமாக ஈடுபடுத்தினார். ஏழை என்பதற்காக ஒருவருக்கு மருத்துவச் சேவை மறுக்கப்படக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

இது ஒருபுறம் என்றால், வயதானவர்கள், இந்திய மரபை புனிதம் என்று கட்டிக் காக்கிறவர்கள் சுனிதி சாலமனின் எய்ட்ஸ் விழிப்புணர்வை செவிமடுக்க மறுத்தார்கள். அவர் மாணவர்கள், இளைஞர்கள் கதவுகளைத் தட்டினார். அவர்களிடம் ஹெச்.ஐ.வி குறித்து உரையாடினார். பல இளையவர்கள் திறந்த மனதோடு உரையாடினார்கள். தங்களையும் இந்தப் பயணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள். செக்ஸ் குறித்த திறந்த உரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டதோடு, எய்ட்ஸ் குறித்த கற்பிதங்கள், மூட நம்பிக்கைகளை மென்மையான குரலில் அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்.

‘கல்லால அடிச்சு கொல்ல வேண்டியவங்கள எப்படித் தொட்டு, கட்டிப்பிடிச்சு பேசுறியோ’ போன்ற வார்த்தைகளைச் சுனிதி காதில் போட்டுக்கொண்டதே இல்லை. அவருக்கு ஒவ்வொரு ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவருக்கும் நோய்த்தொற்று இல்லாத மழலை பிறக்கும் நாள் பொன்னாள் தான். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள கர்ப்பிணிகளையும் பிறரோடு பொதுப் பிரசவ வார்டிலேயே அனுமதிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடினார். ‘நோயை விட மக்களிடம் நிலவும் தேவையில்லாத அருவருப்பும், வேறுபடுத்திப் பார்ப்பதுமே கொடுமையானவை’ என்று அவர் கருதினார். மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு, புதிய நோய்த்தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு திருமண உறவை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

‘நிறைய அனாதைகளை உருவாக்க போறேன்னு கரிச்சு கொட்டுவாங்க. ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டவங்க இருபது, இருபத்தஞ்சு வருஷம் வாழுறாங்க. பிறகு என்ன?’ என்று ஆன் எஸ்.கிம்மின் ‘lovesick’ ஆவணப்படத்தில் பேசினார் சுனிதி சாலமன். ‘இவங்களுக்குத் திருமணம் ஆகுறப்ப மறக்காம பத்திரிகை வைப்பாங்க. ஆனா, தயவு செய்ஞ்சு வந்துடாதீங்கன்னு கேட்டுப்பாங்க. ஒரு எய்ட்ஸ் டாக்டர் அங்க போனா மத்தவங்க எல்லாம் என்னென்னெவோ பேசுவாங்க இல்ல. அதுதான் காரணம் ’ என்று அதே ஆவணப்படத்தில் தெரிவித்தார் சுனிதி.

ஒரு சம்பவத்தை அவர் UNDP-யின் இதழுக்கு அளித்த பேட்டியில் நெகிழ்வோடு கவனப்படுத்தினார் :

“ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவான பொண்ணு அவங்க ஃபிரெண்டை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்தாங்க. அவர் இவங்கள லவ் பண்றேன்னு சொன்னார். ‘எனக்கும் பிடிச்சு இருக்கு, ஆனா, காதல் எல்லாம் வேணாம்’ இவங்க சொல்லவே அவருக்கு ஒன்னும் புரில. தனக்கு ஹெச்.ஐ.வி இருக்குனு சொன்னா நம்புவாரானு தெரியாம என்கிட்டே கூட்டிட்டு வந்தாங்க. நான் பொறுமையா அவங்க நிலையை விளக்கி சொன்னேன். அவர் டக்குனு எழுந்து வெளியே போயிட்டார்.

பொண்ணு உடைஞ்சு போயிட்டாங்க. நானும் தான். சூழலை இயல்பாக்க ஒரு காபி சாப்பிட போனோம். அந்தப் பையன் திரும்ப வந்திருந்தார். கையில ரோஜா பூங்கொத்தோட நின்னுகிட்டு இருந்தார். ‘என்கிட்டே இதை மறைக்காம சொன்னது எனக்கு உன்மேலே இருக்கக் காதலை, மரியாதையைக் கூட்டித்தான் இருக்கு. எப்படி இப்படி ஆச்சுன்னு நான் கண்டிப்பா கேக்க மாட்டேன். ஆனா, உன்கூட எப்பவும் இருப்பேன்னு’ சொன்னார். எங்க ரெண்டு பேரு கண்ணிலயும் தண்ணி. எல்லா நேரத்திலும் அழுகையை மறைக்கணும்னு இல்லை. இப்படிப்பட்ட நிறையப் புரிஞ்சுக்குற மனுஷங்க தேவை.’

சுனிதி அப்படிப்பட்ட மனிதர்களில் முதன்மையானவர். இந்தியாவின் எய்ட்ஸ் தடுப்பு வரலாற்றின் முதன்மையான ஆளுமை அவரே. அந்நோய் குறித்த அவநம்பிக்கை, வெறுப்பு, நோய் பீடிக்கப்பட்டவர்களின் மீதான கண்டனப் பார்வைகளை அயராது எதிர்கொண்டார். இறுதிவரை மருத்துவர்கள் ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று மரணத் தண்டனையை அறிவிக்கும் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல், கனிவும், அக்கறையும் மிக்கவர்களாகச் சக மனிதர்களை அணுக வேண்டும் என்கிற அரிய பாடத்தின் முதன்மையான எடுத்துக்காட்டாக அவரே திகழ்ந்தார்.

உதவியவை:
1. https://yrgcare.org/paying-tribute-to-late-dr-suniti-solomon-on-her-78th-birth-anniversary/
2. https://www.newyorker.com/news/news-desk/postscript-suniti-solomon-aids-researcher

3. https://www.thehindu.com/sci-tech/health/world-aids-day-how-dr-suniti-solomons-flexibility-shaped-indias-aids-crisis/article7936732.ece

4. https://www.livemint.com/Leisure/0BndFwDSQojGe71oE8lFVK/Freedom-to-live-with-HIV–Suniti-Solomon.html

5. www.bbc.com/news/magazine-37183012

6. https://www.thebetterindia.com/76774/suniti-solomon-doctor-hiv-aids-india/

7. HIV/AIDS in News- Journalists as Catalysts UNDP
8. https://www.netflix.com/in/title/80238021?source=35
9. https://yrgcare.org/wp-content/uploads/2015/10/HIV_in_India.pdf

புகைப்பட நன்றி: YRG CARE.

Understanding Periyar’s feminism – a short note.


Anchor Rangaraj Pandey had recently aired a video which claimed to debunk Periyar and expose how his views on women are problematic. A quick intervention in this regard.
This video offers nothing new. I guess Sumanth Raman and Rangaraj hadn’t read Periyar much. Why women were enslaved was an important intervention in Indian thinking. He begins with article of Suguna Diwakar ( https://www.vikatan.com/government-and-politics/politics/60186-contribution-of-periyar-towards-womens-rights) and goes on to quote by selective picking. How inviting women who re living alone, widows, sex workers for self respect movement is against women? It is an act that moves beyond patronising reformist politics.
On question of polygamy, Periyar says that he is ready to accept the same if polyandry is accepted by men. He with a witty scalpel peels out male privilege and exposes hypocrisy of patriarchy with his humor. And in the process questions brahminical gods too.

Rangaraj quotes titles from newspapers edited by Periyar. Even while quoting from the above mentioned piece he does nitpicking. See the images to get an idea. Omits titles like ‘Freedom of Women is essential for achieving Social equality’.

Rangaraj goes on to accuse that Periyar says ‘In nation of men there is no space for women’. Professor Sunil khilnani his essay ‘Sniper of the sacred cows’ takes this question how Republic of Indian women with Periyar’s ideas would have looked like. (The translation in tamil is here: https://saravananagathan.wordpress.com/2016/12/24/புனிதங்களைப்-பொசுக்கியவ/amp/)

Rangaraj in his interviews with Dravidian leaders used to parrot that Dravidian movement hadn’t criticised other faiths and does minority appeasement. This quote contradicts that accusation. And check how Periyar condemned ills across various religions: https://m.facebook.com/permalink.php?story_fbid=155551214621482&id=137250963118174

Pandey again cleverly nitpicks and selectively quotes from ‘பெண் ஏன் அடிமையானாள்’. It is a remarkable work which came much before Second Sex. For English translation of the work by meena. kandasamy. Check: Why women were enslaved.
Pandey takes offense with Periyar calling for annihilation of masculinity. It is nothing but the source of women’s slavery. So, he waged all out attack on the same. Check the image:

Source: https://www.jstor.org/stable/3517871?seq=1

Then comes the quote about cinema actresses. This is the piece quoted: . In this he urges women to look beyond portrayals of women as makeup dolls and strive for fame, bravery, social service. He also wants non brahmin women to participate in politics.

http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-dec19/39489-2020-01-10-08-37-59
The following two images would elucidate how Periyar envisioned an equal marriage in which both genders had the liberty to part ways, make choices, defy sacredness associated with unhappy marriages. He clearly states satisfaction & joy in marriage is essential.

These quotes from the show by Rangaraj clearly shows what an eternal humanist Periyar is! Rangaraj is not clearly happy with the fact that Periyar bats for comforts, rights of women on par with women so that they attain satisfaction, pleasure and fulfilment of their desires :


There is much more to read and explore. Here vintage Periyar links patriarchy, masculinity and child birth. In an act of iconoclasm, he asks women to shed their uterus. He further criticised men for seeing women as child bearing machines. He had vocally urged men to undergo birth control. Further, this is not to be seen just in Western scientific notions of birth control. ‘There is a basic difference between our insistence on birth-control & other’s notion of birth-control.They have only thought of family & national welfare through birth-control. But we are only concerned about women’s health & women’s independence’ – Kudi Arasu 14-12-1930.
By defining Birth control beyond national welfare and scientific temper Periyar as prof Anupama Rao argues sees women as equals & transcends patronising, narrow limits of nationalist upper caste reformers. Periyar was well ahead of his times. And by misquoting, selectively quoting and trying to fit him in Pantheon of leaders who played to the podium Rangaraj errs. Periyar was sniper of the sacred cows. His attacks on brahminical patriarchy is of utmost importance even today. 16/16

”Pornstar என அழைப்பது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.” – மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்


BBC Hard Talk நிகழ்வில் மியா காலிஃபா தன்னுடைய கடந்த காலம், தொடரும் பயணம், அடிப்படைவாதிகளிடம் இருந்து வந்த மிரட்டல்கள், கலவையான உணர்ச்சிகள் என்று பலவற்றைப் பேசினார். (https://www.youtube.com/watch?v=i2qplvJ6SLs) உரையாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உரையின் மூலத்தை தட்டச்சு செய்து கொடுத்த தோழர் Nivaas Sudhan -க்கு நன்றி !

நேர்முகம் செய்பவர்:

வணக்கம் நான் ஸ்டீபன் சேக்குர். இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளப்போகும் விருந்தினர் மியா காலிஃபா. 16 மில்லியன் followers உடன் instagram -ல் உலா வருகிறார். அவருடைய பெயரை கூகுள் செய்தால் அளவற்ற தேடல் முடிவுகள் தோன்றும். இப்படி உலகப்புகழ் பெற்ற ஒருவராகத் திகழ்வதைக் குறித்து மியா பெருமைப்படவில்லை. இந்தப் புகழ் 2014-ல் ஃபோர்ன் துறையில் பணியாற்ற அவர் செய்து கொண்ட மூன்று மாத ஒப்பந்தத்தால் கிட்டிய ஒன்று.

இத்துறையை விட்டு வெளியேற முடிவு செய்வதற்கு முன்பு வரை 12 காணொளிகளில் மட்டுமே அவர் பங்களித்து இருந்தார். அதில் ஒன்று உலகளவில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இஸ்லாமிய ஹிஜாப் அணிந்தபடி அவர் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அது பலத்த கண்டனங்கள், கொந்தளிப்பை சம்பாதித்துக் கொடுத்தது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

லெபனான் நாட்டில் கிறிஸ்துவப் பெற்றோருக்கு பிறந்த மியா சிறுமியாக இருக்கும் போது குடும்பத்தோடு அமெரிக்காவின் மேரி லாண்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார். இளம்வயதில் பாதுகாப்பின்மையால் சூழப்பட்டவராக, கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுப்பவராகத் திகழ்ந்த மியா தனக்கு நேர்ந்தவை குறித்து மனம்திறந்து உரையாட இருக்கிறார்

நே: எப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி. 16 மில்லியன் பேர் உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ஆனால் , இந்தப் புகழிற்கு நீங்கள் போர்ன் துறையில் குறுகிய காலம் ஈடுபட்டதே காரணம். இதை எதிர்கொள்வது உங்களுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா?

மியா : ஆமாம். நான் அத்துறையை விட்டு வெளியேறியதும் என்னுடைய இன்ஸ்டா கணக்கை அழித்தேன். இல்லை. சரியாகச் சொல்வது என்றால், ஐ எஸ் ஐ எஸ் ஆதரவாளர்கள் என்னுடைய கணக்கை கைப்பற்றி, அதில் தங்களுடைய பரப்புரைகளைப் பதிந்து கொண்டே இருந்தார்கள். இன்ஸ்டாகிராம் அந்தக் கணக்கை தூக்கிவிட்டது. இன்னொரு கணக்கை ஓராண்டிற்கு நான் உருவாக்கவில்லை. உலகம் ஏளனமாகப் பார்க்கும் ஒரு போர்ன் நட்சத்திரம் என்கிற என்னுடைய தலைவிதியை ஏற்றுக்கொண்டேன். என்னைப்பற்றி நிலவும் பார்வையை மாற்ற முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு இன்ஸ்டா கணக்கை மீண்டும் துவக்கி, வேறு நல்ல வார்த்தை தோன்றவில்லை என்பதால் influencer ஆக முயன்றேன் எனச் சொல்லலாம்.

நே: உங்கள் பெயரை வேலை நிமித்தமாகக் கூகுள் செய்தால் “போர்ன்ஸ்டார்’” என்று தான் உடனே வருகிறது. இதனை எவ்வளவு முயன்றாலும் உங்களால் கடந்துவிட முடியாத இல்லையா? எவ்வளவு மெனக்கிட்டாலும்

மியா: இது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

நே: நீங்கள் அப்படித்தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லவில்லை. அப்படிதான் இணையம், தொழில்நுட்பம் இயங்குகிறது என்கிறேன்

மியா : கூகுளுக்கு எனக்கும் நல்ல உறவு இல்லை என்பது உண்மை தான். அதனை மாற்ற முயன்று கொண்டே இருக்கிறோம். நான் நடத்துவதாக அறிவித்துக் கொள்ளும் ஒரு தளத்தோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதனை எந்த வகையிலும் நான் கட்டுப்படுத்தவில்லை. என்னைக் குறித்த விக்கிபீடியா பக்கத்திலும் மியாவின் அதிகாரப்பூர்வ தளம் அது என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தத் தளத்தை முடக்கச் சட்டப்படி பலமுறை முயன்று பார்த்தாகிவிட்டது. பலமுறை தளத்தை மூட அவர்கள் கேட்பதை தருவதாகப் பேசியும் ஆகிவிட்டது. ஒன்றும் மாறவில்லை.

நே: ஒவ்வொன்றாகப் பேசுவோம். எப்படி லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து நன்றாகப் படித்து டெக்ஸாஸ் பல்கலைக்குள் நுழைந்த நீங்கள் போர்ன் துறைக்குள் அகப்பட்டுக் கொண்டீர்கள்?

மியா: தாழ்வு மனப்பான்மை பாகுபாடு பார்க்காமல் எல்லாரையும் ஆட்கொள்கிறது என்று நினைக்கிறேன். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தீர்களா, பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தீர்களா என்பதை எல்லாம் பார்த்துத் தாழ்வுமனப்பான்மை வருவதில்லை. நான் குழந்தையாக இருக்கும்போது பருமனாக மட்டுமே இருந்தேன். கவர்ச்சிமிக்கவளாக அல்லது ஆண்களை வசீகரிக்கும் தகுதி கொண்டவளாக உணர்ந்ததே இல்லை. சிறு சிறு மாற்றங்களைச் செய்த போது, கல்லூரி முதல் ஆண்டில் நான் எடை இழக்க ஆரம்பித்தேன். பட்டப்படிப்பை முடித்த போது ஆளே மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 50 பவுண்ட் எடை குறைந்த போதும், என் மார்பகங்கள் குறித்தே அதீதமாகக் கவனம் செலுத்தினேன். இந்த எடையை எப்படிக் கிலோகிராம் கணக்கில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை

நே: அது உங்களின் உடற்தோற்றத்தையே மாற்றியிருக்கும் இல்லையா?

மியா: ஆமாம். என்னுடைய மார்பகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதே மிகப்பெரிய கவலையாக அரித்துக் கொண்டிருந்தது. எது இயல்பான அளவோ அந்தளவுக்கு என்னுடைய மார்பகத்தை மாற்ற முயன்றேன். அது ஒருவழியாக நடந்ததும், ஆண்களின் எல்லாக் கவனமும் என் மீது குவிந்தது. இதை எல்லாம் அதற்குமுன்பு எதிர்கொண்டதே இல்லை. இப்படித் தாழ்வுணர்ச்சியில் உழன்று கொண்டிருந்துவிட்டு முதன்முறையாகக் கிடைத்த அங்கீகாரம், புகழ் மொழிகள் என்னைப் பரவசம் கொள்ள வைத்தன. அதனை இழந்துவிடக்கூடாது என்று விரும்ப ஆரம்பித்தேன்.

நே: முதன்முறை சாலையில் யாரோ கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த உங்களைப் பார்த்து “போர்ன் தொழிலில் ஈடுபட விருப்பமா” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லாமல் எது இதற்குள் நுழைய உங்களை உந்தித்தள்ளியது?

மியா: அப்படி யாரும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. மாடலிங் பண்ண விருப்பமா. உங்க உடல்வாகு அப்படி அசத்தலா இருக்கு. நீங்க nude modeling பண்ணா பிரமாதமா இருக்கும்” என்று பேசினார்கள். நான் ஸ்டூடியோவிற்கு வந்தேன். மியாமியில் அந்த இடம் இருந்தது. அது பார்வைக்கு அவ்வளவு அழகாகக் காட்சியளித்தது. அவ்வளவு சுத்தமாக இருந்தது. வேலை பார்த்தவர்கள் எல்லாரும் அவ்வளவு கனிவாக நடந்து .கொண்டார்கள். அவர்களின் அறைகளில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் காணப்பட்டன. எனக்குச் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் எதுவுமே இல்லை. எதுவும் என்னைச் சங்கடப்படுத்தவில்லை. முதல் முறை போர்ன் படம் எடுக்கவைக்கவில்லை. “இந்த ஒப்பந்தத்தில் இங்கே கையெழுத்து போடு இன்னும் பிற” என்றே நகர்ந்தது. இரண்டாவது முறை தான் படம் பிடித்தார்கள்

நே: உலக அனுபவம் இல்லாத இளம்பெண்களை வேட்டையாடும் நபர்கள் பற்றிக் குறிப்பிட்டதால்கேட்கிறேன். மேற்சொன்னவை நடந்த போது உங்களுக்கு 21 . இப்போது உங்களுக்கு 26 வயதாகிறது. வயது. இந்தக் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கையில் ‘நான் இப்படிப் போய்ப் பலியானேனே’ என்கிற உணர்வு ஏற்படுகிறதா? அந்த 21 வயது பெண்ணை அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டாரகள், அவள் பாதிக்கப்பட்டவள் என்று தோன்றுகிறதா?

மியா: தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் கருவிகள் அப்போது அவள் வசம் இல்லை என்றே உணர்கிறேன். அவளிடம் பொய்களை அள்ளி வீசுகிறார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. பொய்கள் என்பதைவிட அவர்களுக்கு ஏற்றவாறு அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களுக்கு வேண்டியதை அவளைக்கொண்டு முடித்துக் கொண்டார்கள். உண்மையில் என்னைப் பாதிக்கப்பட்டவள் என்று கருதவில்லை. அந்த வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் எடுத்த முடிவுகள் மோசமான முடிவுகள் என்றாலும் அம்முடிவுகளை நான் தான் எடுத்தேன். பெண்கள் அணுகப்படுகிற விதம் மாறவேண்டும் என்று எண்ணுகிறேன்.

நே: பல கோடிகள் புரளும் துறை. இதன் உயிர்நாடியாகக் கேமிராவின் முன்னால் கலவியில் ஈடுபட வேண்டுமென்று பணிக்கப்பட்ட, அதற்கு ஒப்புக்கொண்ட இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் இருக்கிறார்கள். பல கோடி பேரால் பார்க்கப்படும் இந்தக் காணொளிகளின் உருவாக்கத்தை எந்தளவிற்கு உங்களால் கட்டுப்படுத்த இயலும்?

மியா : கிட்டத்தட்ட எதுவுமே இல்லை. அதிகபட்சம் இந்த மேலாடையை அணிய மாட்டேன் என்றுசொல்லலாம். எதைப் படம் பிடிக்கிறார்கள், அதன் உள்ளடக்கம், பேசுபொருள், எங்குப் படம்பிடிக்கப்படும் என்று எதையும் நாங்கள் முடிவு செய்ய முடியாது.

நே: இவற்றைப் பார்க்கும் வெளியாளாக இதில் ஈடுபடுபவரின் ஒப்புதல் அடிப்படையான, முக்கியமான கொள்கையாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பாத பாலியல் செயலை உங்களை அவர்கள் செய்யச் சொன்னால் ….

மியா: இல்லை. அவர்களால் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. இல்லவே இல்லை.

நே: சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுவாரசியமாகப் பேசியிருந்தீர்கள். இந்தப் பாலியல் காணொளிகளுக்காக இயங்குகையில், மொத்தமாக எல்லாமே இருண்டு போனதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்றும், திரும்பி பார்க்கையில் பல விஷயங்களைத் தெளிவாக நினைவுகூர முடியவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். இந்தத் துறைக்குள் ஆழமாகக் கால் பதிக்க ஆரம்பித்த போது உங்கள் மண்டையில் என்ன ஓடிக்கொண்டிருந்தது

மியா: அந்தப் பேட்டியின் போது எனக்கு அகப்படாமல் போன சொல்- அட்ரினலின். என்னுடைய அட்ரினலின் சுரப்பி அதீதமாகச் சுரந்து எனக்கு என்ன நடக்கிறது என்பதோ, நான் என்னவெல்லாம் செய்வேன் என்று கற்பனை செய்தேனோ அதனைத் தாண்டி என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறேன். தலைக்கு ஏறிய அட்ரினலினால் எதையும் திரும்பிப்பார்க்கையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக நினைவுகூர முடியவில்லை.

நே: இதைப்பற்றியெல்லாம் இப்போது பேசுவது சங்கடமாக இருக்கிறதா?

மியா: ஆமாம் ஓரளவிற்கு

நே: நீங்கள் அரேபிய வம்சாவளியில், லெபனானில் பிறந்தவர். அரேபிய கலாசாரம் ஒட்டுமொத்தமாகப் பழமைவாதத்தில்ஆழமாகத் தோய்ந்து போன ஒன்று. அந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த படலத்தை உரித்து எறிந்து விட்டு இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததா?

மியா: இருக்கலாம். இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதி எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு, என்னுடைய எல்லைகளை, பண்புகளைத் தாண்டி எதையேனும் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தில் என்னையே நான் அதிரவைக்கிற செயல்களில் ஈடுபட்டேன் என்று எண்ணுகிறேன்.

நே: இது உங்கள் குடும்பத்துக்குத் தெரியாதில்லையா?

மியா: நான் என்ன செய்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்ததும் என்னை மகளே இல்லை என்று தலைமுழுகி விட்டார்கள்.

நே: அது பெருந்துயரமாக இருந்திருக்கும் இல்லையா

மியா: இந்த உலகம் மட்டுமல்ல என்னுடைய குடும்பம், என்னைச் சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இந்தத் துறையை விட்டு வெளியேறிய பின்னர்த் தான் நான் இன்னமும் தனிமையானவளாக உணர்ந்தேன். சில தவறுகளை மன்னிக்க முடியாது என்று உணர்ந்துகொண்டேன் என்கிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

நே: இந்தத் துறையின் இன்னொரு வகையான இயங்கியல் குறித்துச் சொல்லுங்கள். இந்த அதிகாரம், ஆதிக்கம், பணம். ஆபாசமான ஆண்கள், பெண்கள் குறித்துப் பேசினோம். உங்களுக்குத் தெரிந்தவரை இந்தத் தொழிலில் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பெண்கள் இருக்கிறார்களா?

மியா: நிச்சயமாக. இத்துறைக்குள் வருபவர்கள் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர் இனிமையானவர், மரியாதைமிக்கவர், கண்ணியமானவர… விற்பனை, வரிப் பக்கம் பல பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எப்படி இந்தவேளைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று கேட்பேன். வாய்வழி செய்தியா? இல்லை நண்பர்களின் மூலமா என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

நே: இந்தத் துறையின் பணம் கொழிக்கும் பக்கம் அசாதாரணமானது இல்லையா? நீங்கள் இஸ்லாமிய ஆடையான ஹிஜாப் அணிந்து கொண்டு தோன்றும் காணொளி pornhub ல் வெளிவந்தது. அதன்மூலம் நீங்கள் நம்பர் 1 போர்ன் நடிகையாக ஆனீர்கள். நீங்கள் நடித்த காணொளிகளைப் பல கோடி பேர் கண்டார்கள். அந்த 12 காணொளிகளுக்கும் உங்களுக்கு மொத்தமாக 12,000 டாலர் மட்டுமே தரப்பட்டது. ஆனால், நீங்கள் பணியாற்றிய Bang Bros நிறுவனம் மற்றும் pornhub இரண்டும் கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டின. ஏன் இப்படி?

மியா: அது அப்படித்தான். எனக்கு மட்டும் இப்படிச் செய்தார்கள் என்றில்லை. எனக்கு மட்டும் மோசமான ஒப்பந்தமோ, மேலாளரோ கிடைத்தார் என்றில்லை. எனக்கு என்று மேலாளர், ஏஜென்ட் இருந்தார்கள். ஆலோசகர்கள் யாருமில்லை. யாருமே இல்லை.

நே: இல்லையா? உங்களுக்கு 21 வயது தான் ஆகியிருந்தது. குழந்தைப்பருவத்தைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு கடந்த உங்களுக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லையா?

மியா : இல்லை. மனித மூளை முழுமையாக வளர்ச்சியடைய 25 வயதாகும். என்னுடைய மூளையில் இருந்த முடிவெடுக்கும் பகுதி முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும், எது தவறு என்றெல்லாம் சொல்ல யாருமே இல்லை.

நே: இது போர்ன் தொழிலின் பண்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஒரு காணொளியில் தோன்றுவீர்கள். அது சாசுவதமாக இருக்கும். பல லட்சம் பேர் காண்பார்கள். எவ்வளவு நீங்கள் பிரபலம் ஆனாலும், நம்பர் 1 நாயகி என்று ஆனாலும் எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது. எகிறிக்கொண்டிருக்கும் உங்கள் புகழால் உங்களுக்கு ஒரு பயனுமில்லை.

மியா : ஆமாம். ஒன்றுமே கிடைக்காது. இன்றுவரை இந்த ஒப்பந்தங்கள் இப்படித்தான் போடப்படுகின்றன.

நே: இதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டும். நான் முதலிலேயே நீங்கள் ஹிஜாப் அணிந்து தோன்றிய காணொளி குறித்துப் பேசினேன். அதில் உங்களைத்தவிர மூன்று இளைஞர்களும் தோன்றினார்கள். அது பின்னர்க் கலவி காட்சியாக மாறுகிறது. அது உசுப்பேற்றக் கூடிய ஒன்று என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மியா: “நீங்க என்னைக் கொல்ல பாக்குறீங்க” என்று நான் சொன்னேன். அவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.

நே: நீங்கள் ஏன் இதில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை..

மியா: அச்சுறுத்தல். நான் பயந்து போயிருந்தேன். நான் முடியாது என்று சொன்னால் அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்த போவது கிடையாது என்று எனக்குத் தெரியும். அப்படி அவர்கள் கட்டாயப்படுத்தினால் அது வன்புணர்வு. என்னை யாரும் கட்டாயப்படுத்திப் புணரப்போவதில்லை. ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது … மனந்திறந்து பேச படபடப்பாக இருந்தது. நீங்கள் ஒரு உணவகத்துக்குப் போகிறீர்கள். சிப்பந்தி “எப்படி இருக்கு சாப்பாடு எல்லாம்?” என்று கேட்கிறார். “சாப்பாடு நல்லாவே இல்லை” என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்ல யோசிப்பீர்கள் இல்லையா. நான் பயந்து போயிருந்தேன். பதற்றமாக உணர்ந்தேன்.

நே: ஆண்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிற இத்துறையில் அந்த ஆண்களுக்கும், 21 வயது இளம் நடிகைக்கும் இடையேயான அதிகார இயங்கியலில் விருப்பம் என்கிற கருத்தாக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்கிறீர்களா.

மியா : அதேதான் நான்கு ஆண் தயாரிப்பாளர்கள் இருக்கிற அறையில் நீங்கள் ‘என்னைக் கொல்ல பார்க்கிறீங்க’ என்கிற ரீதியில் எதையோ சொல்கிறேன். அவர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். அது எதோ ஒரு வகையில் உலுக்கிவிடுகிறது. அதற்குப்பிறகு பேசவோ, மீண்டும் எதையாவது சொல்லவோ வாயே வராது. நிறுவனத்தின் தலைவர், CEO எல்லாம் உட்கார்ந்து கொண்டு ஒப்பந்தத்தைப் படிக்கச் சொல்வார்கள். அவர்கள் முன்னே உட்கார்ந்து கொண்டு படிக்கையில் ஒன்றுமே மண்டைக்கு ஏறாது. யாரோ நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணமே பதற்றத்தை எகிற வைக்கும்.

நே: நீங்கள் படத்தளத்தை விட்டு வெளியேறியதும் இது பேரிடராக மாறப்போகிறது என்று மனம் எச்சரித்ததா?

மியா: அட்ரினல் தலைக்கேறி இருந்ததால் எனக்கு அப்போது ஒன்றுமே தோன்றவில்லை. அது வெளிவந்த நாள் என் மொத்த உலகமும் சின்னாபின்னம் ஆகியிருந்தது. நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறேன் என்று என்னை அறிந்தவர்கள் யாருக்கும் தெரியாது என்பதால் தான் இதில் இயங்கிக்கொண்டு இருந்தேன். பலலட்சம் பெண்கள் தாங்கள் கலவியில் ஈடுபடுவதைப் படமாக எடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளியே வருவதே இல்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டு கொள்வதுமில்லை. அவர்கள் யாரென்று யாருக்கும் தெரிவதில்லை. என்னுடைய அசுத்தமான சிறு ரகசியம் என்னோடு மட்டுமே இருக்கும் என்பதாலேயே இதில் இருந்தேன். இந்தக் காணொளி எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.

நே: அது படத்தைத் தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள் பார்வையில் பெரும் வெற்றி. எடுத்த உடனே லட்சக்கணக்கான பேர் பார்த்திருந்தார்கள்.

மியா: என்னை “குடுவைக்குள் ஒளிரும் மின்னல்” என்று அழைத்தார்கள்.

நே: உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமோ வேறு. ஹிஜாப் அணிந்த போர்ன் நட்சத்திரத்தின் முகம் உலகத்துக்கே தெரிந்திருந்தது.

மியா: ஆமாம் . நிறையக் கொலை மிரட்டல்கள் ஐ எஸ் ஐ எஸ் அனுதாபிகள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் இருந்து குவிந்தது. நான் தலை துண்டித்துக் கிடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘அடுத்து நீ தான்டி’ என்று நாள் குறித்தார்கள்.

நே: தனியாளாக இதை எதிர்கொண்டிருப்பீர்கள். உங்கள் குடும்பத்தோடு கூட இதைப்பற்றிப் பேச முடியாது என்பது உங்களை வெலவெலத்து போக வைத்திருக்கும் அல்லவா?

மியா : இல்லையில்லை. பயமாகத்தான் இருந்தது. ஆனால், அதனை நகைச்சுவையோடு தான் எதிர்கொண்டேன். அந்த மிரட்டலுக்கு வேடிக்கையாக இப்படிப் பதில் சொன்னேன், “என் மார்பகங்களை வெட்டாதவரை ஒன்றும் பிரச்சினையில்லை. அவை விலை மதிப்பில்லாதவை” .

நே: இது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையே சின்னாபின்னம் ஆகியிருந்தது என்று சொன்னீர்கள். நீங்கள் செய்ததற்கு எந்தளவுக்குத் தனிப்பட்ட அளவில் பொறுப்பெடுத்துக் கொள்வீர்கள்.

மியா: 100 % நான் தான் பொறுப்பு. நான் எடுத்த முடிவு. அந்தத் துறை குறைகளால் ஆனது பெண்கள் இந்தக் குழிக்குள் விழாமல் தடுக்க நாம் எதையாவது செய்ய வேண்டும். ஆனால், இறுதியாக அந்த முடிவு என்னுடைய முடிவு.

நே: உங்களைப் பணம் கொட்டுகிற இயந்திரமாகத் தான் பார்த்தார்கள் இல்லையா. உங்களுக்கு என்று ஆலோசகர்கள், வழக்கறிஞர் என்று யாருமே இல்லையா?

மியா: அப்படித்தான் பார்த்தார்கள். 21 வயதில் எந்தப் பெண்ணுக்கு ஆலோசகர், வழக்கறிஞர் எல்லாம் இருக்கிறார் சொல்லுங்கள்.

நே: இது எவ்வளவு மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்கிறேன். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் இப்போது சலனமில்லாமல் காணப்படுகிறார்கள். அதனைக் கடந்து வந்திருப்பீர்கள். ஆனாலும், அந்த மன உளைச்சலில் ரணங்கள் இன்னமும் இருக்கின்றனவா

மியா: ஆமாம். குறிப்பாகப் பொது இடங்களுக்குப் போகிற போது அந்த உளைச்சல் என்னை நெரிக்கிறது. என்னை அப்படியே மக்கள் வெறித்துப் பார்க்கிறார்கள். என்னுடைய ஆடைக்குள் துளைத்துக் கொண்டு பார்ப்பதாக உணர்கிறேன். எனக்குள் ஆழமான அவமானத்தை அது உண்டாக்குகிறது. நான் எப்படி உணர்கிறேன் தெரியுமா? எனக்கென்று இருந்த அக உரிமை (privacy) எதுவும் கிடையாது. நான் இவர்களுக்கு ஒரு கூகுள் தேடல் தூரம் மட்டுமே..

நே: இந்தப் புகைப்படங்களை நீங்கள் இணையத்தில் இருந்து அகற்ற முடியாது. அது உங்களுடைய மனதுக்கு உளைச்சலை தரும் ஒன்று என்றாலும் யாருடைய பார்வையில் இருந்தும் அவற்றைக் காணடிக்க முடியாது. இதே நிலைமைதான் பிற போர்ன் நடிகர்களுக்கும் இல்லையா?

மியா: நான் கண்முன் இதனைக் காண்கிறேன். சமீபத்திய நேர்முகத்திற்குப் பின்பு பலர் தொடர்பு கொள்கிறார்கள். பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்கள், போர்ன் துறைக்குள் இழுத்து வரப்பட்டவர்களின் கேவல்கள் அவை. எப்படி இந்தப் பெண்களின் வாழ்க்கை சீரழிந்துபோயிருக்கிறது என்றும், இந்த ஒப்பந்தங்களால் ஆண்கள் மட்டும் எப்படிக் கொழிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவருகிறது. இவையெல்லாம் “நாம வெளிப்படையா பேசுனதால என்னைப்போலவே உணருற மத்த பொண்ணுங்க கூடப் பேச முடியுது” என்று தோன்றவைக்கிறது. என்னளவிற்கு ஆழமாகக் காயப்படாவிட்டாலும், பாதுகாப்புணர்வு இல்லாமல் தவிப்பது, தாங்கள் விரும்பாத ஒன்றை கட்டாயத்தின் பேரில் செய்வதைப் புரிந்து கொள்கிறார்கள்.

நே: உங்களுக்கு இந்தத் தளம் கிடைத்து இதைக்குறித்து எல்லாம் பேசுகிறீர்கள். கடந்த காலத்தில் இருந்து வேறுபட்டுச் சமூகம் எப்படிப் போர்னோகிராபியை பார்க்கிறது என்பதையும், அதில் ஈடுபடுபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் மாற்ற முனைகிறீர்கள் எனக்கருதலாமா ?

மியா : பெண்கள் எப்படிப் போர்ன் துறைக்குள் இழுத்து வரப்படுகிறார்கள் என்பது மாற்றப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். பெண்களாகவே விரும்பினால் மட்டுமே உள்ளே வர முடியும், அவர்களை யாரும் அழுத்தம் தந்து இழுத்து வரமுடியாது என்று நிலைமை மாற வேண்டும். அங்கேயே, அதே இடத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்த இயலாது. அதனை ஒரு வழக்கறிஞர் படித்துப் பார்க்க வேண்டும், பொறுமையாக வீட்டில் சில நாட்கள் படித்துப் பார்த்துவிட்டு ஒப்புக்கொள்ள வசதி வேண்டும்.

நே: உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகள் ‘போர்ன்மயமாக்த்தில்’ சிக்குண்டு கிடக்கின்றன. அதுவும் குறிப்பாக இளைஞர்கள் இவற்றில் மூழ்கிப்போவது ஆண், பெண் இருதரப்புக்கும் இடையேயான உறவை, அணுகும் விதத்தைப் பெருமளவில் அரித்து அழிக்கிறது என்கிற பார்வை ஒரு தரப்பிடம் நிலவுகிறது . உங்களின் பார்வை என்ன ?

மியா : நிச்சயமாகப் போர்ன் உறவுகளைச் சீர்குலைக்கிறது. போர்ன் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதனையே தங்கள் வாழ்வினில் வரும் பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பது அபத்தமானது. காணொளியில் காண்பிக்கப்படுவது உண்மையில்லை. அவ்வளவு கச்சிதமானவர் யாருமில்லை. ஒரு புதன்கிழமை இரவு இத்தகைய நம்ப முடியாத செயல்களைக் காதலிக்கும் ஒருவரிடம் யாராலும் செய்ய முடியாது.

நே: நாம் நிறையப் பேசிவிட்டோம். கரடுமுரடான பயணமாக இருந்திருக்கும். மிகக் குறுகிய காலம் இருந்த ஒரு துறையில் இயங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்னமும் உலா வருவதைக் கடந்து வேறுபட்ட வாழ்க்கையை, உங்களைப் போர்னில் ஈடுபட்டவர் என்கிற கோணத்தில் இருந்து பார்க்காத உறவுகளை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா?

மியா: என்னைப்பற்றி எதுவுமே கேள்விப்பட்டிருக்காத ஒரு ஆணை கண்டடைந்தது பெரும்பேறு. அது அற்புதமானது. நாங்கள் பேச ஆரம்பித்த பிறகு, இதைக்குறித்துச் சொன்னேன். “நாம் பேச ஆரம்பித்த பிறகு உன்னைப்பற்றித் தேடினேன். 5 மில்லியன் பேர் பின்தொடரும் உன்னைப்பற்றிக் கூகுள் செய்யாமல் இருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை” என்று அவர் சொன்னார். என்னுடைய கடந்த காலத்திற்குப் பிறகு டேட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது. ஆண்கள் யாரும் கிடைக்கவில்லை என்றல்ல பொருள். அதற்குள் மூழ்கிப்போய் இருக்காத ஒருவரை கண்டடைவது சவாலானதாக இருந்தது. புரியும் என்று எண்ணுகிறேன்.

நே: 21 வயது மியாவை ஃபுளோரிடா நகரத்தில் நிறுத்தி ‘நீங்கள் அழகாக இருக்கீங்க நீங்க அட்டகாசமா தெரியுறீங்க. எங்ககூடச் சேர்ந்து வேலை செய்வீங்களா’ என்று ஒரு இளைஞன் நிறுத்தி பேசுகையில், மியாவிடம் நீங்கள் பேச முடியும் என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்வீர்கள்?

மியா: உன்னுடைய பர்ஸில் இருக்கும் ஆயுதம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனை உபயோகப்படுத்து. அங்கிருந்து ஓடிவிடு மியா

நே: மியா காலிஃபா, hardtalk நிகழ்வில் உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல.

மியா : என்னை அழைத்தமைக்கு நன்றி!

தமிழில் : பூ.கொ.சரவணன்

உயரே, கேம் ஓவர் -போராளிகளின் கதை


கடந்த சில வாரங்களில் ‘உயரே’,’கேம் ஓவர்’ திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. இரு திரைப்படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. பார்வதி, டப்ஸி எனப் பெண்களைச் சுற்றியே இக்கதைகள் சுழல்கின்றன. நம்பிக்கையும், வெளிச்சமும், தேடலும் பாய்ந்தோடி கொண்டிருந்த இருவரின் வாழ்விலும் ஆண்களின் வன்மம் மிகுந்த வன்முறையால் அச்சமும், தற்கொலை எண்ணமும் சூழ்கிறது. இதனை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள்? மீண்டார்களா இல்லை மடிந்தார்களா என்பது கதையைச் செலுத்தும் மையச்சரடு எனலாம்.

‘உயரே’ பல வகைகளில் நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் உயரே பறக்க முனையும் பெண்களை இயல்பாக முன்னிறுத்துகிற கதை. அதில் மிகைப்படுத்தல் என்பது கிட்டத்தட்ட எங்கேயும் இல்லை. ஒரு பைலட்டாக மாறிவிட வேண்டும் என்கிற குழந்தைப் பருவக்கனவு பார்வதியை செலுத்துகிறது. எப்போதும் உயரத்தில் உலவ வேண்டும் என்கிற கனவு கண்களில் மின்னுகிறது. அவளின் தந்தை செல்ல மகளின் கனவிற்காகத் துணை நிற்கிறார். உற்ற நண்பனாகத் தந்தை எப்படித் திகழ முடியும் என்பதை அவரின் பாத்திர வார்ப்பின் மூலம் இயல்பாகக் கடத்தி விடுகிறார்கள். தன்னுடைய மகளின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் உலகமே தனக்குச் சொந்தமானதை போல அவர் குதூகலிப்பது மனதை நெகிழ வைக்கிறது. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன் மகளின் பயணத்தில் அவரும் பங்கு கொள்கிறார்.

‘கேம் ஓவர்’ திரைப்படம் இப்படி இதமான அனுபவத்தை எந்தக் கணத்திலும் தருவதில்லை. படபடப்பும், நடுக்கமும், நாடித்துடிப்பை ஏற்றும் இசையும் தான் படம் முழுக்க நம்மைப் பீடிக்கிறது. டப்ஸியின் உலகம் இருளைக் கண்டு அஞ்சுவதாகவே இருக்கிறது. கடந்த காலம் அவரைக் கதவடைத்துக் கொண்டு அருவருப்போடும், ஏளனமாகவும் பார்க்கும் நிகழ்காலத்தைப் பார்க்க விடாமல் தடுக்கிறது. உளவியல் த்ரில்லரா, பேய்ப்படமா, பெண்ணியப் படமா என்று எந்த வகைமைக்குள்ளும் அடங்காமல் ஒரு கேமரின் வாழ்க்கையைப் போராட்டங்களோடு படம் விரித்துச் சொல்கிறது.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இரு திரைப்படங்களின் முதல் காட்சியுமே பரபரப்பாகவே துவங்குகிறது. ஒன்று உடைந்து விழப்போகும் விமானத்தைக் காப்பாற்ற முயலும் படபடப்பு தரும் காட்சிகள் வளர்வதைக் காட்டுகிறது. இன்னொன்று ஒரு பெண்ணைக் கொன்று, பந்தாடும் சில்லிட வைக்கும் காட்சிக்கோர்வையைச் சடசடவென்று கண்முன் பரப்பி நம்மையும் அந்த ‘pacman’ ஆட்டத்திற்குள் இழுத்து கொள்கிறார்கள்.

*spoilers ahead*
பள்ளிக்காலக் காதல் பார்வதியின் கனவுகளை முடக்கிப் போட பார்க்கிறது. சந்தேகமும், அதீத கட்டுப்பாடும் பிரியத்தை முறித்துக் கொள்ள முனைகையில் எல்லாம் வாஞ்சையாகக் காதலனை அணைத்து இறுகப்பற்றிக் கொள்கிறார் பார்வதி. ஆனால், மிகைத்த அடக்குமுறை ஒரு கட்டத்தில் பிரிவாக வெடிக்கிறது. பார்வதியின் முகத்தில் அமிலம் வீசுகிறான் அந்தக் கொடூரன். சீக்கிரமே விமானியாகி வானில் சிறகடிக்கப் போகிறோம் என்கிற கனவு குப்புற விழுகிறது.

ஒரு ஆணின் கண நேர உணர்ச்சி வேகம் எப்படிப் பெண்ணின் வாழ்நாள் வேதனையாக மாறிவிடுகிறது என்பதைப் படிப்படியாகக் கண்முன் கொண்டு வருகிறார்கள். அமில வீச்சு தன்னம்பிக்கையும், பெருங்கனவுகளும் கொண்ட ஒரு ஆளுமையை எப்படி உடைத்துப் போடுகிறது என்பதைக் காட்சிகள் கடத்துகின்றன. என்னமோ நம் மேனியில் அமிலம் பட்டு எரிவதை போன்ற பதைபதைப்பை அடுத்தடுத்த கணங்கள் கடத்துகின்றன. நம்முடைய பாலினத்தைக் கடந்து பார்வதியாகவே நாமும் உணர நேர்கிற அளவுக்கு நேர்த்தியான காட்சியமைப்பும், நடிப்பும் இணைகின்றன.

டப்ஸியின் வாழ்வில் இருளும், ஒரு டாட்டூவும் வெளிவரவே முடியாது என்று நம்புகின்ற அளவுக்கான வடுவை ஏற்படுத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் அவருக்குள் நிகழும் மாற்றங்கள், மனக்கொந்தளிப்புகள், இனிமேலும் உயிரோடிருந்து இருந்து என்ன பயன் என்கிற ஊசலாட்டங்கள் ஆட்கொள்கின்றன. இன்னும் கொஞ்ச தூரம் தான், மீண்டு விடலாம் என்கிற நம்பிக்கையை அவரின் கையில் குத்தியிருக்கும் டாட்டூவே எதிர்பாராத வடிவத்தில் தருகிறது. ‘நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்வுதான் என்று தெரிந்து விட்டால் இறுதியாக ஒரு முறை போராடித்தான் பார்த்துவிடு மகளே’ என்று அந்த நிகழ்வு டப்ஸியோ உந்தித்தள்ளுகிறது. அவரால் அது முடிந்ததா என்பதை இரண்டாம் பாதி அச்சப்பட வைக்கும் திரைக்கதையோடு, ஒரே மாதிரியான காட்சிகளை வெவ்வேறு வகைகளில் கண்முன் நிறுத்தி கதை சொல்கிறது. அஸ்வின் சரவணன் , காவ்யா ராம்குமாரின் திரைக்கதை நம்மை நடுங்கவும், நெருங்கி அந்த உலகை காணவும் வைக்கிறது.

பார்வதியின் பறக்கும் கனவுகள் குப்புற விழுந்த பின்பு அவரின் தற்கொலை எண்ணங்கள் உடனிருப்பவர்களால் தள்ளிப்போகிறது. ‘லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்’ என்று முதல் வகுப்பிலேயே ஆசை காட்டும் பட்டப்படிப்பை விட்டு வானமே எல்லை என்று எண்ணிய அவர் வேகமாக வெளியேறுகிறார். சட்டப்போராட்டங்கள் ‘எத்தனை நாளைக்கு இந்த வேதனை’ என்று அவரை உடைந்தழ வைக்கிறது. ஒரு புதிய நம்பிக்கை என்றோ சந்தித்த ஒரு அறிமுகத்தின் மூலம் கிட்டுகிறது. ஆனால், கடந்த காலத்தின் காயங்களுக்குக் காரணமானவனும், சிதைந்து போன முகமும், மீண்டெழ முனையும் அகமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் நிலைமையைச் சிக்கலாக மாற்றுகின்றன.

டப்ஸி ஓயாமல் pacman கேமில் தன்னைத் தொலைக்கிறார். அவரின் அச்சங்கள் கனவா, நிஜமா என்று புரியாத ஒரு கேம் உலகத்திற்குள் அவரைத் தள்ளுகிறது. சற்று ஏமாந்தாலும் மரணம் நிச்சயம் என்கிற சூழல். மூன்றே வாய்ப்புகள். அவரோடு பேசக்கூட மறுக்கிற, முகந்தெரியாத இருட்டு மிருகங்கள் கொன்று போட பார்க்கின்றன. ஏளனமும், நசுக்கிவிடுகிறேன் பார் என்கிற வெறி கொண்டும் திரியும் அவற்றோடு தன்னுடைய ஒரே துணையான வேலையாளான கலாம்மா (வினோதினி) உடன் எதிர்கொள்கிறார்.

இரு திரைப்படங்களிலும் குற்றம் புரிந்தவனைச் சிறைக்கு அனுப்பி விட்டாலும் அன்றாடம் அவமானம், குற்றவுணர்வு, வேதனை என்று பலதரப்பட்ட உணர்வுகளை எதிர்கொண்டு கொண்டே இருக்கும் பெண்களின் உலகம் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. தண்டனை வாங்கித்தந்துட்டா எல்லாம் சரியாகிடுமா என்கிற கேள்வி ஆண்களின் முகத்தையும், பொதுபுத்தியையும் சேர்த்தே அறைகிறது. உயரே கதையில் ஆண்களின் உதவியோடு பார்வதி மீள்கிறாள். ஆனால், கேம் ஓவரில் தன்னுடைய போராட்டத்தை ஆண்களின் துணையின்றித் தானே வெல்ல முனைகிறார் ஸ்வப்னா (டப்ஸி).

நம்பிக்கையும், கதகதப்பும் வரும் என்று நம்புகிற கணத்தில் தன்மானத்தைக் காவு கேட்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிற போது, ‘கொஞ்சம் flexible-ஆ இருக்கப் பாரேன்’ என்கிற அறிவுரையை ஏற்க மறுக்கிற பார்வதி நிமிர்ந்து உட்கார வைக்கிறார். அதற்கு அவர் சொல்கிற காரணம் தன்மானத்தை மீட்டெடுக்க முனைபவர்களுக்கான வெளிச்சப்புள்ளி. உடைந்து போன சிதிலங்களில் இருந்து அவர் நடுங்கியபடியே, ரத்தம் சிவந்த, கருகிப்போன முகத்தோடு எழுந்து காக்பிட்டில் உட்கார்கிற கணம் மீண்டும் மீண்டும் கண்முன் நிறைந்து ஒளிர்கிறது. ஒரு பெண்ணிற்குத் தேவை வாழ்க்கை தரும் துணை தான் என்கிற பார்வையை இயல்பாக மனு அசோகனின் இப்படைப்பு நொறுக்குகிறது. உதவுகிறவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுதாக மீட்கும் மீட்பர்களாக மாற வேண்டியதில்லை என்பதை இயல்பாகப் பார்வதியின் பாத்திரம் புரிய வைக்கிறது.

இரு திரைப்படங்களும் வெவ்வேறு வகையான உணர்வுகளைத் தருகின்ற கதைப்போக்கை கொண்டவை. ஆனால், இரண்டுமே ஆண்களின் வன்முறையையும், பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே வீசப்படும் ஏளனப்பார்வையையும் ஒட்டியே நகர்கின்றன. இரு கதைகளும் நரகத்திற்குள் விழுந்த பின் நாயகிகள் அத்தனை போராட்டத்தோடு எழுந்து நிற்க முயல்கிறார்கள். பிரமிக்க வைக்கும் வெற்றிகள் அல்ல அவர்களின் பயணத்தின் நோக்கம். தங்களின் ஆளுமையை, சிற்றகல் வெளிச்சத்தைத் தங்களுக்கே உரிய வகையில் திரும்பப் பெற முயலும் போர் அது. உச்சக்காட்சி முடிந்த போது இரு திரைப்படங்களும் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டன. இக்கதைகள் ஆண்களாகிய நாம் வாழ முடியாத வாழ்வினை நெருக்கத்தோடும், உண்மையின் சாயலோடும் சொல்கின்றன. குற்றப்பார்வையை நம்மை நோக்கி திரைமொழியில் திருப்பும் இரண்டு முயற்சிகளும் அவற்றின் சிற்சில போதாமைகளைத் தாண்டியும் மகத்தான திரைப்படங்கள்.

சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி


‘சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி’ .
 
பெண்ணைத் தாண்டி வருவாயா?!’
நினைவுகள் எங்கெங்கோ அலைமோதி நிற்கின்றன. பெண்களைத் தாண்டுவது என்பதை விட, பெண்களோடு இணைந்து பயணிப்பதே சரியான சொல்லாடல் என எண்ணுகிறேன்.
 
பெண்ணியம் என்பதை அந்நியமான, அவதூறு செய்யும் சொல்லாகவே இங்கே பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்துவதைக் காண நேரிடுகிறது. பெண்ணியம் என்ன என்பதை ஆண்களே இங்கே வரித்துக் கொள்கிறோம். பெண்களின் குரல்களைக் கூடக் கேட்க விரும்பாத நாம், எப்படி நம் குழந்தைகளுக்கு நம்பிக்கை மிக்க எதிர்காலத்தைப் பரிசளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
 
பெண்ணியம் என்பது ஆண்களைப் பற்றியது அல்ல. அது ஆண்களை வெறுப்பதோ, அவர்களைத் துன்புறுத்துவதோ அல்ல. அது ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அல்ல. அது ஆண்களின் கருத்துகளை மூடி மறைப்பதோ, அவர்களின் தேவைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே இல்லை. மேற்சொன்ன அநீதிகள் பெண்களுக்கு இழைக்கப்படாமல் இருப்பதற்கான தேடலும், பயணமுமே அது. பெண்ணியவாதிகள் ஏன் ஆண்களை வெறுக்கிறார்கள் என்று கேள்விகளைப் பல முறை யோசித்து இருக்கிறேன்.
 
பல்வேறு தருணங்களில் அது அவர்களின் வலியில் இருந்தும், தன்னைப்போன்ற இன்னொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த எதையும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையின் வெளிப்பாடு. மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதன் அடையாளம் அது. பெண்களின் பேசாத பேச்சுக்களை நாம் கேட்க முயன்று இருக்கிறோமா? பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் பெண்ணுக்கு தானே அதன் பெரும்பான்மை குற்றவுணர்ச்சியைத் தருகிறோம்? எதோ ஒரு பெண் காதலை ஏற்க மறுத்ததற்கு வெட்டிக் கொல்லப்பட்டால் ஏன் பெண்களைப் பார்த்து ஒழுங்கா இரு, பத்திரமாகப் போ என்று மட்டும் சொல்கிறோம். என் போன்ற ஆண் பிள்ளைகளை நோக்கி, ‘உன்னைப்போல ஒரு பையன்தான் இப்படிப் பண்ணினான். நீ அப்படிப் பண்ணாம இரு’ என்று சொல்ல நமக்கு வாய் வருவதே இல்லையே ஏன்?

Image may contain: 3 people, including பூ.கொ. சரவணன், people smiling, text

மீசை என்பது ஆண்மையின் அடையாளமாகப் பலரால் இங்கே பார்க்கப்படுகிறது. ஆண்மை என்பது என்ன முகத்தில் முறுக்கி விட்டுக்கொள்ளும் மீசையில் தான் வந்து விடுகிறதா என்ன ? பிள்ளையைப் பெற்று விட்டால் அவன் ஆண் மகன். இது இன்னுமொரு வரையறை. பெண்ணை அடக்கி வைத்திருந்தால் அவனும் ஆண் மகன். அப்படியே உடம்பின் தசைகளை முறுக்கி கலக்கினால் அவனும் ஆண்மை உள்ளவன். ஆண்மை என்பதை ஆணாதிக்கத்தின் அளவுகோலாகக் கொண்டிருக்கிறோம் இல்லையா நாம் ?
 
பொம்பிள பொண்ணு போல அழாதே/வெட்கப்படாதே/பயப்படாதே போன்ற பதங்கள் என் காதுகளில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அழுகை, வெட்கம், பயம் எல்லாம் மானுட உணர்ச்சிகள் தானே? அவற்றை ஏன் ஒரு பாலினத்தின் பண்பாக, இழிவான அடையாளங்களாக மாற்ற முனைகிறோம்? ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று வகுப்பறைகளைக் கூறு போட்டுக்கொண்டு இருக்கும் வரை புரிதலும், இணக்கமும் சாத்தியமே இல்லை.
 
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பணிக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை 10% அளவுக்கு வீழ்ந்து இருக்கிறது. வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்ளப் பெரும்பாலான சமயங்களில் ஆண்களாகிய நாம் முன்வருவதே இல்லை. நம்முடைய அழுக்கான ஆடைகள், உண்ட தட்டின் எச்சில் சுவடுகள், பெற்ற பிள்ளையின் கழிவுகள் அனைத்தும் பெண்களுக்கு உரியவை. குடும்பத்தலைவன் என்கிற பட்டம் மட்டும் ஆணுக்கு உரியவையா? இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட குடும்பக் கட்டுப்பாடுகளைச் செய்து கொள்வது பெண்கள் தான். ஆண்கள் ஏன் அறுவை சிகிச்சை கத்தியின் சுவடு கூடப் படாமல் தள்ளி நின்று கொள்கிறோம்? பயமா? இல்லை, பொண்ணே பாத்துப்பா என்கிற விட்டேத்தி மனமா?
 
சமையல்கட்டு என்பது சமத்துவத்திற்கான ஆரம்பப் புள்ளி என்பதை என் தந்தையே புரிய வைத்தார். வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஒன்றும் ஆணுக்கு இழுக்கு வந்து விடுவதில்லை. அது ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான பண்பு என்கிற புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மையப்படுத்தியே நம்முடைய பார்வைகள், பிம்பங்கள் இருக்கின்றன. வன்புணர்வு, பாலியல் சீண்டல், சம சொத்துரிமை மறுப்பு, கற்பு எனும் கற்பிதம் கொண்டு கட்டுப்படுத்தல், கல்வி மறுப்பு, உரையாடல் துறப்பு என்று பல தளங்களில் பெண்களின் உரிமைகளை, நியாயங்களை மறுக்கிறோம். அவர்களின் கதைகளை, பக்கத்தை நெரிக்கிறோம். செவிமடுத்து கேட்க மறுக்கிறோம். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் செய்கிறார்கள்.
 
பெண்ணை வர்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கலவிக்கான, புற அழகால் மட்டுமே எடைபோடப்பட வேண்டிய ஒருவராகப் பண்டைய இலக்கியங்கள் துவங்கி தற்காலப் பாடல்கள் வரை பலவும் பேசுகின்றன. பெண் என்றால் தெரியாத இடை, பாய்ந்தோடும் கண்கள், பெருத்த மார்பகம் எனக் கவிஞர்களின் கற்பனை மிக அதீதமாகக் குடி கொண்ட இடம் என்று பெண்ணின் உடலைச் சொல்லலாம். பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஒரு தரப்பு என்றால் பெண்ணுடல் வெறுப்பு பல்வேறு மதங்கள், பக்தி இயக்கங்களில் கலந்திருந்தன.
 
பெண்ணின் உணர்வுகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றால் அணுகுவது அரிதாகவே இருக்கிறது. பெண் மீதான வன்முறையின் மையம் ஆண் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன் என்கிற எண்ணத்திலும், பொண்ணுன்னா போடணும் மச்சி என்கிற உசுப்பேற்றல்களிலும் ஒளிந்திருக்கிறது. ஒரு பெண்ணை அவளுடைய புற அழகைத் தாண்டி தரிசிக்க முடியாத ஆணின் தட்டையான பார்வை பெரிதாக மாறிவிடவில்லை.
 

Image may contain: 3 people, people smiling, text

பெண்களை அழகு சார்ந்து அணுகுவதும், பெண்ணியவாதிகள் என்றோ, பொண்ணுங்கனாவே இப்படித்தான் என்றோ வெறுப்பதும் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது. பெண்ணை உடைமைப்பொருளாக மாற்றுகிறது. பொருளாதார, சமூக விடுதலையைப் பெண்கள் சாதிக்கும் இக்காலத்தில் இப்பார்வைகள் கேள்விக்கும், அக்னி பரீட்சைக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது.
 
பெண் விடுதலை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல அது சிந்தனை, பொருளாதாரம், செயல்பாடு சார்ந்த ஒன்று. அது சார்ந்து இயங்கும் பலர் மஞ்சள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உண்மையான மானுட விடுதலை சாதியமைப்பு, ஆணாதிக்க, மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இயங்குவதிலும் இருக்கிறது. பெண்ணியம் என்பது பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக பள்ளி அல்ல. அது ஆண்களின் இருப்பையும், செயல்பாட்டையும் கோருவது.
 
பெண்கள், ஆண்கள் இருதரப்பிடமும் சொல்லிக்கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு கதைகளும், நெகிழ்ச்சியான உணர்வுகளும், கண்ணீரும், கசப்பும் உண்டு. மீண்டும், மீண்டும் உரையாட மறுப்பது; கொண்டாடி தீர்ப்பது அல்லது வெறுத்து ஒதுக்குவது என்கிற இருமைகள் நம்முடைய உலகத்தை இருளடைய வைக்கின்றன. மனித உறவில், அதன் பிணக்குகளில், நாற்றத்தில், நறுமணத்தில் ஆணும், பெண்ணும் ஒருங்கே இணைவது, மனம் விட்டு பேசுவது இன்றைய தேவையும், நியாயமும் ஆகும். ஐயம், அசூயை நிறைந்த கண்களால் பெண்களின் உலகை அணுகும் ஆண்களும், அச்சம், வெறுப்பு மல்க ஆண்களின் உலகை சாடும் பெண்களும் கண்ணுக்குக் கண் பார்த்து உரையாட வேண்டிய காலம் இது
நன்றி புதிய தலைமுறை ஜனவரி 24 இதழ்

Does ‘Shamefully 2’ deserves all this attention & hype…


Watched ‘yours shamefully 2’ short film. I liked the theme and issue which it had touched upon. In this world of instant shares and immediate shaming, it gives a mirror to introspect and be more restrained. All said, now i will record my issues with this film.

Why the movie got such a mileage and views? It is not only because it emotionally as well as poignantly attacks social media warriors. But, what does it also does? It points that elite or non-victimised women may play the victim card. I don’t deny that there had been such instances of fake victimisation and harassing of innocent men as well as teenage guys.

Image may contain: 1 person

Let’s now come to some reality check. Which gender is sexually harassed, abused, stalked for born in that gender? It is mostly women. Who face acid attacks or has to bear the brick bats of society for speaking against sexual predators? It is again women.

Who does more polygamy in India? Men. Married women outnumber married men by 66 lakhs. That is at least 66 lakh men married more than one women. Who owns most of the land, powerful positions across India? Men.

If a woman comes out against a powerful man what is the initial reaction? Slut shaming or endless questions about her character. The video’s narrative focuses on unheard voices of victimised men and it almost exclusively sounds aloud that men are affected by social media frenziness.

Marital rape, domestic violence, sexual abuse, everyday stalking, fighting it out amidst inequal power structures is an everyday crusade for millions of ‘working’ women across India. (Almost all women across India work).

We as a society express our immediate condolences for those videos which question our sheepishness without affecting existing prejudices as well as biases. Many will say that the short film touches upon unheard voices of men or those suffering from shares. How about the girls who committed suicide for the share of morphed images of them? Or those whose private videos made it into pornographic sites? Or those who came out boldly for crusading against the sexual predators who re exploiting them using their positions? Whose side majority took? The gender to which they belonged or the patriarchy for which they re loyal. Women had been made to bear the brunt in almost all the cases as chastity and protection of culture is almost the responsibility of women alone.

Sharing responsibly is need of the hour. No doubt. Social media activism should be more sensible. Totally agreed. But, that should not make us blind to the fact that majority of hapless victims are from one gender. If they re born in suppressed or depressed castes as well as in poor economic conditions life is much much horrible. Let’s not assume the moral high ground of speaking for suppressed minority among dominant gender and lose sight of our perverted, misogynistic behavior which affects women more.

கும்பளாங்கி இரவுகள்: கனவிலும் கசடுகள் அகற்றும் கதை


 

மது நாராயணின் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா தயாரிப்பில் வெளிவந்திருக்கும்
ஷ்யாம் புஷ்கரனின்
‘கும்பளாங்கி இரவுகள்’ திரைப்படம் ஒரு தனித்த அனுபவம். இதற்கு மேல் சிதிலமடைய முடியாது என்கிற அளவுக்குக் குலைந்து போய் நிற்கும் ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு வீடு தான் கதையின் மையம். குட்டிச்சுவரை கிட்டே நெருங்கும் ஒரு இல்லம். அங்கே கசடுகளும், சச்சரவுகளும், அவநம்பிக்கையுமே சூழ்ந்து நிற்கிறது. ஓரிரு காதல்களும், தன்னை முழுமையான மனிதனாக உணரும் ஒருவரும் இந்த வீட்டின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.

இந்தக் கதை ஒரு வகையான மாயக்கதை தான். இதனை யதார்த்தத்தின் பிரதி என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையும், வெகு இயல்பாகத் திரையில் வாழும் நடிகர்களும் அலையாத்தி காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த கும்பளாங்கி கிராமத்திற்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையிலான வன்மத்தையும், முன்முடிவுகளையும் தாங்கிக் கொண்டு திரியும் ‘முழுமையான மனிதர்களை’ இப்படம் பகடி செய்கிறது. அதனைப் பரப்புரைத் தொனியின்றிச் செய்வது தான் இப்படத்தை கலைப்படைப்பாக உயர்த்துகிறது. சீர்குலைந்து போன குடும்பங்களை நாடிச்செல்லும் காதல்கள் வீழவே செய்யும் என்கிற பொதுப் புத்தியை கலைத்து போடுகிறார்கள் கும்பளாங்கி மாந்தர்கள்.
மரபை மீறுகிற ஆவேசம் இன்றி, சிற்சில வரிகளில், முக மாற்றங்களில் அடக்குமுறை கேள்விக்கு ஆளாகிறது.

#spoilers ahead#
‘என் பெற்றோரின் சாபம் தான் நான் இருக்கிற இடத்தை எல்லாம் மண்மேடாக ஆக்கிவிடுகிறது. இந்த வீடும் அப்படி ஆகிடும்’ எனக் கதறுகிற பெண்ணைப் பார்த்து, ‘இதுக்கு மேலே இந்த வீட்டில நாசமா போக என்ன இருக்கு? என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா?’ என்கிற மேட்டுக்குடியின் கேள்வியை மீனவரின் மகனே கேட்கிற போது, அன்பும், உணவின் சுவையின் நினைவுகளும் மின்ன, ‘எனக்கு மீன்னா உசுரு. மீன் பிடிகிறது கேவலம்னு நான் சொன்னேனா’ என்று அவனுடைய காதலி கேட்கையில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மதங்களைக் கடந்து காதல் கொள்ளும் பெண், %கர்த்தர் நமக்கும் தான் நெருக்கமானவர் % என்கிற கணம் ஆழமானது.

Image may contain: 7 people, including Gowthami, people smiling

‘என்னடீ நான் உனக்கு அண்ணன் இல்லையா’ என்று காதலை குலைத்து போடும் தருணத்தில், ‘நீ அண்ணனாவே இருந்தாலும் வாடி, போடி போடக்கூடாது.’ என்கிற எதிர்க்குரல் ஏன் அத்தனை கம்பீரமானதாக இருந்தது? அதுவரை எதிர்ப்பைக் காட்டாத பெண்ணிற்குள் கனன்று கொண்டிருக்கும் கேள்வித்தீ சுடர்விட்டுப் பரவுகையில் ஊற்றெடுக்கும் வெம்மை தானோ அது?
#spoilers over#

கச்சிதமான மனிதனாக வலம்வரும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பும், அந்த மிரட்டும் பார்வையும், மிரளவைக்கும் மருட்சியான சிரிப்பும், எதையுமே செய்யாமலே எதையாவது செய்து விடுவாரோ என்கிற படபடப்பை தருகிற காட்சியமைப்பும் மறக்க முடியாத அனுபவத்தை வாரி நிறைக்கின்றன. கும்பளாங்கி இரவுகள் அவநம்பிக்கை, மரணங்கள், கண்ணீர், காழ்ப்புகள் அனைத்தையும் கரைக்கும் வல்லமை மானுடத்திற்கும், நகர முனையும் மாந்தர்களுக்கும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இந்தக் கதையின் நாயகர்கள் அசகாயசூரர்கள் இல்லை, அவர்கள் மடிகள் நாடி தேம்புபவர்கள். உடன்வர மறுக்கும் உறவுகளின் வலிகளை உணர்ந்து கொள்கிறவர்கள். இடிபாடுகளில் இருந்து எழுந்து புன்னகைப்பவர்கள். படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பவர்களை எட்டி உதைக்க அஞ்சாதவர்கள். அவசியம் பாருங்கள்.

ஆண்களின் ஆணுறை வெறுப்புக்கும், கூடிக்கொண்டே போகும் கருக்கலைப்புகளுக்கும் என்ன தொடர்பு?


 
(முன்குறிப்பு: இந்தியாவின் ஒட்டுமொத்த குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளில் 93% பெண்கள் 6.8% மட்டுமே ஆண்கள் என்று நிலைமை வெகு மோசமாக இருக்கிறது. தமிழகம், கேரளம் முதலிய மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. (http://nhsrcindia.org/sites/default/files/11th%20CRM_Report_Web.pdf) ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது ஐந்து ஆண்டு இடைவெளியில் மரணமடைந்து இருக்கிறார்கள். https://thewire.in/health/sterilization-family-planning-women-burden கர்ப்பத்தடைக்கு ஆணுறையை நாடுவது ஆறு சதவிகிதத்துக்கும் குறைவானதாகவே உள்ளது. (http://www.atimes.com/article/in-india-women-carry-the-burden-of-contraception/) 1991-ல் வெளிவந்த Deepa dhanraj அவர்களின் ஆவணப்படம் பெண்களின் உடல்மீது கர்ப்பத்தடை என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை ‘SOMETHING LIKE A WAR’ என்று தலைப்போடு காட்சிப்படுத்தியது. ஆண்களாகிய நாம் ஒரு போரையே பெண்ணுடல் மீது தொடுத்து கொண்டே இருக்கிறோம். https://www.youtube.com/watch?v=6Fq7HSIPVq4 மற்றும் https://www.youtube.com/watch?v=F2my3wX6RzE )
 
நான் ஆறு பிள்ளைகளுக்கு தாய். கிறிஸ்துவத்தின் Mormon மதப்பிரிவை சேர்ந்தவள். கருக்கலைப்பு சார்ந்து மதரீதியாகவும், பிற தரப்புகளிலும் நடைபெறும் விவாதங்கள் குறித்த ஆழமான புரிதல் எனக்குண்டு. ஆண்கள் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளில் மிகுந்த அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். என்னால் ஆண்களுக்கு கருக்கலைப்பை தவிர்ப்பதில் துளிகூட அக்கறை இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். ஏன் இப்படியொரு முடிவுக்கு வந்தேன்?
 
கருக்கலைப்பு நிற்க வேண்டும் என்றால் பெண்கள் தேவையில்லாமல் கருத்தரிக்காமல் இருக்க வேண்டும். இப்படி தேவையில்லாத கர்ப்பங்களுக்கு ஆண்களே முழுக்க முழுக்க காரணம். அது எப்படி முடியும்? இருவரும் சேர்ந்து தானே உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்று நீங்கள் எண்ணலாம். நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தம்பதிகள் முடிவு செய்துகொண்டு நிகழும் கருத்தரிப்பிற்கு தான் இரு தரப்பும் காரணம் ஆகும்.
Image result for ஆணுறை
 
தேவையில்லாத கர்ப்பங்கள் அனைத்துக்கும் ஆண்களே காரணம். பொறுப்பில்லாமல் விந்தை வெளியேற்றும் ஆண்களின் செயல்களே இதற்கு முழு பொறுப்பு. நம்ப முடியவில்லையா? நான் புரிய வைக்கிறேன். ஒரு மாதத்தில் இரண்டே தினங்களில் மட்டுமே பெண்களால் கர்ப்பம் தரிக்க முடியும். அதுவும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே சாத்தியம்.
 
ஆக, ஒரு ஆண்டில் பெண்களால் இருபத்தி நான்கு நாட்களில் தான் கர்ப்பமாக முடியும். ஆனால், ஆண்களால் ஆண்டின் 365 நாட்களும் பெண்களை கர்ப்பமாக்க முடியும். நீங்கள் ஒரே நாளில் பல முறை விந்தை வெளியேற்றுகிற ஆண் என்றால், நீங்கள் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கர்ப்பங்களுக்கு காரணமாக கூடும். ஏட்டளவில், ஒரு ஆணால் ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை தேவையில்லாத கர்ப்பங்களுக்கு காரணமாக முடியும்.
 
வயதாக வயதாக ஆண்களின் விந்தணுக்களின் வீரியம் குறைகிறது என்றாலும், பருவ வயதை அடைந்தது முதல் தங்களுடைய மரணம் வரை ஆண்கள் தேவையில்லாத கர்ப்பங்களை உருவாக்கி கொண்டே இருக்க முடியும். அடிப்படை உயிரியல், மேற்சொன்ன நாள் கணக்கு ஆகியவற்றை கொண்டு ஆண்கள் தான் பிரச்சினைக்கு காரணம் என எளிதாக புரிந்து கொள்ளலாம்.
Image result for unwanted pregnancy men's fault
 
கருத்தடை முறைகள் என்ன ஆனது என்று கேள்வி எழலாம். ஒரு பெண் தேவையில்லாமல் கர்ப்பமாகாமல் தன்னை காத்துக்கொள்ள எண்ணினால் ஏன் கருத்தடை முறைகளை பயன்படுத்த கூடாது. எப்படி கருக்கலைப்பு செய்வது என்பதை ஒரு பெண்ணால் தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், கருத்தடை குறித்தும் அறிந்து கொள்வது பெரிய விஷயமில்லை இல்லையா? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
 
நவீன கருத்தடை முறைகளே கடந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு. அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால், இம்முறைகள் கொடூரமானவை. இவற்றால் பெண்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மிக மோசமானவை. ஆண்களுக்கு என்று கண்டுபிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகளை புழக்கத்துக்கே கொண்டுவர முடியாத அளவுக்கு பின்விளைவுகள் மோசம். இத்தனைக்கும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளின் பட்டியலோடு ஒப்பிட்டால் இவை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. எனினும், இந்த ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் ஏற்கப்படவில்லை. (https://www.npr.org/sections/health-shots/2016/11/03/500549503/male-birth-control-study-killed-after-men-complain-about-side-effects?platform=hootsuite)
 
மேற்சொன்ன நிகழ்வு நமக்கு சொல்வது என்ன?
இந்த சமூகமானது, ஆண்களுக்கு வேலை எளிதாகும் என்றால் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் அது குறித்து சற்றும் கவலைப்படுவது இல்லை. ஆனால், ஆண்களே வயிற்றில் பால் வார்க்கும் ஒன்றை சொல்கிறேன். இவ்வளவு கொடூரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்து இருந்தாலும் பெண்கள் கருத்தடை முறைகளை பயன்படுத்த மிகவும் ஆர்வமாக காட்டுகிறார்கள். ஆனாலும், இது அவ்வளவு எளிமையானதாக இருப்பதில்லை. பெண்கள் மருத்துவரை சந்தித்து, அவரின் பரிந்துரைகளை அறிய வேண்டும். இவை எதுவும் இலவசமும் இல்லை, மலிவானதும் இல்லை.
 
இன்னமும் குறிப்பாக பல பேர் பெண்களுக்கான கருத்தடை முறைகளை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க கூடாது என்று அயராது உழைத்து கொண்டுள்ளார்கள். பெண்களுக்கான வாய்வழி கருத்தடை மாத்திரைகள் எளிதாக கிடைப்பதில்லை. அப்படியே உட்கொண்டாலும் அவை உடனே வேலை செய்வதில்லை.
மாத்திரைகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும் என்றால், அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும், மேலும், மறந்து விட்டாலோ, தவறாக உட்கொண்டு விட்டாலோ,என்றாவது மாத்திரையை சாப்பிட முடியாமல் போனாலோ கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எப்படி என்றாலும், பக்கவிளைவுகள் மோசமானவை. என்றாலும், இந்த மாத்திரைகளை ஒழித்து கட்ட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவற்றுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
 
நான் சொல்ல வருவதெல்லாம், பெண்கள் கர்ப்பமாகாமல் இருப்பது அத்தனை எளிதானதில்லை. இதை அப்படியே மாற்றி, ஆண்களின் தரப்பில் இருந்து அணுகுவோம். ஆண்கள் ஆணுறை பயன்படுத்தினாலே கர்ப்பங்கள் தேவையில்லாமல் ஏற்படாது. ஆணுறைகள் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும், விலை மலிவானவை என்பதோடு அவற்றை பயன்படுத்த மருத்துவரின் ஆலோசனை எதுவும் தேவையில்லை. அவை உடனடி பலன் தருபவையும் கூட.
 
ஆண்கள் ஆணுறைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் தேவைப்படுகிற போதெல்லாம் கவலையில்லாமல் உடலுறவில் ஈடுபட இயலும். ஆணுறைகள் பெண்களுக்கான கருத்தடை முறைகளை விட எளிமையானது. ஆணுறையை ஆண்கள் பயன்படுத்துவதை பெண்கள் விரும்புகிறார்கள். அது பால்வினை நோய்களை தவிர்ப்பதோடு, உடலுறவின் போது பெண்களுக்கு கிட்டும் சுகத்தை குறைப்பதில்லை. உச்சநிலை எட்டுவதற்கும் அவை தடை போடுவதில்லை. ஆணுறைகளை பயன்படுத்திய பின்பு சுத்தம் செய்வதும் எளிதானது. விந்தானது கால்களில் வழிந்தோடும் என்கிற கவலையில்லை. அப்புறம் ஏன் தேவையில்லாமல் பெண்கள் கருத்தரிக்க நேரிடுகிறது. ஒவ்வொரு உடலுறவின் போதும் ஏன் ஆண்கள் ஆணுறைகளை பயன்படுத்துவதில்லை. இவ்வளவு எளிமையான முறையை ஏன் பின்பற்ற மறுக்கிறார்கள்?
 
ஆண்கள் ஆணுறையை விரும்புவதில்லை. ஆணுறை அணியாமல் உடலுறவில் ஈடுபட அடிக்கடி பெண்களை ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். பெண்ணின் அனுமதியோ, விருப்பமோ இல்லாமல் உடலுறவின் போது ஆணுறையை ஆண்கள் நீக்குவதும் அடிக்கடி நடக்கிறது. இது பாலியல் வன்முறை என்று நான் உறுதியாக சொல்வேன். ( https://m.huffingtonpost.ca/2017/04/24/stealthing-removing-condom_n_16209510.html )ஏன் ஆண்கள் ஆணுறையை வெறுக்கிறார்கள்? நல்ல கேள்வி. தங்களுடைய இணையை புணர்கிற போது, ஆணுறை இல்லாமல் உள்நுழையும் கணங்களில் இன்பம் சற்றே கூடுதலாக ஆண்களுக்கு கிடைக்கிறது.
 
அதனால், ஆண்கள் தங்களோடு உடலுறவு கொள்ளும் பெண் கர்ப்பமானாலும் பரவாயில்லை என்று இப்படி செயல்படுகிறார்கள். ஒரு பெண்ணுடைய வாழ்க்கை, உடல்நலம், சமூக மரியாதை. உறவுகள், career இத்தனையும் என்ன ஆனாலும் எங்களுக்கு அக்கறையில்லை. கூடுதலாக கொஞ்சம் இன்பம் கிட்டினால் மட்டுமே போதுமானது என்று ஆண்கள் எண்ணுகிறார்களா? ஆமாம். அதேதான்.
 
ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது இன்பம் தருவதே இல்லை என்றில்லை. ஆணுறை அணிந்து கொள்வதால் ஒருவருக்கு 8/10 என்கிற அளவுகோலில் இன்பம் கிடைக்கிறது என்றால், ஆணுறை இல்லாமல் பத்து என்கிற அளவில் இன்பம் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். சில நிமிடங்கள் கூடுதலாக கிடைக்கும் இன்பத்திற்காக பெண்களை பெரும் தீங்கிற்கு ஆண்களுக்கு உள்ளாக்குகிறார்கள்.
ஆணுறையை வெறுக்கிற ஆண்கள் கூட, தேவையில்லாத கர்ப்பங்களை தவிர்க்க இயலும். விந்தணு வருவதற்கு முன்பு pull out புரிவதன் மூலம் இது சாத்தியம். இம்முறை முழுவதும் கச்சிதமானது இல்லை என்றாலும், இது பெருமளவில் பலன் தரக்கூடியதாக உள்ளது. ஆக, ஆணுறை அணியாத ஆண்கள் கூட சரியான கணத்தில் இயங்கி பெண்கள் கர்ப்பம் அடைவதை தடுக்க முடியும் இல்லையா. ஏன் அப்படி செய்ய மறுக்கிறார்கள். உச்சநிலையில் கூடுதல் இன்பம் நாடி இப்படி ஆண்கள் இயங்குகிறார்கள். உச்சநிலை நிகழும் அந்த ஐந்து நொடி இன்பத்திற்காக பெண்களின் வாழ்க்கை, உடல்நலத்தை சிதைக்கிறார்கள்.
 
ஆண்கள் இப்படி நடந்து கொள்வது அதிரவைப்பதோடு, கலங்க வைக்கிறது. ஆனால், எனக்கு இது ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை. இந்த உலகத்தில் சுகமே மிக முக்கியம் என்று ஆண்களுக்கு தொடர்ந்து கற்பிக்கிறோம். உடலுறவில் ஈடுபடும் போது சுகத்தில் அக்கறை காட்டு, கர்ப்பம் பற்றி கவலைப்படாதே என்று எண்ண வைக்கப்படுகிறார்கள்.
 
ஒரு ஆணால் பெண்ணை கர்ப்பம் ஆக்காமல் சுகம் காணவே முடியாதா என்ன? உண்மையில், ஒரு பெண்ணுக்கு எக்கச்சக்க வலி. வேதனை, கொடுங்கனவுகளை தந்துவிட்டும் ஒரு ஆணால் பெண்ணை கர்ப்பமாக்க முடியும். ஒரு பெண்ணால் ஒரு ஆணின் துணையோடும், எந்த ஆணின் துணை இல்லாமலும் உச்சநிலையை கர்ப்பம் தரிக்காமலே பல முறை அடைய இயலும். ஒரு பெண்ணின் உச்சகட்ட இன்பத்திற்கும் அவளுடைய கர்ப்பத்திற்கும் தொடர்பில்லை. பெண்ணின் clitoris பிள்ளைகள் பெற்றுப்போட படைக்கப்படவில்லை, அது இன்பத்திற்கானது மட்டுமே.
ஆண்கள் பெண்ணை கர்ப்பம் ஆக்காமலே உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும். பொறுப்பில்லாமல் ஆண்கள் உச்சநிலையை எட்டுகிற போது தான் பெண்கள் கர்ப்பமாக நேரிடுகிறது.
 
ஆண்களுக்கு அடிக்கடி தாங்கள் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரிவதில்லை. தான் தான் கர்ப்பத்திற்கு காரணமோ என்று கேள்வி எழுப்பிக்கொள்ளவோ, சிந்திக்கவோ தயாராகவும் இல்லை. ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஆண்களுக்கு தேவையில்லாத கர்ப்பங்களால் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு பெண் கர்ப்பத்தை சத்தமில்லாமல் கலைக்க முடிவு செய்தால், ஆணுக்கு தான் பொறுப்பில்லாமல் உடலுறவு கொண்டதே அதற்கு காரணம் என்று தெரியாமலே போகும். அந்த கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று பெண் முடிவு செய்தாலும், அல்லது குழந்தையை தத்து கொடுத்தாலும் ஆணுக்கு தன்னுடைய பொறுப்பற்ற செயல் தெரியப்போவதில்லை. ஆனால், அந்த ஆணின் 50% மரபணுவோடு அப்பிள்ளை நடமாடும்.
 
பொறுப்பில்லாமல் என்னை கர்ப்பவதி ஆக்கியிருக்கிறாய் என்று ஆணிடம் பெண் சொல்ல நேர்ந்தாலும், அதற்கென்ன பெற்றுக்கொள், வளர்த்து கொள்ளலாம் என்று ஆண் எளிமையாக முடித்து கொள்ள இயலும். …..கருக்கலைப்பு குறித்து தீவிரமான விவாதங்கள் நிகழும் போதெல்லாம், ஆண்கள் கருக்கலைப்பு கொடூரமானது, பெண்களுக்கு இப்படி ஆகக்கூடாது என்றெல்லாம் எண்ணக்கூடும். ஆனால், இந்த கர்ப்பத்துக்கு காரணமான ஆண் குறித்து அவர்கள் எண்ணி பார்ப்பதில்லை. ஆண்களை தேவையற்ற கர்ப்பங்களுக்கு பொறுப்பாக்க மறுக்கிறீர்கள் என்றால் நீங்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறீர்கள்.
 
அன்பர்களே! மருத்துவமனைகள், பெண்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள். கருக்கலைப்பு சட்டங்களை குறை சொல்லாதீர்கள். நம் நாட்டில் கருக்கலைப்புகள் குறைய வேண்டும், அறவே ஒழிய வேண்டும் என்று விரும்பினால் ஆண்களை அவர்களின் செயல்களுக்கு பொறுப்பாளி ஆக்குங்கள். தேவையில்லாமல், பெண்ணின் விருப்பமின்றி அவளை கர்ப்பமாக்கும் ஆண்கள் உடனடியாக பாதிப்புக்கு ஆளானால் எப்படி இருக்கும் ? அந்த பாதிப்பு ஒரு பெண்ணை ஒன்பது மாதங்கள் கர்ப்ப வேதனையில் தவிக்க விடுவதை போல கடுமையானதாக, தீமைமிக்கதாக, அருவருப்பானதாக. அச்சம் தருவதாக, ஆபத்தானதாக, வாழ்க்கையை புரட்டிப் போடுகிற வகையில் இருக்க வேண்டுமா என்ன?
Image result for unwanted pregnancy men's fault
 
என் அனுபவத்தில் ஆண்கள் தங்களுடைய பிறப்புறுப்பை நேசிக்கிறார்கள். பொறுப்பற்ற விந்தணு செலுத்தல்களால் அவர்களின் இனப்பெருக்க திறன் ஆபத்துக்கு ஆளாகும் என்றால் ஆண்கள் பொறுப்புள்ளவர்களாக ஆகலாம். காயடிப்பது கொடூரமான, அநியாயமான தண்டனையாக தோன்றுகிறது அல்லவா? பல லட்சம் பெண்களை ஒவ்வொரு ஆண்டும் மாதக்கணக்காக வாந்தி எடுக்க வைத்து, பல கிலோ பாரத்தை சுமக்க வைத்து, குழந்தை பிறப்பின் போது அவர்களின் உடலை கூறுபோட்டு சிதைப்பது நியாயமானதா? பல பெண்கள் தங்களின் விருப்பமின்றி திணிக்கப்பட்ட கர்ப்பம், குழந்தை உற்பத்திக்காக சாவதை விட ஆண்களை காயடிப்பது மேலானது இல்லையா?
 
இதை சட்டமாக்கி, அமல்படுத்தி, ஊடகத்தின் மூலம் செய்தியை பரப்பினால் பொறுப்பற்ற முறையில் பெண்களை கர்ப்பவதிகளாக ஆக்குவது நின்றே போயிருக்கும். கருக்கலைப்பே இருக்க கூடாது எனக் கருதுபவர்கள் ஆண்டிற்கு சில லட்சம் பெண்கள் சாவதை விட, ஒரு சில காயடிப்புகள் சரியென்று கருதுவீர்களா? ஐயையோ என்று பதறுகிறது இல்லையா? நீங்கள் கருக்கலைப்புகளை பற்றியா அக்கறையோடு இருக்கிறீர்கள்? பெண்களின் உடல்கள், கற்புத்திறம், பாலினப்பெருமையை காவல் காப்பதில் தானே உங்கள் கவனம் எல்லாம் குவிந்து இருக்கிறது. காயடிக்கப்பட்ட ஆண்கள் வருங்காலத்தில் குழந்தை பெறுவதற்கு வசதியாக விந்தணுக்களை சேமித்து கொள்ளலாம் என்கிற சலுகையை தரலாம்.
 
இப்படி ஆண்களை உடல்ரீதியாக துன்புறுத்துவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை இல்லையா? ஆனால், பெண்கள் மட்டும் உடலளவில் சித்திரவதை அனுபவிக்க வேண்டும். சரி விடுங்கள். தடுப்பு முறைக்கே வருவோம். வயதுக்கு வந்ததுமே ஆண்கள் வாசக்டமி செய்து கொள்ள வேண்டும். இவை பாதுகாப்பானவை. நினைத்த நேரத்தில் சரிசெய்து கொள்ள முடியும். ஒரே ஒரு நாள் சற்றே வலியிருக்கும், பெரிதாக எந்த பக்க விளைவுகளும் இல்லை. (பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உண்டுவிட்டு அனுபவிக்கும் மோசமான பக்க விளைவுகளோடு ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை)
 
அந்த ஆண் பொறுப்பான இளைஞனாக வளர்ந்தான் என்றால், ஒரு இணையை கண்டடைந்தான் என்றால், அவர்கள் இருவரும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பினால் வாசக்டமியில் இருந்து அவனுக்கு விடுதலை தரலாம். குழந்தை பெறுகிற வயது முடிந்ததும் மீண்டும் வாசக்டமி செய்து விடலாம். பாதுகாப்புக்கு விந்தணு வங்கியில் விந்துவை சேகரித்து விடலாம்.
என்னுடைய இந்த திட்டங்கள் அனைத்துமே உங்களுக்கு பிடிக்கவில்லை இல்லையா? உங்களுக்கு சரியென்று படும் மாற்று திட்டங்களை முன்வையுங்கள். என்னுடைய வாதம் எல்லாம் ஒன்றே ஒன்று தான். கருக்கலைப்பை பொறுத்தவரை ஒட்டுமொத்த கவனத்தையும் பெண்கள் மீதே குவிக்காதீர்கள். . தேவையில்லாத கர்ப்பங்களுக்கான தீர்வாகவே கருக்கலைப்புகள் உள்ளன.
 
கருக்கலைப்பை நிறுத்த வேண்டும் என்றால், தேவையற்ற, பொறுப்பற்ற கர்ப்பங்கள் என்கிற நோயை குணப்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி ஆண்களை நோக்கி கவனத்தை திருப்புவது ஆகும். எல்லா தேவையற்ற கர்ப்பங்களும் ஆண்களின் பொறுப்பற்ற விந்தணு வெளியேற்றத்தின் மூலமே நிகழ்கின்றன. ஒரு ஆணாக இனிமேலும் பொறுப்பில்லாமல் உடலுறவின் போது செயல்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அபராதம், உரிமை பறிப்பு, விடுதலை ஒழிப்பு, உடல் வலி? எது உங்களை மாற்றும்.
 
ஆண்களே! உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களோடு உடலுறவு கொள்ளும் பெண்ணின் உயிரை உங்களுக்கு கிட்டும் சில கண இன்பம், சவுகரியத்தை விட மேலானதாக கருத என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு உணவுப்பண்டத்தை விரும்பி உண்கிறீர்கள் என எண்ணிக்கொள்ளுங்கள். அதை உண்கிற போதெல்லாம் நீங்கள் மிகவும் அன்பு செய்யும் ஒரு உறவுக்கு உடல், உளப்பிணி ஏற்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள். அந்த உணவை தவிர்க்க கூட தயங்க மாட்டீர்கள் இல்லையா? ஆனால், அந்த உணவை கையால் ஆனந்தமாக கொறிப்பதற்கு பதிலாக சற்றே மெனக்கெட்டு ஸ்பூனால் சாப்பிட்டால் உங்கள் உறவுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றால் அந்த சிறிய இன்பத்தியாகத்தை மேற்கொள்வீர்கள் இல்லையா? ஒவ்வொரு முறையும் உணவை ஆசையாக அள்ளி உண்பது மட்டும் தான் முக்கியம், என் அன்புக்குரியவர் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நடந்து கொள்ள மாட்டீர்கள் அல்லவா?
 
Image result for india vasectomy war on women

 

ஆணுறைகள் தான் அந்த எளிய மாற்றம். பெண்களை ஆபத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டாமே. பெண்களின் வலியை அதிகப்படுத்தி உங்களுடைய இன்பத்தில் உச்சம் எட்ட வேண்டுமா? ஆண்களே அரசாங்கத்தை பெரும்பாலும் நடத்துகிறீர்கள். நீங்களே சட்டங்கள் இயற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் நினைத்தால் கருக்கலைப்புகளை எந்த சட்டமும் இல்லாமலே முற்றிலும் நிறுத்த முடியும்.
மொத்தமாக சொல்ல வருவது இவ்வளவு தான்: பெண்களின் உடல், பாலுணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயல வேண்டாம். தேவையில்லாத, பொறுப்பற்ற கர்ப்பங்களுக்கு ஆண்களே பொறுப்பு.
அவ்வளவே! – Gabrielle blair.
 
தமிழில்: பூ.கொ.சரவணன்

வெறுப்பற்ற பெண்ணியம் பேசுவது எப்படி?


Nanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின்’ netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது. நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

 

Image result for hannah  nanette

“நான் டாஸ்மானியா மாநிலத்தின் சிறிய நகரத்தில் வளர்ந்தவள். டாஸ்மானியா அற்புதமான இடம். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் அந்த மாநிலத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு கடிதம். அன்புள்ள மேடம் என்று துவங்கிய அந்தக் கடிதம் என்னை மாநிலத்தை விட்டு வெளியேற சொன்னது. நான் என்னை ஓரளவிற்கு லெஸ்பியனாக உணர்பவள். என்னுடைய மாநிலத்தில் 1997-வரை தன் பாலின உறவானது சட்டப்படி குற்றம். என் ஊரை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு மோசமான விஷயம். தன்பாலின உறவில் ஈடுபடுவர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதிக்கு மொத்தமாக ஓடிபோய் விட வேண்டும். மறந்து கூட மீண்டும் டாஸ்மானியா வரவேண்டும் என்று எண்ணக்கூடாது.

நான் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், என்னைக் குறித்தும் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளை உதிர்ப்பேன். தன்பாலின உறவுகள் எப்படி அச்சத்தோடும், ஐயத்தோடும் அணுகப்படுகின்றன எனப் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளைக் கூட்டத்தினர் சிரிக்க வீசிக்கொண்டே இருப்பேன். ….

 

நான் என்னைப்போன்ற லெஸ்பியன் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் போதுமான அளவுக்கு மக்கள் முன் கொண்டு சேர்த்ததில்லை என உணர்கிறேன். ஒரு பெண் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியின் முடிவில், ‘போதுமான அளவுக்கு லெஸ்பியன் நகைச்சுவை இல்லை’ என்று குறைபட்டுக் கொண்டார். என்னை லெஸ்பியன் நகைச்சுவை கலைஞர் என அறிமுகப்படுத்துகிறார்கள். நான் லெஸ்பியனாக இருப்பதை விட, அதிக நேரத்தை சமைப்பதில் செலவிடுகிறேன். என்னை ஏன் சமையல் கலையில் அசத்தும் நகைச்சுவை கலைஞர் என்று யாரும் அறிமுகப்படுத்துவது இல்லை? நான் அனேகமாக இவ்வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளை மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

நான் நகைச்சுவை கலைஞராக எப்படி உருவெடுத்தேன்? என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா? இல்லை. அது தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது. நான் என் குரலை பிறர் கேட்க வேண்டும் என்பதற்காக, பிறர் என்ன பேச அனுமதிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே இழிவுபடுத்திக் கொள்வது. இனிமேல், அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன். என்னையோ, என்னைப் போன்றவர்களையோ இழிவுபடுத்தும் விஷயங்களை நகைச்சுவை என்கிற பெயரில் நிச்சயம் மேடைகளில் நிகழ்த்த மாட்டேன்….

Image result for hannah  nanette

என்னை நான் லெஸ்பியன் என்று கூட அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டேன். இந்த அடையாளத்தை விட்டும் நான் வெளியேறக்கூடும். என்னை நான் ‘சோர்ந்து போனவர்’ என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்வேன். நான் சோர்ந்து போயுள்ளேன் . பாலினம் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திரியும் உங்களைப் போன்றவர்களால் நான் அயர்ச்சி அடைகிறேன். நீங்கள் வேறுபட்டவர்கள். எல்லாரும் உங்களைப் போல இருக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குபவர்கள். சாந்தம் கொள்ளுங்கள் அன்பர்களே.

 

கொஞ்சம் முடியோடு பிறந்திருக்கும் பெண் குழந்தையை, ‘ஆம்பிள பிள்ளையா’ எனப் பிறர் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு உரிய அடையாளங்கள் என்று நீங்கள் கருதும் அடையாளங்களால் ஏன் நிறைக்கிறீர்கள்? யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது? ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அதைக்குறித்து அக்கறை கொள்வதே இல்லை. நம்முடைய கவனம் முழுக்க வேற்றுமைகளில் மட்டுமே குவிந்து இருக்கிறது. ‘Men are from Mars, Women are for his penis’

Image result for cute kids with pink bands

…..

 

என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னை ஆண் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு உண்மை தெரிந்ததும் அதற்காக வெகுவாக வருந்துவார்கள். விமானத்தில் ஏறிய போது. ‘வாங்க சார்’ என்று அன்போடு விமானப் பணி ஆண் அழைத்தார். பின்னர்ப் பெண் என உணர்ந்து கொண்டு அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டார். என்னை ஆண் என்று பிறர் கருதும் கணங்களில் எந்த முயற்சியும் இல்லாமலே பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதிகாரம் செலுத்த முடிகிறது….ஆனால், நான் நேர் பாலின உறவு கொள்ளும் வெள்ளையின ஆண் என அறியப்பட விரும்பவில்லை. அப்படிப்பட்ட அடையாளம் எனக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைத் தரும் என்றாலும் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்….

 

இதுவரை மானுடத்தின் முகமாக இருந்த வெள்ளையின ஆண்கள் காட்டிக்கொண்டார்கள்.  திடீரென்று ‘நீங்களும் மனிதர்களில் ஒரு வகை’ என்பதை நாம் முதன்முறையாக உரக்க சொல்லும் போது அதனை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை ‘வெள்ளையின ஆண்’ என்று விளித்தால் ‘reverse-racism’ எனக் கதறுகிறார்கள். என்னை, என்னுடைய உருவத்தை, பாலின தேர்வை பல்வேறு வகைகளில் கேலி செய்யும் விதிகளை இயற்றி தந்தவர்கள் நீங்கள். உங்களுடைய படைப்பான விதிகளை உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறோம். அவ்வளவே

 

“ஆண்களை இவ்வளவு வெறுக்கும் நீ, ஏன் எங்களைப் போல ஆடை அணிகிறாய், காட்சி அளிக்கிறாய்” எனக் கேட்கிறார்கள். “மச்சி! உங்களுக்கு நல்ல முன்மாதிரி வேண்டும் இல்லையா. அதற்காகத் தான்”. என்பதே என்னுடைய பதில். உங்களுடைய அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ள முனையாமல், திறந்த மனதோடு அணுகுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். …

இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் உதிர்க்கப்படும் நகைச்சுவை துணுக்குகளின் வடிவம் எளிமையானது. அவை முதலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும். பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் அது முடிவுக்குக் கொண்டு வரப்படும். ஆனால், நான் முழுக்கப் பதற்றங்களால் நிரம்பியிருக்கிறேன். நான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், எனக்கு வேறென்ன செய்வது என்றும் தெரியவில்லை.

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலை வரலாற்றில் நான் பட்டம் பெற்றேன். கலை வரலாற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்வது என்னுடைய உலகம் இல்லை. அது எனக்கான உலகம் இல்லை. கலை என்பது மக்களை மேம்படுத்துவது இல்லையா? என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி உங்களை மேம்படுத்தும் என்று நான் உறுதி தரமாட்டேன். நாம் உருவாக்கிய கசடுகுகளில் நம்மை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தேன். நிகழ்வு முடிந்ததும் என்னிடம் வந்த ஒரு நபர், “கலைஞர்கள் தான் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முயலக்கூடாது. வான்கா மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் மெச்சும் ‘சூரிய காந்திகளை’ப் படைத்திருக்க முடியாது ” என்று அறிவுரை தந்தார். நான் கற்ற கலை வரலாறு இப்படிக் கைகொடுக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது.

Image result for van gogh sunflowers

 

“வான்கா மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால், அவர் மருந்துகள் உட்கொள்ளாமல் இல்லை. அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை தந்தார்கள். அவருக்குச் சிகிச்சை தந்த மனநல மருத்துவர்களின் ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். அதிலும் ஒரு ஓவியத்தில் மனநல மருத்துவர் foxglove மலர்களோடு நிற்கிறார். அந்த மலர்கள் வலிப்புக்கு வைத்தியம் பார்க்க உதவுபவை. கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், சுற்றியிருப்பவை அடர்மஞ்சளாக அம்மருந்து தெரிய வைக்கும். ஆகவே, மருந்து உண்டதால் தான் வான்கா சூரியகாந்தியை படைக்க முடிந்தது. நீங்கள் இன்புற ஏன் கலைஞர்கள் துன்பத்தில் உழல வேண்டும். அவர்களின் படைப்புத்திறனுக்குத் துயரம் என்கிற சுமையை ஏன் விதிக்கிறீர்கள். உங்களுக்குச் சூரியகாந்தி வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கி வளர்த்து ரசித்து விட்டுப் போங்கள். கலைஞர்களைக் காவு கேட்காதீர்கள்.” என்றேன்.

 

அவர், ‘ரொம்பக் கொதிக்காதீர்கள்’ என்றார். நான் மென்மையாகச் சொன்னேன். ‘நான் கொதிக்கவில்லை. உணர்வதை வெளிப்படுத்துகிறேன்”. ‘கொதிக்காதே/உணர்ச்சிவசப்படாதே’ என்று என்னிடம் சொல்பவர்கள் எல்லாம் அதைக் காட்டுக்கத்தலில் தான் சொல்கிறார்கள். குசு, மூக்கை பார்த்து ‘உன்கிட்டே ஒரே நாத்தம், சுத்தமா இரு’ என்றதை போலத்தான் இந்த அறிவுரை இருக்கிறது. என்னுடைய உணர்ச்சிகளும், கொதிப்பும் தான் என்னுடைய சிக்கலான வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வலிமையோடு பயணிக்க உதவியிருக்கின்றன. உணர்வற்று வாழ்வது இயலாத ஒன்று.

 

என் அம்மாவோடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையின் துயர்கள் குறித்து நகைச்சுவையாக நானும், அவரும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அன்றைய தினம் உரையாடல் அப்படிப் பயணிக்கவில்லை. அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உங்கள் ஐந்து பேரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்தேன். ஆனால், உன்னை நேர் பாலின ஈர்ப்பு கொண்டவள் என்று கருதிக்கொண்டு வளர்த்து விட்டேன். வேறு எப்படி வளர்ப்பது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடு மகளே. என்னை மன்னித்துவிடு. நீ தன்பாலின ஈர்ப்புள்ளவள் என்று தெரிந்த போது, உன் வாழ்க்கை கடினமானதாக இருக்கும் என்று உனக்கு முன்னரே எனக்குத் தெரியும். உன்னை நேர் பாலின ஈர்ப்புள்ளவளாக மாற்ற முயன்றேன். நான் உன் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக ஆக்கிவிட்டேன். இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிந்ததால், உன்னை மாற்ற முயன்றேன் மகளே. மன்னித்துவிடு” என்று அரற்றினார்.

 

நான் திகைத்து போனேன். என்னுடைய கதையின் நாயகியாக எப்படி என் அம்மா மாறினார்? வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா? கதைகளுக்கு ஆரம்பம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகள். நான் முன்னரே சொன்னதைப் போல நகைச்சுவைக்கோ இரு பகுதிகள் மட்டுமே. என்னுடைய நிஜ வாழ்க்கையின் வலிகளை இந்த நகைச்சுவை சரியாகக் கடத்தவில்லை. நகைச்சுவைக்கு என்று நான் உருவாக்கும் பன்ச்லைன்கள் உண்மையின் வலியை சிதைக்கின்றது.

 

எனக்குள் இன்னமும் என் அடையாளம் குறித்த அவமானம் இருக்கிறது. என் சிந்தனையில் அந்த அவமானம் அறவே இல்லை. ஆனால், என் உணர்சிகளில் அவமானம் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. என் பாட்டியை நான் நெடுங்காலமாக நேரில் பார்க்கவில்லை. என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

 

நான் வளர்ந்தது டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதி. அதற்குப் பைபிள் பகுதி என்று பெயருண்டு. 1989-1997 காலத்தில் தன்பாலின சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்று பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. அது என்னுடைய வளரிளம் பருவமும் கூட. என் பகுதி மக்களில் 70% தன் பாலின சேர்க்கையில் ஈடுபடுவர்களைக் கிரிமினல் சட்டங்களில் சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. என்னை வளர்த்த, அன்பு செய்த, நான் நம்பிய மக்கள் தன்பாலின சேர்க்கையைப் பாவமாகக் கருதியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களைக் கொடூரமானவர்கள், ஈவிரக்கம் அற்றவர்கள், குழந்தைகளோடு உடலுறவு கொள்ளும் காமுகர்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.

Image result for tasmania  anti gay

நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பது வெளிப்பட்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. நான் என்னுடைய அடையாளத்தை, தன் பாலின ஈர்ப்பை வெறுப்பவளாக மாறியிருந்தேன். ஒரு ஸ்விட்சை அமுக்கிய உடனே மாறிவிடக் கூடிய உணர்வு அல்ல அது. தன்பாலின ஈர்ப்பை வெறுப்பது உள்ளுக்குள் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. இதனால், எங்கள் அடையாளத்தை நாங்களே வெறுக்க ஆரம்பிக்கிறோம். முழுக்க முழுக்க எங்களை நாங்களே வெறுத்து வேகிறோம். அவமானத்தால் கூனிக்குறுகி பத்தாண்டுகள் இருட்டில் இருந்தேன். அந்த இருட்டு என்னைப் பிறர் பார்ப்பதில் இருந்து மட்டும் தான் காக்க முடியும். நான் அவமானத்தில் உழல்வதை அதனால் தடுக்க முடியாது இல்லையா?

ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே மூழ்கடித்தால், அந்தக் குழந்தையால் தான் சுயமரியாதை உள்ளவள்/ன் என்கிற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளவே இயலாது. தன்னைத் தானே வெறுப்பது என்பது வெளியில் இருந்து ஊன்றப்படும் விதை. அது ஒரு குழந்தையின் மனதில் விதைக்கப்பட்டால், அது முட்செடியாக மாறுகிறது. வேகமாக வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. புவி ஈர்ப்பு விசையைப் போல அது நீக்கமற நிறைந்து விடுகிறது. இயல்பான ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய இருட்டை விட்டு வெளியே வந்த போது என்னிடம் நகைச்சுவை இருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதிலும், என்னை நானே வெறுப்பதிலுமே என் கவனம் இருந்தது. அடுத்தப் பத்தாண்டுகளில் எனக்கான வெளியை கண்டடைந்தேன். ஆனால், என் வாழ்க்கையின் துயர்களை நகைச்சுவைக்கு நடுவே மறைத்துக் கொண்டேன். என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்லியே ஆகவேண்டும்,

 

யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பாடத்தை நான் அதிகவிலை கொடுத்துக் கற்றுக்கொண்டேன். அந்தப் பாடம் தன்பாலின ஈர்ப்பை பற்றியது அல்ல. பொதுவெளியில் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் எப்படி விவாதிக்கிறோம்? அது சிறுபிள்ளைத்தனமானதாக, வெறுப்பு வழிவதாக, அழிவுக்கு அறைகூவல் விடுப்பதாக இருக்கிறது. நாம் யாருடன் முரண்படுகிறோமோ அவர்களை விட நியாய உணர்வு மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம். அவர்களின் மனித நேயத்தை நம்முடைய கருத்துக்களின் மூலம் தட்டி எழுப்ப நாம் முனைவதே இல்லை. அறியாமை நம்மிடையே எப்போதும் நடமாடி கொண்டே இருக்கும். யாருக்கும் அனைத்தும் தெரியாது.

……………………………….

நான் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கலை வரலாறு படிப்புக் கற்றுக்கொடுத்தது. இந்த உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று நான் மெத்தனப்படவில்லை. கலை வரலாற்றைப் பொறுத்தவரை பெண்கள் இரு வகை மட்டுமே – கற்புக்கரசி, வேசி. ஆணாதிக்கம் சர்வாதிகாரம் இல்லை. அது ஒரு பெண்ணுக்கு இரண்டு தேர்வுகளைத் தருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாம் உய்ய வேண்டும். மேற்கத்திய ஓவியங்களில் வந்து செல்லும் பெண்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள், சதைப்பிண்டங்கள்…. நான் இந்த உன்னதக்கலையை அதன் உண்மையான பெயர் சொல்லி அலைக்கப்போகின்றேன். அது ‘bullshit’! ஆண்கள் தங்களுடைய ஆசனவாயின் மலர்களை ஏந்தும் ஜாடிகளாகப் பெண்களைக் கருதி வரைந்தவையே இந்த மேற்கத்திய ஓவியங்கள்…

 

நான் பாப்லோ பிகாசோவை வெறுக்கிறேன். அவர் நவீன ஓவியக்கலையின் க்யூபிசத்தைத் தந்தவர் என்பதால் அவரை நீங்கள் வெறுக்கக் கூடாது என்பார்கள். பிகாசோ மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த மனநோயின் பெயர் பெண் வெறுப்பு. பெண் வெறுப்பு மனநோயா என்று நீங்கள் அதிரக்கூடும். ஆம், தன்பாலின ஈர்ப்பற்ற ஆண்களுக்கு இருக்கும் பெண் வெறுப்பு மன நோயே ஆகும். பிகாசோ மனநோயாளி இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பிகாசோவின் ஒரு மேற்கோள் இது, ‘ஒவ்வொரு முறை ஒரு பெண்ணை விட்டு விலகும் போதும் அவளை எரிக்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணை, அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த காலத்தை மொத்தமாக அழித்துவிட வேண்டும்.’ அவர் பதினேழு வயதே ஆன மரியா தெரசா வால்டர் என்கிற பெண்ணோடு உடலுறவு கொண்டார். அந்தப் பெண் சட்டப்படி வயது வந்தவர் கிடையாது. பிகாசோவிற்கு அப்போது நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. அவருக்குத் திருமணமாகி இருந்தது. அதனை நியாயப்படுத்த வேறு செய்தார். ‘ I was on my prime. She was on her prime’ என்று அதை விவரித்தார். இதனைப் படித்த போது எனக்கு வயது பதினேழு. நான் அப்படியே உறைந்து போனேன்.

Image result for pablo picasso marie therese walter

பிகாசோ உருவாக்கிய க்யூபிசம் மகத்தான அற்புதம். அவர் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இரு பரிமாண தலத்தில் முப்பரிமாண வடிவங்களை வரைய ஓவியர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். பிகாசோ இப்படி ஒரே ஒரு பார்வையோடு ஓவியங்களை வரைய மாட்டேன் என்று மறுத்தார். ‘உங்களுடைய பார்வைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் பாயட்டும். மேலிருந்து, கீழிருந்து, உள்ளிருந்து, வெளியில் இருந்து என்று அனைத்து பார்வைகளைக் கொண்டதாகவும் இருக்கட்டும்’ என்று அவர் போட்ட வித்தே ஓவியத்துறையைப் புரட்டி போட்டது. அற்புதம். எத்தகைய கலைஞன். இப்போது சொல்லுங்கள். அவர் படைத்த எத்தனை ஓவியங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்திருந்தன. எதுவுமில்லை. அவை அவரின் பிறப்புறுப்பின் எண்ணங்களைக் கலைடாஸ்கோப் கொண்டு காட்டிய ஓவியங்கள். அவ்வளவே. கலையையும், கலைஞனையும் பிரித்துப் பாருங்கள் என்கிறார்கள். நான் பிரித்துப் பார்க்க மறுக்கிறேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் இத்தனை கலை வரலாறு உங்களை மூச்சு முட்ட வைக்கும். மன்னிக்கவும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் காமுகர்களாக இருப்பது, ட்ரம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது முதலியவை நகைச்சுவைக்குப் பயன்படும். முன்னொரு காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மோனிகா லெவின்ஸ்கி பன்ச் லைனாகப் பயன்படுத்தப்பட்டார். அவரைக் கேலி செய்ததற்குப் பதிலாக, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கிளிண்டனை நகைச்சுவை கலைஞர்கள் மேடைகளில் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தால், இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி விட்டு அதைக்குறித்து அகங்காரத்தோடு அறிவித்துக் கொள்ளும் ஒரு ஆண் அமெரிக்கக் குடியரசு தலைவர் மாளிகையில் உட்கார்ந்திருக்க முடியாது.

 

நம்முடைய நகைச்சுவையின் இலக்காக இருக்க வேண்டும் தெரியுமா. ஒருவரின் நற்பெயர் மீது நமக்கு இருக்கும் அளவுகடந்த வெறி. அனைத்தையும் விட ஒருவரின் புகழ் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. மானுடத்தை விடவும் நற்பெயர் நமக்கு முக்கியமானதாகி விடுகிறது. இவ்வாறு வழிபாட்டுத்தன்மையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒழிய வேண்டும். பிரபலங்களான பிகாசோ, கிளின்டன், ட்ரம்ப், வேய்ன்ஸ்டீன், ரோமன் போலன்ஸ்கி என்று பெண்களை, குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய ஆண்கள் விதிவிலக்குகள் அல்ல. அவர்களே பெரும்பான்மை. அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல, அவர்களே சமூகத்தின் உண்மை முகத்தைச் சொல்லும் கதைகள்.

Image result for donald trump clinton polanski

இந்தக் கதைகளின் நீதி என்ன தெரியுமா? ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே? இந்த ஆண்கள் நம்முடைய வாழ்க்கை கதைகளைப் படிப்பவர்கள். அவர்கள் மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அது குறித்துத் துளி கூடக் கவலைப்படவில்லை. இந்த ஆண்கள் தங்களுடைய விலை மதிப்பில்லாத புகழோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை, இவர்கள் எத்தனை கொடூரமானவர்களாக இருந்தாலும் நாம் கவலை கொள்வதில்லை. புகழ் மீதான உங்களுடைய வெறி கெட்டு ஒழியட்டும். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். ம்ம்ம்ம். (பெருமூச்சு விட்டு சிரிக்கிறார்) எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது இல்லையா. நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறையில் இருக்கும் சிலர், ‘இந்தப் பெண் தன்னுடைய பதற்றத்தின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டாள்’ என்று நினைக்கிறார்கள். அது சரி தான். கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் கோபப்படக்கூடாது இல்லையா? தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி?’ என்று என்னை அடித்துத் துவைத்தான். நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்றேன். நான் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு ஆவது போயிருக்க வேண்டும். நான் இவை எதையுமே செய்யவில்லை. ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே நிறைத்தால் அது தான் வாழ்வதற்கான எந்தத் தகுதியும் அற்ற ஒருத்தியாகத் தானே உணரும். மற்றொரு புறம், இன்னொரு மனிதன் என்னை வெறுப்பதற்கும் அனுமதி தருகிறீர்கள்.

 

அந்தச் சம்பவம் நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பதால் நிகழவில்லை. அது என்னுடைய பெண் அடையாளம் சார்ந்தது. நீங்கள் பெண் என்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களின் படி, நான் வழிதவறிப்போன பெண். நான் தண்டிக்கப்பட வேண்டியவள். இந்த வாழ்க்கைப்போராட்டம் உங்களால் ஏற்பட்ட பதற்றம். இதனை இனிமேலும் என்னால் சுமந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் போன்ற ‘இயல்பானவர்களாக’ இல்லாத எங்களுக்குள் இந்தப் பதற்றம் சுட்டெரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்பது தானே உங்களுடைய பார்வையாக இருக்கிறது.

 

இந்த அறையில் இருக்கும் ஆண்களே. உங்களுடைய சட்டையை மடித்துக் கொண்டு இந்த அநீதிக்கு எதிராகக் கிளம்புங்கள். சே, என்ன அவமானம் இது! ஒரு லெஸ்பியன் உங்களுக்கு எப்படி ஆடை அணிவது என்று அறிவுரை சொல்கிறாள். இந்த நிகழ்ச்சியின் கடைசி நகைச்சுவையாக இதுவே இருக்கட்டும்.

 

என் வாழ்க்கை முழுக்க நான் ஆண்களை வெறுப்பவள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஆண்களைச் சத்தியமாக வெறுக்கவில்லை. நான் பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் எண்ணியதில்லை. அதிகாரம் தலைக்கேறினால் ஆண்களைப் போலவே பெண்களும் நடந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஆண்களான நீங்கள் ஒட்டுமொத்த மானுட நிலையை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று இயங்குகிறீர்கள். அதிகாரம் ஆண்களுக்கு உரியது, மனிதகுல மேன்மை எங்களுடைய பொறுப்பு என்று நீங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுகிறீர்கள். அப்படித்தான் கதைகளைக் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். உங்களை நோக்கி எழுப்பப்படும் ஒரு விமர்சனத்தை, ஒரு எளிய நகைச்சுவையை உங்களால் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையே. உங்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றத்தை வன்முறை இல்லாமல் சீர்செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் சிரமேற்றுக்கொண்ட பணிக்குத் தகுதியானவர்கள் தானா நீங்கள் என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

 

நான் ஆண்களை வெறுக்கவில்லை. நான் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறேன். ஒரு அறையில் ஆண்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்க நேர்ந்தால் எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இப்படி நடந்து கொள்வது வேடிக்கையானது என நீங்கள் எண்ணக்கூடும். அப்படி என்றால், நீங்கள் பெண்களோடு உங்கள் வாழ்க்கை முழுக்க உரையாடி இருக்கவில்லை என்று பொருள். நான் உங்களை வெறுக்கவில்லை. என்னைப்போன்ற பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் வாழ்ந்திருந்தால் என்னாகி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்.

Related image

 

நான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானேன். என்னுடைய பதினேழு வயதில் ஒரு ஆண் என்னை அடித்துத் துவைத்தான். என்னுடைய இருபதுகளில் இரு ஆண்கள் என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு நடந்தவை சரியானவையே என்று ஏன் சமூகம் கருதியது. ஏன் என்னை மட்டும் குறிவைத்து தாக்கினார்கள். நான் உங்களில் இருந்து வேறுபட்டவள் என்பதால் தானே? இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே? உங்களைப் போல இல்லாமல் வேறுபட்டவர்களாக இருப்பது அத்தனை பெரிய குற்றமா?

 

உங்களிடம் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்னை நீங்கள் பாதிக்கப்பட்டவளாகப் பார்க்க ஆரம்பித்து இருக்கலாம். நான் ஒன்றும் பாதிக்கப்பட்டவள் இல்லை. என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில், என் கதை மதிப்புமிக்கது. நீங்கள் அனைவரும் என் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன அறிந்து கொண்டேன் என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கவே உங்கள் முன் நிற்கிறேன். எங்களை ஆதரவற்றவர்களாக நிற்க வைத்தாலும் எங்களுடைய மனித நேயம் இறந்து விடாது. இத்தனை வலிகளுக்கு நடுவேயும் நம்பிக்கையோடு இருப்பதே மனிதநேயம் தான். இன்னொரு சக மனிதரை ஆதரவற்றவர்களாக நிற்க வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கருதிக்கொண்டு இயங்குபவர்களே மனிதநேயம் அற்றவர்கள். அவர்களே பலவீனமானவர்கள். அத்தனை அடிகளுக்குப் பிறகும், உடைந்து போகாமல் இருப்பதே உன்னதமான வலிமை.

 

ஒரு பெண்ணை அழிக்கிறீர்கள் என்றால் அவளுடைய கடந்த காலத்தையும் அழிக்கிறீர்கள். என்னுடைய கதையை நான் சாகவிட மாட்டேன். என்னைப்போலப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன். நான் குறை சொல்வதற்காக என் கதையைச் சொல்லவில்லை. பணம், அதிகாரம், புகழ் நாடி என் கதையை உங்கள் முன் கொட்டவில்லை. என்னை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமையின் வெம்மை சற்றே தணியவே என் கதையைக் கண்ணீரோடு சொல்கிறேன். உங்களோடு என்னைப் பிணைத்து கொள்ளவே என் கதையைச் சொல்கிறேன். என் கதையை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். முரண்சுவையாக, பிகாசோ சொன்னதைப் போல, ‘நாம் வேறுபட்ட சமூகத்தை வரைய துணிவோம்.’ எல்லா வகையான பார்வைகளும் கொண்ட உலகத்தைப் படைக்க முனைவோம். வேறுபாடுகள் கொண்ட சமூகமே நம்முடைய பலம். வேற்றுமைகளே நமக்கான ஆசிரியர். வேறுபாடுகளைக் கண்டு அஞ்சுவீர்கள் என்றால் நம்மால் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.

Image result for tasmania  anti gay

 

பிகாசோ எல்லாருடைய பார்வைகளையும் தானே படைத்துவிட முடியும் என்று நம்பியது தான் அவரிடம் இருந்த கோளாறு. அவரின் பார்வையை மட்டுமே கணக்கில் கொண்டதால் தான் நம்மால் ஒரு பதினேழு வயதின் பெண்ணின் பார்வையைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு பதினேழு வயது பெண்ணிடமா உன்னுடைய பலத்தைப் பரிசோதிப்பாய். என்னைப்போன்ற வலிமை மிக்கப் பெண்ணிடம் உன் வேலையைக் காட்டிப்பார் காமுகனே. வரமாட்டாய். உடைந்து, உருக்குலைந்து போய், தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட பெண்ணை விட உலகில் வலிமை மிக்கவர் யார் உள்ளார்?

[பலத்த கரவொலி]

 

எதோ ஆண்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நான் கேள்விகளால் துளைப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு வாழ்நாள் முழுக்க அனுபவித்ததை ஒரு மணிநேரம் உங்களுக்குச் சுவைக்கத் தந்தேன். அவ்வளவே. எனக்கு ஏற்பட்ட ரணங்கள் உண்மையானவை, அவை என்னை முடக்கி போட்டன. நான் மீண்டும் தழைக்க முடியாது. அதனால் தான் நான் நகைச்சுவை கலைஞராக இனிமேலும் தொடரக்கூடாது. என்னுடைய பதற்றம் மிகுந்த கதையை நகைச்சுவையால் சொல்லிவிட முடியாது. அதனைக் கோபத்தோடு தான் உரக்க சொல்ல முடியும். நான் கோபத்தோடு இருக்கிறேன். எனக்குக் கோபப்பட எல்லா உரிமையும், நியாயமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய கோபத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உரிமையில்லை. நான் அதனை நிச்சயம் செய்யமாட்டேன். கோபமும் நகைச்சுவையைப் போல அனைவரையும் இணைக்கக் கூடியது. முகந்தெரியாத மனிதர்கள் அனைவரும் ஒரே கோபத்தில் ஒன்று சேர முடியும். அது ஆனால் நல்லதில்லை.

 

நகைச்சுவையைப் போலக் கோபம் பதற்றத்தை தணிக்காது. கோபமே ஒரு நச்சான பதற்றம். அது வேகமாகப் பரவும் வியாதி. அதற்குக் கண்மூடித்தனமான வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய கருத்துரிமை பொறுப்பு மிக்க ஒன்று. நான் பாதிக்கப்பட்டவள் என்பதற்காக என் கோபத்தைப் பரப்புவது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது. வெறுப்பு என்றைக்கும் மேம்பாட்டிற்குப் பயன்படாது.

வாய் விட்டு சிரித்தால் நம்முடைய நோய்கள் விலகாது. கதைகள் நம்மைக் குணப்படுத்தும். நகைச்சுவை கசப்பான கதைகளைத் தேன் தடவி தருகிற ஒன்று. நீங்கள் நகைச்சுவையாலோ, வெறுப்பாலோ ஒன்று திரள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் கதைக்குச் செவிமடுங்கள். என் கதையை ஒவ்வொரு சுய சிந்தனையுள்ள மனிதரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். என் கதை உங்களுடைய கதையைப் போன்றதில்லை. ஆனால், என் கதை உங்களுடைய கதையும் கூட. என் கதையை இனிமேலும் என்னால் சுமக்க முடியாது. என் கதையைக் கோபத்தால் நிறைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கதையை அக்கறையோடு பார்த்துக் கொள்ள உதவுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

வான்காவின் மகத்தான படைப்பான சூரிய காந்திகள் அவருடைய மனநோயால் நமக்குக் கிடைக்கவில்லை. அத்தனை துயரத்திலும், வலியிலும் அவனை நேசிக்க ஒரு உயிர் இருந்தது. அவன் தம்பியின் அன்பு இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பற்றிக்கொள்ள, தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள வான்காவுக்கு உதவியது. நாம் படைக்க விரும்பும் கதையின் மையமும் அதுதான். ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ளவர்களாக உணர வேண்டும். பிணைய வேண்டும். நன்றி!

Image result for hannah gadsby netflix

 

மூன்று பில்போர்ட்களோடு ஒரு கொலையாளியை தேடுவது எப்படி?


நீதி என்பது எளியவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. படியேறவே முடியாதவர்கள், போராடி களைத்தவர்கள், தோள் சாயக்கூட ஆளில்லாதவர்கள் எப்படி போராடுகிறார்கள்? வெறுப்பு மட்டும் தான் காயப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட மனிதர்களை செலுத்துகிறதா? Three billboards in Ebbings  திரைப்படம் இந்த கேள்விகளை தாங்கி மறக்க முடியாத திரை அனுபவத்தை தருகிறது.

மில்ட்ரெட் எனும் பெண்ணுடைய மகள் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்படுகிறாள். பல மாதங்கள் ஆகியும் வழக்கில் துளி கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கிறது. மூன்றே பில் போர்ட்களில் விளம்பர வாசகங்களை எழுதுவதாக காட்டிக்கொண்டு காவல்துறையை எள்ளி நகையாடுகிறார் மில்ட்ரெட். குறிப்பாக கணைய புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் தலைமை காவல் அதிகாரியை குறிவைத்து தாக்குகிறது ஒரு பில்போர்ட்.
Image result for three billboards outside ebbing
இனவெறி கொண்ட, வன்முறையை தோன்றுகிற போதெல்லாம் ஏவும் காவலன் ராக்வெல் கொதிக்கிறான். மில்ட்ரெட்டுடன் வேலை பார்க்கிற பெண், விளம்பர நிறுவன இளைஞன் என பலரையும் தொல்லை செய்கிறான். முகத்தில் சற்று கூட இரக்கத்தின் சாயல் படியாத மில்ட்ரெட் வீடு தேடி  வந்த ஒரு மானிடம் மனம் விட்டு பேசுகிற கணம் அற்புதமானது. இறை நம்பிக்கையில்லாமல், மகள் முற்றாக இறந்து போனாள் என உணர்ந்தாலும் மகளின் மரணத்திற்கு நியாயம் தேடி ஓய மறுக்கிற மில்ட்ரெடின் அன்பு ததும்ப அக்கணத்தில் வெளிப்படுகிறது.
தலைமை காவல் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார். அவர் மில்ட்ரெட், ராக்வெல், தன்னுடைய மனைவி என பலருக்கும் கடிதங்கள் வரைகிறார். மில்ட்ரெட் மகளை கொன்றவனை கண்டுபிடிக்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறார். விளம்பர பலகை வைத்து தன்னை கூனிக்குறுக வைத்த
மில்ட்ரெட்டை நுண்மையாக பழிவாங்கியதை தெரியப்படுத்துகிறார். ராக்வெல் பில்போர்ட்டை வரைந்த நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞனான வெல்பியை அடித்து துவைத்து பணியிழக்கிறான். அவன் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியின்  கடிதத்தை படிக்கிறான். ‘வெறுப்பது எதையும் சாதிக்க உதவாது. அன்பு செய்யப்பழகு. அது உன்னை மகத்தான துப்பறிவாளனாய் ஆக்கும்’ என்கிறது. மில்ட்ரெட்டால் பற்றியெரியும் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கும் ராக்வெல் அவளுடைய மகளின் வழக்கு கோப்பை காப்பாற்றுகிறான்.
Image result for three billboards outside ebbing
முகம் முழுக்க மூடப்பட்டு தீக்காயங்களோடு மருத்துவமனை போகிறான் ராக்வெல். அங்கே இவனால் அடிபட்ட வெல்பி, ராக்வெல் எனத்தெரியாமல் கனிவோடு நம்பிக்கை ஊட்டுகிறான். கரிசனம் ததும்ப ஆரஞ்சு சாறு அருந்த உதவ முனைகிறான். கண்ணீர் வழிய ‘மன்னித்துவிடு வெல்பி’ என்கிறான் ராக்வெல். அவனென தெரிந்த பின்பும், ‘அழாதே. உப்புநீர் காயத்தை இன்னும் கூட்டிவிடும்’ என கவலை கொள்கிறான் வெல்பி. இன்னமும் அக்கறையோடு உதவுகிறான்.
ராக்வெல் மில்ட்ரெட்டின் மகளின் கொலையாளியை தேடி பயணிக்கிறான். சில தடயங்கள் கிடைக்கின்றன. மில்ட்ரெட்டின் வாழ்க்கையில் நம்பிக்கை பூக்கிறது. அடுத்து என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.
நீதி நாடுபவர்களை அடக்கும் அதிகார வர்க்கம், நீதிக்கான சிறுமுயற்சியும் சமூகத்தால் நிர்மூலமாக்கப்படுவதை சொல்லாமல் சொல்லும் பற்றியெரியும் பில்போர்ட்கள், வெறுப்புகள், கசடுகள் தாண்டி மனித மேன்மை நாடுபவர்கள், மன்னித்தலுக்கும், பழிவாங்கலுக்கும் இடையே அல்லாடுபவர்கள், புன்னகைக்க மறைந்த இழப்புகளின் வடுக்கள் தாங்கியவர்களின் உலகம் என அத்தனை நெருக்கமான திரைப்படம்.
Image result for three billboards outside ebbing