தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன?


தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்

இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?

இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,
பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,
இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.

(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )

தமிழில்: பூ.கொ.சரவணன்

காந்தியும், மதச்சார்பின்மையும்


காந்தியும், மதச்சார்பின்மையும் – அனில் நௌரியா

(மதச்சார்பின்மை என்கிற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலதுசாரிகள் குரல் எழுப்பிக்கொண்டுள்ள சூழலில், காந்திக்கும் மதச்சார்பின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இக்கட்டுரையை அவசியம் வாசியுங்கள்… )

மதச்சார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா, ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே
உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாகப் புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. மதச்சார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்தத் தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்
எழுத்துக்கள் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாகக் காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தைப் பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். மே 6, 1933 இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.

மேலும் நவம்பர் 1933 இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.

ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன் உரையாற்றினார். அப்போது “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் சட்டசபை போன்ற மதச்சார்பற்ற அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )

ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றிக் காந்தி பேசுகிற பொழுது இப்படிச் சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொதுப் பயன்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையைப் பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத / நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பின்மைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.

இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.

”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நிதி ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்தப் புரவலும் ஆங்கில அரசு செய்தது போலத் தராது என்றும் சொன்னார். இந்தப் புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது

இந்தச் சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்
பாடுபட்டதாகக் காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்துத் தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்
எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க இயலும்.” என்றார்

நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லாக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்தத் தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.

குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தைக் கொண்டு சோமநாதர் ஆலயத்தைப் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : “நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அக்காலச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு 1969க்கு பின்னர்
கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன.

காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ நன்கு கட்டமைப்பக்பட்ட, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம், வழிகாட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்தப் பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “

காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம் பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளைப் பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய நாட்குறிப்புகளில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். இந்தியா மதச்சார்பின்மையைத் தன் பண்பாகக் கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும், இந்திய தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் காந்தி, நேரு இருவரும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். இதனை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாகப் பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய
பிராந்திய தேசியத்தைக் காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. ஒத்துச்செல்லும் கருத்துகளை விட முரண்பாடுகள் ஆழமாக இருந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாகச் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை காந்தி பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்திக் காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவ சக்திகள் இதை முக்கியப்பணியாகச் செய்தன. இப்படிக் காந்தி,நேரு இருவரையும் பிரித்துக் காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாகக் காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்துக் கருத்தியல் ரீதியாகத் தாக்கமுடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்தக் காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதைப் பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூடத் தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்காலக் கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் இரு நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

(இக்கட்டுரை அனில் நௌரியாவின் Gandhi on secular law and state எனும்
கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது )

புகைப்படம்: மதக்கலவரத்தால் சிதறுண்ட பீகார் மாநில வீடொன்றில் காந்தி

நன்றி: நவ்ஜீவன் அறக்கட்டளை

தமிழில்: பூ.கொ. சரவணன்

தலித் விடுதலையை சீர்குலைத்த பூனா ஒப்பந்தம்: 


பூனா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று.


தனித்தொகுதி முறையை அம்பேத்கர் வென்றெடுத்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து காந்தி அதனைத் தட்டிப் பறித்தார். இதைக்குறித்து ஓரிரு கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம். முதலாவதாக ரோஹித் வெமுலாவின் மரணத்தை அடுத்து சோயப் தானியல் எழுதிய கட்டுரையில் இருந்து தனித்தொகுதி முறை, தற்போதைய தேர்தல் முறை குறித்த பத்திகள் மட்டும் வாசிப்புக்காக:

தேர்தல் முறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம்: … அம்பேத்கர் காலம் தொடங்கித் தலித் இயக்கமானது தேர்தலில் தலித்துகளுக்கு இடங்களை ஒதுக்கும் முறையானது பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளது.

1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள். காங்கிரசின் தலைவரான காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார் (தற்போதைய முறையின் முன்னோடி). இதைக்குறித்து, 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே” தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் என்று நேரடியாகச் சாடினார். 

காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, தலித் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்பேத்கருக்கு ஒரே ஒரு சிறிய சலுகையாக, முதல்கட்டத் தேர்தலில் ஒவ்வொரு தலித் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முதல் கட்டத் தேர்தலில் வெற்றி பெறும் நான்கு வேட்பாளர்களுக்கு இறுதியாக அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பார்கள். 

அம்பேத்கர் சரியாகக் கணித்ததைப் போலவே, இத்தகைய கூட்டு வாக்களிப்பு முறை அவருடைய கட்சிக்கு பேரிடராகவும், காங்கிரசிற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சின் தலைமைப் பொறுப்பில் முழுக்க முழுக்க மேல்சாதியினரே ஆதிக்கம் செலுத்தினாலும் இத்தகைய கூட்டுத் தொகுதி முறை அதற்கே பயனளித்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிப் பெற்றது. அம்பேத்கர் தோற்றுவித்து இருந்த விடுதலை தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து நடந்த 1946 தேர்தலில் காங்கிரசின் வெற்றியும், அம்பேத்கரின் தோல்வியும் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகளில் 123 இடங்களில் வெற்றிப் பெற்றது. அம்பேத்கரின் கட்சி இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது,

”மோசடியான பிரதிநிதித்துவ முறை’:

இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பேத்கரை கடுமையாகக் கோபப்படுத்தியது. கூட்டு வாக்களிப்பு முறையே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார். 1946 -ம் ஆண்டுத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களித்த நிலையில், தன்னுடைய கட்சி 26% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 29% வாக்குகளையும் பெற்றதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். ஆனால், அனைத்து சாதிகளும் வாக்களித்த இறுதித் தேர்தல் முடிவுகளில் அறுபது மடங்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் இறுதியாக வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உண்மையான தலித் பிரதிநிதிகள் இல்லையென்று அம்பேத்கர் வாதிட்டார். 1946-ம் ஆண்டின் இறுதியில் அம்பேத்கர் இப்படிப் பேசினார்:

‘பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கு எப்போதும் சட்டமன்றத்தில் போராடக்கூடிய நம்பகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பட்டியல் சாதியினரே தேர்ந்தெடுப்பதைத் தனித்தொகுதி முறை மட்டுமே உறுதி செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒழித்துக் கட்ட முயன்றால் அவற்றை எதிர்க்கவும் தனித்தொகுதிகள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை, பட்டியல் சாதியினரின் வலிகளை வலிமையாகக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒரே ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கூடக் கொண்டுவரவில்லை […] இப்படிப்பட்ட பட்டியல் சாதி உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மோசடிக்கு பதிலாகப் பட்டியல் சாதியினருக்குச் சட்டமன்றத்தில் இடமே தராமல் இருந்துவிடலாம்’

இத்தகைய கவலை அம்பேத்கரை மட்டுமே அரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர்கள் ஆலிவர் மென்டெல்சொஹ்ன் & மரிக்கா விக்ஸியன்யாண்ட் ஆகிய இருவரும் எம்.சி.ராஜா அவர்களை ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த அரசியல்வாதி’ என்று வர்ணிக்கிறார்கள். அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் தலைமையில் கூட்டு வாக்களிப்பு முறையால் சாதி இந்துக்களோடு இணைந்து கொண்டு நுழைகிற தலித்துகள், எங்களுக்கு அரணாக இருப்பதைவிட, சாதி இந்துக்களின் தலைமையில் எங்களுடைய சுதந்திரத்தை அழிக்கவும், எங்கள் கழுத்துகளை வெட்டி சாய்க்கவும் காங்கிரசிற்குத் துணை போகிறார்கள் என்று எண்ணுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கசப்போடு எழுதினார்.

விடுதலைக்குப் பிறகு:

விடுதலைக்குப் பிறகு தலித்துகளுக்குத் தனித்தொகுதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. முதலாவதாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறைய பிரிவினைக்கு அடிகோலிய முதன்மையான காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரிவினை ஏற்படாமல் போயிருந்தாலும் தன்னுடைய இருபதாண்டு கால நிலைப்பாட்டைக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம். உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்குப் பூனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% தலித் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

இதன்மூலம், தலித் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமுகத்தின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்று கருதினார். வல்லபாய் படேல் அதனை முழுமையாக நிராகரித்தார். “இதனை நான் எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும்? அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதை மறந்து விடுங்கள்…இத்தகைய தாழ்வு மனப்பான்மையைத் தாங்கிக் கொண்டு இருந்தால், அவர்களால் சமூகத்திற்குச் சேவையாற்ற முடியாது.”

விடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் அம்பேத்கரின் கட்சி இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையானது பேரிடராக மாறியது என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலித் நலன்களை முன்னிறுத்தவில்லை என்பது ஒரு புறம். மறுபுறம், இத்தகைய தொகுதி ஒதுக்கீட்டு முறையால், பிற சமூகக் குழுக்களோடு தலித்துகளால் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள இயலாமல் போனது. 1955-ல் அம்பேத்கரின் கட்சியானது தலித்துகளுக்கு என்று தொகுதிகளைத் தேர்தல்களில் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.

அம்பேத்கரின் கருத்து 1932-ல் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று, 1955-லும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அப்படியே தொடர்கிறது. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கிளர்ந்து எழும் “உயர் சாதி” குழுக்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சட்டை செய்வதே இல்லை. இந்த முறை அதிகார அமைப்பினில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது. இதனால், இம்முறை “மோசடியான பிரதிநிதித்துவம்” என்று தெளிவாகிறது. கிறிஸ்தோப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுவதைப் போல, விடுதலையடைந்த காலத்தில், “தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலித் அல்லாதோர் வாக்குகளைக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதில் தேர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது”. இம்முறையைப் பாரதி ஜனதா கட்சி தற்போது கைக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச தலித் எம்பிக்களைக் கொண்டுள்ள கட்சியாக அது திகழ்ந்தாலும், ரோஹித் வெமுலாவின் தற்கொலையைப் போன்ற பெரும் தலித் துயரத்தை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் அக்கட்சி திகைத்து நிற்கிறது.

மூலம்:  https://scroll.in/article/802377/despite-having-40-dalit-mps-why-has-the-bjp-ignored-dalit-complaints-dr-ambedkar-has-the-answer

தமிழில்: பூ.கொ.சரவணன்

காந்தியார் சாந்தியடைய : நூல் அறிமுகம்


2009-ம் ஆண்டின் இறுதி கணங்கள் அவை. வெறுப்பும், அசூயையும், சென்னை மாநகர் தந்த பதற்றமும் என்னை விழுங்கி கொண்டிருந்த படப்படப்பான கணங்கள் அவை. காந்தியை ஏதேதோ காரணங்களுக்காக வெறுக்கப் பழகியிருந்தேன். அவர் குறித்து ஒரு வார்த்தை நல்லதாகக் கேட்டாலும், கடுமையான மொழியை, பதட்டம் நிறைந்த விமர்சனங்களை, கண்மூடித்தனமான காழ்ப்பை கொட்டிய காலம். ஊருக்கு போக வேண்டிய சூழலில் கன்னிமாரா நூலகத்தில் இருந்து காந்தியார் சாந்தியடைய எனும் நூலை எடுத்துக் கொண்டேன். நூலின் தலைப்பில் ‘தடை செய்யப்பட்ட எழுத்தும், காலமும்’ என்கிற தலைப்பு இருந்தது ஈர்ப்புக்குக் காரணம்.

பேருந்தில் ஏறிக்கொண்டேன். உட்கார இடமில்லை. நடக்கிற பாதையில் கால் வலிக்க உட்கார்ந்து விட்டேன். அப்படியே தூங்கி விடலாம் என்று கூடத் தோன்றியது. மருவத்தூர் வரும் வரையில் ஓட்டுவோம் என்று பைக்குள் கைவிட்டு எடுத்ததும் இந்த நூல்தான் கையில் கிடைத்தது. கொஞ்ச நேரம் படிப்போம் என்று கையில் எடுத்து உட்கார்ந்தேன்.
மெதுவாகவே வாசிக்கிற பழக்கம் கொண்ட நான், நான்கு மணிநேர பேருந்து பயணம் முழுக்க அந்த நூலில் மூழ்கிப்போனேன். அந்த எழுத்து நடை, வரலாற்றை நெருக்கமாகக் கண் முன் நிறுத்தும் மொழி, காந்தியோடு வகுப்புவாத களத்துக்கு அழைத்துப் போகும் நூல் பகுப்பு எல்லாமே அசரடித்தன.

காந்தி ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று பெரியார் தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், காந்தியின் படுகொலைக்கு அடுத்து, பெரியார் உணர்ச்சிவசப்பட்டார். இருந்தது ஆரிய காந்தி, இறந்தது நம் காந்தி என்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்குக் காந்திஸ்தான் என்று பெயரிட வேண்டும் என்று கூட வலியுறுத்தினார். எந்தக் காந்தி ஒழிய வேண்டும் என்று ஓயாமல் இயங்கினாரோ, அதே காந்திக்கு திராவிட இயக்கத்தின் சார்பாக இரங்கல் கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடத்தப்பட்டன. ‘காந்தியார் சாந்தியடைய’ என்கிற பன்னிரெண்டு பக்க நூலை ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதினார். மதவாதிகளை மிகக்கூர்மையாக எதிர்கொண்ட அந்த நூல் தடை செய்யப்பட்டதோடு, நூல் ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைக் கட்டத்தவறினால் கடுங்காவல் தண்டனைக் காலம் கூட்டப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. சிறையில் அவருக்கும், நூலை வெளியிட்டவர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் அட்டைப்படமாக வெளிவந்தது.

இந்தப் பதட்டமும், எதிர்ப்பும் மிகுந்த பிரிவினை, காந்தி படுகொலை காலத்தை இந்துஸ்தான், பாகிஸ்தான், காந்திஸ்தான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு நூல் அலசுகிறது. ஒரே ஒரு நூல், மனதில் அப்பிக்கிடந்த அத்தனை வெறுப்பையும் அடித்துக் கொண்டு போகக்கூடும் என்பதைக் கண்டடைந்த நாள் அது. நீங்களும் மதவாதத்தைக் காந்தி எதிர்த்த அந்த மகத்தான வரலாற்றை, அதில் திராவிட இயக்கமும் கைகோர்த்துக் கொண்ட காலத்தைப் படித்துணருங்கள். நூல் வெகு காலத்திற்குப் பிறகு மறு பதிப்புக் கண்டிருக்கிறது.

https://www.commonfolks.in/books/d/gandhiyar-saanthiyadaiya-parisal

பக்கம் 158 விலை 160
காந்தியார் சாந்தியடைய
ப.திருமாவேலன்
நூலை பெற 9382853646/8778696612

இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்

 

பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU

நேருவின் நம்பிக்கை – பகுதி-5


நேரு

நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி
நேரு மதநம்பிக்கை இல்லாத அரசியல்வாதியாக இருந்தாலும் ஆழமான அறவுணர்வு மிக்கவர். மதத்தை நாடி அதன்மூலம் ஓர் அறத்தை உருவாக்க அவர் முயலவில்லை. அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயங்களுக்கு ஆளானாலும் நேரு மதத்தை நாடாமல் அறநெறியை உருவாக்க முயன்றார். நேரு அறத்தின்மீது கொண்டிருந்த நம்பிக்கையும், தன்னுடைய கொள்கைகளைக் கைவிடாத குணமுமே அவரின் அரசியல் செயல்பாடுகளை உறுதியாகத் தாங்கிக்கொண்டன.
நேரு

இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஒரு முரண்பாடு பரவலாகக் காணக் கிடைக்கிறது. ஏராளமான அரசியல்வாதிகள் ‘நாங்கள் மதநம்பிக்கை உள்ளவர்கள்’ என்று பெருமிதத்தோடு அறிவித்துக்கொள்கிறார்கள். எனினும், இவர்களிடம் ஆழமான அறவுணர்வு கொண்ட பண்புநலனோ, அறப்போராட்டங்கள் குறித்த புரிதலோ, தங்களுடையச் செயல்கள், கொள்கைகள், முடிவுகள் குறித்த சுயவிமர்சனமோ கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். அரசியலில் வெல்வது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதோடு வேலை முடிந்தது என்பது அவர்களின் பார்வையாக இருக்கக் கூடும். இது முழுக்கமுழுக்கத் தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்ள மத நம்பிக்கை, பகுத்தறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிற செயலாகும்.

மதத்தை வெறும் நம்பிக்கையாக மட்டும் காட்டிக்கொண்டு, அதன் அறவுணர்வைத் தட்டிக்கழிப்பது நடக்கிறது. இது மதம், நம்பிக்கை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் ஆழமான, அதிரவைக்கும் மாற்றங்களுக்கு அறிகுறியாகும். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தத்துவ அறிஞர்கள், அறிவுஜீவிகள் காலப்போக்கில் மதம்சார்ந்த விஷயங்கள் தனிநபர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாறும் என்று உறுதியாக நம்பினார்கள். வருங்காலத்தில் மதம் என்பது வீட்டோடு முடிந்துவிடும் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போட்டார்கள். அதற்குத் தலைகீழான ஒன்றே நடந்தது. தற்கால மதமும், நம்பிக்கையும் தனிமனிதர்களின் ஆழமானச் சிந்தனைகள், வாழ்க்கைப் போராட்டங்கள் சார்ந்தவையாக இல்லை. அவை, பொது வாழ்க்கையின் மோதல்கள், குழப்பங்களோடு தொடர்புடையவையாக உள்ளன. மதம் தனக்குள்ளேயே தீவிரமாகத் தொல்லைப்படுத்துகிற கேள்விகளை முன்பு எழுப்பிக்கொண்டது. அதன்மூலம் அறங்களை, நீதிநெறிகளை உருவாக்கியது. அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லாம் அரசியலில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கு மதம் தேவைப்படுகிறது. பொது வாழ்க்கையில் வெல்வதற்கு எவ்வளவு தூரம் மதம் தேவைப்படும், மதத்தை எந்தளவு தங்களின் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தலாம் என யோசிக்கவுமே மதம் பயன்படுத்தப்படுகிறது.

அரசியலில் மதத்துக்கான இடம்குறித்த நேருவின் புரிதல் முக்கியமானது. அவர் ஏன் அரசியலையும், மதத்தையும் பிரித்தேவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் என உணர்ந்துகொள்வது அவசியமானது. வருங்காலத்தில் மதச்சார்பின்மை நாட்டுக்கு நல்லது செய்யும் என்று கண்மூடித்தனமாக நேரு நம்பவில்லை. இந்திய வரலாற்றில் மதச்சார்பின்மை என்பது தவிர்க்க முடியாத சக்தி என்கிற பொன்னுலகக் கனவுகள் எல்லாம் நேருவுக்கு இல்லை. பொருளாதார முன்னேற்றத்தின்மூலம் மதத்தின் சாயலே இல்லாத அரசியலைச் சாதிக்க முடியும் என்று நேரு நம்பவில்லை. அடிப்படைவாத சக்திகளே மதத்தை அரசியலில் கலக்கின்றன; அவையே, தங்களின் தேவைகளுக்கு மதத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்கிற புரிதல் நேருவுக்கு 1930-களில் இருந்தது. அந்தப் பார்வை மார்க்ஸியத்தின் தாக்கத்தால் ஏற்பட்டது. எனினும், இதே பார்வையை அவர் தன் வாழ்நாளின் கடைசி இருபது வருடங்களில் கொண்டிருக்கவில்லை.

நேரு வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிற திறமை மிகுந்தவராக இருந்தார். மதம் என்பது இந்தியச் சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பதைக் காந்தியும், தாகூரும், மெளலானா அபுல் கலாம் ஆசாத்தும், ராஜாஜியும் உணர்ந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடிய, இணைந்து இயங்கிய நேருவும் அதனைப் புரிந்துகொண்டார். சமூகத்தை மதம் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பது கண்முன்னே காணும் தருணமாகப் பிரிவினை மாறியது. அரசு, மதம் ஆகியவை குறித்து நேரு எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருந்தார்? காலப்போக்கில் மதம் அரசியலைவிட்டு நடையைக் கட்டும் என்றோ, அதன் தேவை மங்கிவிடும் என்றோ கண்மூடித்தனமாக நேரு நம்பவில்லை. மதம் அரசியலை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கடந்தகால வரலாற்றின் மூலம் நேரு உணர்ந்துகொண்டார்.

நேரு

நவீன காலத்தில் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் கருவியாகப் பகுத்தறிவை மாற்றக்கூடிய பேராற்றல் பொருந்திய அமைப்பாக அரசு இருக்கிறது. அந்த அரசோடு மதம் கலக்கிறபோது பேராபத்துகள் ஏற்படும் என்று நேரு உணர்ந்திருந்தார். அது ஐரோப்பா, இந்தியாவில் மதம் அரசியலை என்ன பாடுபடுத்தியது என்கிற அனுபவங்களின் அடிப்படையிலான ஒன்று. நாம் உலக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போம். பால்கன் தீபகற்பத்தில் பல்வேறு நாடுகள் அவை இருந்த சுவடே இல்லாமல் சிதைந்துபோயின. அரேபிய தேசியம் வீழ்ந்துகொண்டிருப்பதை அதன் இடிபாடுகளின் இடையே நின்றபடி காண்கிறோம். அதேசமயம், மலையுச்சியின் விளிம்பில் நின்றபடி அதல பாதாளத்துக்குள் விழுந்துவிடாமல் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடும் நபரைப்போல இந்தோனேசியா போன்ற தேசங்கள் தங்களுடைய தேச ஒற்றுமையைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்டச் சவாலான காலத்தில்தான் நேரு மதம் அல்லாத நம்பிக்கையின் மீது ஒரு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் எனக் கண்ட கனவின் வலிமையை நாம் உணர்வது மிகவும் அவசியமாகிறது. மதம் உறுதியாகத் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிற காலத்தில், அது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இந்தப் புதிய நூற்றாண்டில் நாம் ஏன் நேருவின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டும் என்கிற நியாயமான கேள்வி எழலாம். இப்படிப்பட்ட காலத்தில்தான் நம்பிக்கை சார்ந்த நேருவின் கருத்துகளின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதை, நிராகரிப்பதை நாம் செய்யக் கூடாது. மதத்தின் மீது பல்வேறு தேசியங்கள் உறுதிபெற்று இருக்கும் காலத்தில், நேருவின் நம்பிக்கை சார்ந்த கருத்துகளின் இன்றைய தேவையை, முக்கியத்துவத்தை உணர்வது இன்னமும் அவசியமாகிறது. மதம் சாராத நம்பிக்கையே ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றது என்கிற நேருவின் பார்வை முழுக்கமுழுக்கச் சரியானதாகும்.

ஒவ்வொரு புதிய தலைமுறையும், போன தலைமுறையை இழிவாகப் பார்க்கிற போக்கு உண்டு. இளம் தலைமுறை ‘போன தலைமுறைக்கு என்ன தெரியும்’ என்று எள்ளி நகையாடி தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்வது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். கடந்த தலைமுறைகளைவிட எண்ணற்ற விஷயங்களை நம் தலைமுறை நன்கு புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மையே. நேருவைவிட நாம் சிறப்பாக இயங்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நேருவின் பொருளாதார முடிவுகளை நாம் ஏற்க மறுக்கலாம். அவரின் அயலுறவுக்கொள்கையை நிராகரிக்கலாம். ஆனால், மதம் குறித்து நேரு கொண்டிருந்த பார்வை இன்றைக்கும் தேவைப்படுகிறது. நம் காலத்தின் அரசியல்வாதிகள், மேதைகள் மதம் குறித்துக் கொண்டிருக்கும் புரிதலைவிட, நேருவின் புரிதல் மேலான ஒன்று. நேருவின் ஆளுமையும் பாணிகளும் நமக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். நமக்கு நேருவின் மீது விமர்சனங்கள், வெறுப்புகள் ஆகியவை இருக்கவே கூடாது என்பதில்லை. அவற்றை நேருவின் சில கருத்துகள், புரிதல்கள் ஏன் இன்றைக்கும் தேவைப்படுகிறது என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.. நம்முடைய கடந்தகாலத் தலைமுறையின் சில அனுபவங்கள், புரிதல்களுக்கு நாம் அடிப்படையில் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

நமக்கு நேருவின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதன் தேவை என்ன? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன கிடைக்கும்? அது, அவர் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பதில் இல்லை. அவர் எப்படிச் செல்வ வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து நாட்டுக்காகப் பாடுபட்டார் என்பதை அறிவதிலும் இல்லை. அவர் அறிவுத்தளத்திலும், அரசியலிலும் எப்படிப்பட்ட புரிதலோடு இருந்தார் என்பதை உணர்வது நமக்குத் தேவைப்படுகிறது. தன்னுடைய புரிதலை எப்படிச் சிறப்பாக இந்தியாவில் அவர் நடைமுறைப்படுத்தினார் என்று உணர்வது இந்தியா மற்றும் இந்தியர்களின் கடமை. ஐரோப்பாவில் மதம் எப்படிப் பெருங்கேடுகளை விளைவித்தது என்கிற பாடத்தை, வரலாற்றை வாசித்து நேரு புரிந்துகொண்டார். அது, இந்தியாவுக்கும் எப்படிப் பொருந்திப்போகிறது என உணர்ந்துகொண்டார். மதத்தை அரசியலில் இருந்து பிரித்துவைக்கும் மகத்தான சாதனையை அவர் இந்தியாவில் நிகழ்த்தினார். அது, இன்றும் தொடர்கிறது. மதத்தை அரசியலைவிட்டுத் தள்ளிவைப்பது இன்றைக்கும், என்றைக்கும் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. எப்படி அறத்தோடு காலத்துக்கும் இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாகக் காந்தி திகழலாம். அவரின் மகத்தான திறமைகள் அனைத்தும் வழிமுறைகள் சார்ந்தது. எப்படி நவீன அரசின் இருப்பையும், இந்தியாவில் பெரிய வனம்போலப் பரவிக்கிடக்கும் மத நம்பிக்கைகளையும் இணைத்துக்கொண்டு பயணிப்பது என்கிற மைய கேள்விக்குக் காந்தியிடம் பதில் இல்லை. காந்தியின் அறநெறி மனித சக்திக்கு அப்பாற்பட்ட அவரின் மனோதிடத்தைச் சார்ந்தது. அந்த மனோதிடத்தைச் சாதிக்கக் காந்தியே களத்தில் இருக்க வேண்டியிருந்தது; தன்னுடைய செயல்பாடுகள் குறித்துக் காந்தியே விளக்க வேண்டியதும் இருந்தது. காந்தியைப் போலத் தன்னுடைய வாழ்க்கையை ஒரு மகத்தான அறச்சாதனையாக நேரு வாழவில்லை. நேரு பகுத்தறிவோடு யோசிக்கிற ஒரு பாரம்பர்யத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரின் அறிவார்ந்த புரிதல்கள், அரசியல் தெளிவு ஆகியவற்றுக்கு இன்றும் தேவை இருக்கிறது. அவற்றை மீட்டெடுப்பதன் மூலமே இந்தியா என்கிற கனவைக் காப்பாற்ற முடியும்.

இந்தியாவில், அரசியல் தொழிலாகிவிட்டது; தங்களுடைய சொந்தலாபங்களுக்காக அரசியலைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். சுனில் கில்னானிஇதனால் அரசியல் தொடர்ந்து தன்னுடைய தரத்தை இழந்துகொண்டேயிருக்கிறது. அரசியலை உடனடித் தேவைகளுக்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது, அரசியலை இன்னமும் மோசமாக்குகிறது; இந்திய அரசியல் அனுபவங்கள், அரசியல் தன்னைத்தானே தரம் தாழ்த்திக்கொள்ளத் தயங்குவது இல்லை என்பதை உணர்த்துகிறது. நவீன அரசியல், தொழிலாக மாறிய பின்பு… அது தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முயலப்போவது இல்லை. அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் சில லட்சியங்கள், இலக்குகளுக்காகத் தொடர்ந்து அயராது உழைப்பதாகப் பாவனை செய்கிறார்கள். அவற்றுக்கு உண்மையாக இருக்கிறோமா என்று அவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யாதவரை அரசியலின் வீழ்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இந்தியா மென்பொருள் துறையில் அசத்துகிறது. இந்தியாவின் அறிவுஜீவிகள் கலைத்துறை, இயற்கை அறிவியல் ஆகியவற்றில் சாதிக்கிறார்கள். இலக்கியம், வர்த்தகம் ஆகியவற்றிலும் பெருஞ்சாதனைகள் புரிகிறோம். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் தரந்தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தேர்தலில் எப்படி வெல்வது எனத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அறம் சார்ந்து தங்களுடைய அறிவை பயன்படுத்துவது இல்லை. அரசியல்வாதிகள் தங்களுக்கு ஓட்டுப் போடுகிறவர்களைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயத்திலும், அவர்களின் மோசமான கோரிக்கைகளை ஏற்கவேண்டிய நெருக்கடியிலும் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், ஏராளமான இந்தியக் குடிமக்கள் பகுத்தறிவோடு யோசிக்கிறார்கள். நாம் அடைய வேண்டிய இலக்கு மட்டுமல்ல, அதற்கான பாதையும் முக்கியம் என்று கருதுகிற அறிவுமிகுந்த இந்தியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள், இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது என நம்மை நம்பவைக்க முயல்கிறார்கள். அது உண்மையில்லை. இப்படி அரசியல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். நம்முடைய வரலாறு, அரசியல் வாழ்க்கையை எப்படி அறத்தோடும், பகுத்தறிவோடும், முழுமையான நம்பிக்கையோடும் வாழ முடியும் என உணர்த்துகிறது.

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

நேருவின் நம்பிக்கை பகுதி-4


நேருபகுத்தறிவை பயன்படுத்திக் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்து முடிப்பது எளிமையான காரியம். அதே சமயம், ஒருவரின் அற நம்பிக்கைகளைப் பகுத்தறிவை கொண்டு எடை போடுவது சவாலான ஒன்று. எப்படிப்பட்ட அறக்கொள்கைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு விடாமுயற்சி தேவைப்படும். இதை நேருவின் வாழ்க்கை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. காந்தி அகிம்சையைத் தன் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்ததை எடுத்துக் கொள்வோம். அகிம்சை தான் உலகத்தின் உன்னதமான கொள்கையா? நவீன காலத்தில் அரசாங்கங்களின் வன்முறையின் வடிவமாகத் திகழும் சிறைச்சாலைக்குள் நேரு அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபடி ‘இந்தச் சிறைச்சாலையில் தான் ஒரு அரசாங்கத்தின் அடிப்படை குணம் என்ன என்று எனக்குத் தெளிவாகப் புரிகிறது. அது வன்முறை, கட்டாயப்படுத்துதல், ஆள்பவர்களின் வன்முறை ஆகியவையே ஆகும்.’ என்று எழுதினார் நேரு. இப்படிப்பட்ட மன உளைச்சல் தரும் வேளையில் காந்தியின் அகிம்சையை நேரு ஆய்வு செய்தார்.

காந்தியை போல அகிம்சையில் நேரு அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அகிம்சையில் காந்தி அளவுக்குப் பற்றில்லாத தன்னைப் போன்றவர்களை அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றார் நேரு. “நான் தொடர்ந்து சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுகிறேன்… எப்போதும் பயன்படும் ஒரு தத்துவம் இருக்கக்கூடாதா? அந்தத் தத்துவம் தனிமனிதனின் அறத்தை காக்க வேண்டும். அதே சமயம் சமூகத்திற்கும் பயன்படுகிற ஒன்றாகவும் அது இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.”(சுயசரிதை, பக்கம் 538). அகிம்சை அரசியலில் வேலைக்கு ஆகுமா? ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை தொடர்ந்து வன்முறை, வன்முறையின் கருவிகளோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது. “வன்முறையே நவீன அரசுகள், சமூக அமைப்புகளை இயங்க வைக்கும் ரத்தமாக இருக்கிறது…அரசுகள் கருணையின் சாயலின்றி அடிப்படையில் வன்முறையையே நம்பியே இருக்கின்றன.”, அரசுகள் நேரடியாக வன்முறையைப் பயன்படுத்துகின்றன. அது மட்டுமில்லாமல் மறைமுகமாக, நாசூக்காக, ‘வன்முறையைக் கல்வி, பத்திரிகை ஆகியவற்றின் மூலம் மறைமுகமாக, நேரடியாகப் பரப்புரை செய்கின்றன. மதத்தைக் கொண்டும், வறுமை, பஞ்சம் ஆகியவற்றைக் காரணம் காட்டியும் வன்முறையை அரசுகள் நியாயப்படுத்துகின்றன’ என்று நேரு எழுதினார். (சுயசரிதை, பக்கம் 541). ஜெர்மானிய அமெரிக்க ஆன்மீகவாதியான ரெயின்ஹோல்ட் நீபுரின் கருத்துக்களின் தாக்கம் தெரிகிற ஒரு பத்தியில் நேரு இப்படி எழுதினார். “பகுத்தறிவின் வளர்ச்சியோ, மதப்பார்வையின் எழுச்சியோ, அற உணர்வின் பெருக்கமோ எதுவுமே வன்முறையை நாடுகிற மனப்பான்மையைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை.” என்று புலம்பினார் (சுயசரிதை பக்கம்: 542).
நேரு காந்தி

அரசே வன்முறையைப் பயன்படுத்தும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது? அரசை எதிர்க்கும் நேருவைப் போன்றவர்கள் வன்முறையை எப்படிக் கையாள்வது? நாளை இந்தியர்கள் ஆட்சிக்கு வந்தால் நாம் எப்படி அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று கவலைப்படுவதா? இல்லை கண்மூடித்தனமான நம்பிக்கையோடு வன்முறை பாதையில் எப்போதும் பயணிக்கக் கூடாது என்று உறுதியோடு காந்தியின் வழியில் பயணிப்பதா? நேருவுக்கு இப்படிப் பல்வேறு கேள்விகள் குடைந்து எடுத்தன. எப்படி அதிகாரத்தை அறத்தோடு பயன்படுத்துவது என்கிற கேள்வியோடு நேரு மல்லுகட்டி கொண்டிருந்தார். (இந்தக் கவலை நேருவுக்கு அவர் வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருந்தது.)

‘நேரு உங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் எது?’ என்று ஆண்ட்ரே மால்ராக்ஸ் கேட்டார். ‘ஒரு நியாயமான சமூகத்தை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்றார் நேரு. (இதைவிட நேரு துல்லியமாக, ‘ஒரு நியாயமான அரசை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்று சொல்லியிருக்கலாம்.) ஒரு தனிமனிதனுக்கு எது அறமாக இருக்கிறதோ, அதை அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கான கொள்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா? அது ஒரு பெருங்கூட்டத்தை வழிநடத்த முடியுமா? காந்தி முடியும் என்று நம்பினார். நீபுர் அது சாத்தியமில்லை என்று எண்ணினார். நேரு நீபுர் சொன்னதே சரி என்று பெருமளவில் ஒத்துப்போனார். தனிமனிதனின் அறத்துக்கும், ஒரு பெருங்கூட்டத்தின் அறத்துக்கும் இடைவெளிகள் உண்டு என்று நீபுர் போல நேருவும் கருதினார். ஆகவே, தனிமனித அறம் அப்படியே முழுக்க முழுக்கப் பெருங்கூட்டத்துக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது.

இதுவரை நீபுர் சொன்னதோடு ஒத்துப்போன நேரு, இதற்குப் பிறகு காந்தியின் பக்கம் சாய்கிறார். ‘ஒரு இலக்கை எப்படி அடைகிறோம் என்பதும் முக்கியம். எது நடைமுறைக்கு உகந்தது என்று பார்ப்பதோடு நில்லாமல், எது அறம் என்றும் பார்க்கவேண்டும். மோசமான, அறமற்ற வழிமுறைகள் இறுதியிலும் பெரும்பாலும் தோல்வியைத் தருகின்றன. இல்லையென்றால், அவை புதிதாகப் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றன. ஒரு மனிதன் எப்படிப்பட்ட பாதையில் பயணிக்கிறான் என்பதைக் கொண்டே அவனை உண்மையாக எடை போடவேண்டும். அதைவிட்டுவிட்டு அவன் தன்னுடைய இலக்கை அடைந்ததைக் கொண்டு மட்டும் அவனைச் சீர்தூக்கி பார்க்கக் கூடாது… பயணிக்கிற பாதையும், அடைய வேண்டிய இலக்கும் பிரித்துப் பார்க்க கூடாதவை. இரண்டுமே முக்கியம்.’ (சுயசரிதை பக்கம்: 549). காந்தி தன்னுடைய அறநெறிக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த அகிம்சையைக் கூட நேரு அப்படியே ஏற்கவில்லை. அதைப் பகுத்தறிவோடு அணுக வேண்டும் என்று நேரு கருதினார். அகிம்சையைக் கேள்வி கேட்க கூடாத கொள்கையாகவோ, மத நம்பிக்கையாகவோ நேரு பார்க்க மறுத்தார். அதைத் தொடர்ந்து அறிவுப்பூர்வமாக மீளாய்வு செய்து, அதை வெவ்வேறு எடுத்துக்காட்டுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்.

தன்னைத் தொடர்ந்து சுய விமர்சனம் செய்து கொண்டிருந்த நேருவின் விழிப்புணர்வைப் புரிந்து கொள்வது முக்கியமானது. நேரு எப்படித் தனக்கான அறப்பொறுப்புகளை முடிவு செய்யப் போராடிக்கொண்டே இருந்தார் என இதுவே உணர்த்தும். எப்படி எதிரிகளைக் கையாள்வது என்கிற கவலைதருகிற கேள்வி நேருவுக்கு எழுந்தது. அது குறித்துக் காந்தியும், நேருவும் முப்பதுகளில் உரையாடிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் தான் காந்தி தீண்டாமைக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தார். காந்திக்குப் பழமைவாதிகளான சனாதனிகள் பலர் எதிரிகளாக மாறினார்கள். காந்தியை தொடர்ந்து வசைபாடும் விஷமம் மிகுந்த பரப்புரைகளை மேற்கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் நேரு 1933-ல் காந்திக்குக் கடிதம் எழுதினார். தன்னுடைய எதிரியின் முரண்பாடான கருத்துக்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லாமல் இருப்பதை நேரு சுட்டிக்காட்டினார். அந்தக் கடிதத்தில் இன்னொரு சுவையான உண்மையை நேரு வெளிப்படுத்தினார். நேருவும் சமயங்களில் எதிர்த்தரப்பின் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவராக இருந்தார் என்பதே அந்த உண்மை. “ஒருவர் கடுமையாக அழுத்தம் கொடுக்கும் பொழுது எல்லாச் சகிப்புணர்வும் காணாமல் போய்விடுகிறது. சனாதனிகள் உங்களைக் கடுமையாக வெறுப்பதற்கு என்ன காரணம்? நீங்கள் அவர்களுக்குக் கடும் அழுத்தத்தைத் தருவதன் அடையாளமே அது.” என்று நேரு எழுதினார்.

மேலும், “நான், சாப்ரூ ஆகியோர் எங்களுடைய மதச் சகிப்புத்தன்மை எப்படி உயர்ந்தது என்று பெருமையாகப் பேசிக்கொண்டே பீடுநடை போடுவோம். ஆனால், எங்களுக்கு என்று பெரிதாக மத நம்பிக்கை என்று எதுவுமில்லை… எங்கள் மனதுக்கு நெருக்கமான ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் பேசுங்கள். அப்போது எங்களுடைய சுயரூபம் தெரியும். நாங்கள் சகிப்புத்தன்மை துளிகூட இல்லாதவர்கள் என்று புரிந்துவிடும். சில விஷயங்களில் உங்களை விடப் பொறுமை இல்லாதவர் யார் இருக்கிறார்? உண்மையில் சகிப்புத்தன்மை என்பதே அரிதிலும் அரிதாகத்தான் தென்படுகிறது. சகிப்புத்தன்மை என்கிற பெயரில் அலட்சியமே நிலவுகிறது. நாம் எதை மதிக்கவில்லையோ, அவற்றைக் கொண்டு நாம் மற்றவர்களைச் சகித்துக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறோம்.” என்று நேரு எழுதினார். இந்த மேற்கோளின் மூலம் நேரு தன்னுடைய அற லட்சியங்களைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டே இருந்தார் என்பது தெளிவாகிறது. எப்போதெல்லாம் தான் தடுமாறுவதாக நேரு உணர்ந்தாரோ அப்போதெல்லாம் அதனை நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

Image result for nehru the man who saw future

அறக்கொள்கைகள் உலகத்தில் இருந்தே தோன்ற வேண்டும். அவை உலகத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். நடைமுறைத் தேவைகளை உணர்ந்த பகுத்தறிவாகவும் அறப்பகுத்தறிவு இருக்க வேண்டும். அறப்பகுத்தறிவு வெறுமனே புரியாத கொள்கைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல. அனுபவங்கள், வரலாறு ஆகியவற்றைத் தொடர்ந்து மனதுக்குள் அசை போட்டு, எடை போடுகிற தெளிவான முயற்சி அது. “இன்றைய தேவைகள் தங்களுக்கு ஏற்றவாறு புதிய அறங்களை உருவாக்க நம்மைக் கட்டாயப்படுத்தும். நாம் இந்த ஆன்மாவின் நெருக்கடிகளில் இருந்து வெளிவர விரும்பினால், உண்மையான ஆன்மீக இலட்சியங்கள் எது என்று உணர விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? நம் கண் முன்னால் நிற்கும் பிரச்சினைகளைத் திறந்த மனதோடும், தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும். மதத்தின் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய்விடக் கூடாது.” என்று நேரு தன்னுடைய சுயசரிதையில் எழுதினார். (பக்கம் 550). இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டும் என்றால் நேருவின் வாழ்க்கையை ஒரு அறிவு சார்ந்த செயல்திட்டம் எனலாம். அந்த வாழ்வில் அவர் பகுத்தறிவின் கருவிகளை, அறப்பகுத்தறிவோடு இணைக்கவும், அவற்றுக்குள் சமரசத்தை ஏற்படுத்தவும் முயன்றார்.

நேரு தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு முற்றிலும் நேர்மாறாகக் கொள்கை முடிவுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றில் செயல்பட்ட தருணங்கள் உண்டு. ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பு உரையாடுவது, பகுத்தறிவால் அச்செயலின் பல்வேறு கோணங்களை ஆய்வு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டார். அதற்குப் பின்பே அவர் செயல்பட்டார். இதற்கு அனைவரும் நன்கறிந்த, நமக்குப் பாடமாகத் திகழும் மொழிவாரி மாநில உருவாக்கமே எடுத்துக்காட்டு. ஐம்பதுகளில் இருந்தே மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்றும், இந்திய குடியரசின் பல்வேறு மாநிலங்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் எண்ணற்ற கோரிக்கைகள் எழுந்தன. நேரு தன்னுடைய ஆரம்பக் கால அரசியல் வாழ்க்கையில் மொழிவாரி மாநிலங்களை ஆதரித்தவர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவை மொழிவாரியாகப் பிரித்தால் இந்தியாவின் மாநிலங்களுக்குள் மோதல்கள் ஏற்பட்டு, நாடு பிளவுபடும் என அஞ்சினார். ஆரம்பகட்ட அரசியலமைப்பு சட்ட உருவாக்க விவாதங்களில் அழுத்தமாக நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நேரு பதிவு செய்தார். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் போராட்டங்கள் (சமயங்களில் வன்முறை போராட்டங்கள்) வாதங்கள் ஆகியவை நேருவின் பார்வையை மாற்றின. நேரு இந்த விஷயத்தில் தொடர்ந்து காலதாமதப்படுத்துபவராக, மழுப்புவராக இருந்தார் என்று சாடப்படுகிறார். பொதுமக்களின் உணர்ச்சி மிகுந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிமடுக்காமலும், இழுத்தடிக்கவும் செய்தார் நேரு. இதனால் போராடுபவர்களைத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வைத்ததோடு, படிப்படியாகக் கோரிக்கைகளை மறு ஆய்வு செய்யவும் வழிகோலினார். இப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் அவர் இந்திய குடியரசை வலிமைப்படுத்தியதோடு, அதன் ஆயுளை நீட்டிக்கவும் செய்தார்.

தாகூர், காந்தியை போல அல்லாமல் நேரு நாட்டை ஆளும் பொறுப்பைச் சுமந்தார். ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பு அதிகாரத்தை ஓரிடத்தில் அமைப்புரீதியாகக் குவித்து வைக்கிறது. நவீனகாலங்களில் பகுத்தறிவை உன்னதமான செயல்களுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை தருகிற மிகமுக்கியமான பொறுப்பு அது. இப்படிப்பட்ட அதிகாரத்தோடு எண்ணற்ற தேர்வுகள், பொறுப்புகளும் நேருவை வந்து சேர்ந்தன. இது எப்போதும் ஒரு எதிரியை கூடவே வைத்திருப்பதைப் போன்றது. அர்னால்ட் டோய்ன்பீ குறிப்பிடுவதைப் போல, “தன்னுடைய லட்சியங்களுக்காகப் பிறரை சிறையில் அடைப்பதை விடத் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தானே சிறைச்சாலையை முத்தமிடுவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. நேரு இரு வகையான அனுபவங்களுக்கும் சொந்தக்காரர்.” அதிகாரம் கட்டற்ற கண்மூடித்தனத்தோடு இயங்குகிறது என வலியோடு நேரு உணர்ந்தார். அதிகாரத்தை நியாயமான காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற தாகம் குறையாமல் நேரு இயங்கினார். அந்த உயரிய லட்சியத்திற்காக சமூகத்தின் அறநெறிக்கான தேடலைப் பகுத்தறிவை கொண்டு மேற்கொண்டார்.

இந்த அறநெறிக்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கு மற்றவர்கள் மதநூல்களை நாடியிருப்பார்கள். நேரு அப்படிச் செய்யவில்லை. பலதரப்பட்ட, தீவிரமான மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் நவீன அரசு எப்படிப்பட்ட பண்புகளோடு இருக்கும் என்கிற நேருவின் புரிதலே இதற்குக் காரணம். அவருக்கு இருந்த அசரவைக்கும் வரலாற்று அறிவோடு, அவரின் சொந்த அனுபவங்களும் கைகொடுத்தது. ஒரு அரசாங்கம் எப்படி இயங்கும் என்பதை வெகு அருகில் இருந்து பார்த்தவர் நேரு. ஒரு சிறைக்கைதியாக எப்படி மூடநம்பிக்கை அலைக்கழிக்கும் என்றும் நேருவுக்குத் தெரியும். அரசியல் அதிகாரம் எப்படித் தான் விரும்பியபடியெல்லாம் இயங்கும் என்றும் நேருவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆட்சியாளன் எப்படிப்பட்ட அதிகாரத்தைத் தன்னுடைய குடிகள் மீது செலுத்த முடியும் என்பதை நேரு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்ததால் நன்கு அறிந்திருந்தார்.

இந்தியா மேலும் மேலும் ஜனநாயகமயமாகி வருகிறது. அரசியல் செயல்பாடுகள் பலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றன. ஆகவே, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசு ஆகியவை மத நம்பிக்கையை இன்னமும் நெருக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற வாதங்கள் பல தளங்களில், வெவ்வேறு வடிவங்களில் கேட்கின்றன. ஐரோப்பியாவில் வரலாற்று அனுபவங்களில் இருந்து இரண்டு அடிப்படையான அரசியல் பாடங்களை நாம் படிக்க வேண்டியிருக்கிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அரசின் பண்பை வரையறுக்க முயல்வதில் ஒரு பேராபத்து இருக்கிறது. அரசுக்கு ஒரு மத அடையாளத்தை அது தந்துவிடுகிறது. இரண்டாவதாக, சில அவசர காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் பொது மக்கள் தங்களுடைய அதிகாரங்களைச் சில அரசியல்வாதிகளின் கையில் ஒப்படைக்க முடியாது. அதைப் போலவே மதத்தை நம்பியும் குடிமக்கள் தங்களுடைய அதிகாரங்களை ஒப்படைப்பது ஆபத்தான ஒன்று. தொடர்ந்து வெவ்வேறு ஜனநாயக அமைப்புகளின் மூலம் அரசியல் அதிகாரம் என்பது பொறுப்பு மிக்கதாக, நியாயமான முறையில் செயல்படுவதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அரசுகளை மத நம்பிக்கை கொண்டதாக மாற்றுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. இந்த இரண்டு பாடங்களுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கிறது. ஜனநாயகம், மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாத அரசு ஆகியவை உலகம் முழுக்கப் பெரும்புயலில் சிக்கிக் கொண்ட படகுகள் போல அல்லாடுகின்றன.

ஐரோப்பாவின் அரசியல் அனுபவத்தில் இருந்து பாடம் படித்த மிகச் சில இந்திய அறிவுஜீவிகளில் நேரு ஒருவர். அவர் இந்த இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டார்: ஒரு நவீன அரசுக்கு அரசியல் ஏற்பை தருகிற ஒரே அளவுகோல் ஜனநாயகம் மட்டுமே. ஒரு நவீன அரசை மதத்தோடு தொடர்புபடுத்தினால் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். நேரு ஐரோப்பிய, இந்திய வரலாறுகளை வாசித்து உணர்ந்தவர் என்பதால் அவரால் ஒரு ஒற்றுமையைக் காண முடிந்தது. இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய அரசுகள் எப்படி அதிகாரத்தையும், மதத்தையும் கையாண்டன என அவர் ஆராய்ந்து பார்த்தார். இந்த அரசுகள் எல்லாம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை முடிந்தவரை அரசியல் அதிகாரத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்தன. சமயங்களில் மதம் அரசியலில் தலையிட்டாலும், அதை அரசுகள் மட்டுப்படுத்தவே முயன்றன என நேரு உணர்ந்து கொண்டார்.

Related image

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

நேருவின் நம்பிக்கை – பகுதி 2


நேரு

நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி

இந்தியாவின் சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள் முதலானோர் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே ஓர் அடிப்படையான சவாலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. நவீன காலங்களில் இந்தியர்களை இணைப்பது எப்படி? அவர்கள் அனைவருக்கும் ஏற்புடைய, ஒப்பான அறங்கள், கடமைகள் ஆகியவற்றை எப்படிக் கண்டடைவது… அதன்மூலம் இந்தியர்களுக்கான பொதுவாழ்க்கையை எப்படி வரையறுப்பது ஆகியவையே அவர்கள் முன்னால் சவால்களாக எழுந்து நின்றன.

இந்தச் சவால்கள் நம்முடைய அறிவியக்க, அரசியல் வரலாற்றின் ஆழமான, பரந்துவிரிந்த தேடல்களாக இருந்தன. எனினும், இந்தியர்களை ஒரு பொதுவான அடையாளத்துக்குள் ஒன்றுசேர்க்கும் தேசியத்தின் கதைக்குள் இந்தச் சவால்மிகுந்த முயற்சிகள் அடங்கிவிட்டன. ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தேசியத்தின் தேடல், முற்றுப்புள்ளியை நெருங்கியதும், வேறுசில கேள்விகள் நம்மைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தன. அரசியல் வாழ்க்கை எனப்படும் பொதுவாழ்க்கையை எப்படி உருவாக்குவது, எப்படி அறம் சார்ந்த அரசியல் வாழ்க்கையைத் தோற்றுவிப்பது, எப்படி அதை நிலைநிறுத்துவது என்கிற அடிப்படையான, இயல்பான கேள்விகள் எழும்பின. இந்தக் கேள்விகளின் வரலாற்றை நாம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது.

நாம் தாகூர், காந்தி, நேரு ஆகியோரின் சுயவிமர்சனங்களில், அவர்கள் தங்களுக்குள் மேற்கொண்ட பெரும் விவாதங்களில், ஒரு நவீன அறநெறிக்கான தேடலைக் காண முடிகிறது. (இந்தப் பட்டியலில் எண்ணற்ற தலைவர்களின் கருத்துகளைச் சேர்த்துப் பேச முடியும். நான் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள் என்பதால், அவர்களின் கருத்துகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன்.) ஓர் அரசாங்கத்தின் குடிமக்களாகப் பொதுவாழ்க்கைக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் இந்தியர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்ட, தள்ளப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் இந்தத் தேடல்களை மேற்கொண்டார்கள்; இந்த அரசியலோடு தொடர்புடைய பொதுவாழ்க்கைக்கான கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்டறிய முயன்றார்கள்; பொதுவாழ்வில் பகுத்தறிவுக்கான ஒரு மரபை அவர்கள் உருவாக்கினார்கள்; இந்த மரபில் அறநெறிகள், ஒழுக்கங்களுக்கான ஓர் அறிவுவெளியை உருவாக்கினார்கள். இப்படிப்பட்ட அறங்கள், ஒழுக்கங்களால் உண்டாகும் அரசியல் தேர்வுகள்குறித்து விவாதித்தார்கள்; மறு ஆய்வு செய்தார்கள்; முடிவெடுத்தார்கள். இந்த விவாதங்களின் மிகச்சிறந்த தருணங்களில் இதன் தேசியம், தேசியவாத சிந்தனையின் குறுகிய எல்லைகளைக் கடந்தன. இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த விவாதங்களை ஏன் நினைவுகூர வேண்டும்? அவர்களின் அறிவார்ந்த லட்சியங்கள், குறுகிய மனப்பான்மையோடு மட்டும் இந்திய தேசியத்தையோ, அதன் அடையாளத்தையோ அணுகவில்லை என்பதைப் புலப்படுத்துவது அவசியமாகிறது. அவர்கள் பெருங்கேள்விகளை எழுப்பினார்கள்; அந்தக் கேள்விகளுக்கு லட்சியவாதம் மிக்க பதில்களை எதிர்பார்த்தார்கள்.

அறநெறி சார்ந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டபோது, அவர்கள் ‘ஓர் இந்தியன் என்ன செய்ய வேண்டும்’ என்றோ, ‘ஓர் இந்துவோ, முஸ்லிமோ என்ன செய்ய வேண்டும்’ என்றோ கேள்விகள் எழுப்பவில்லை. ஓர் அறநெறிமிக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்… அறத் திறன்மிக்க ஒரு மனிதன், எதைச் செய்வது சரியாக இருக்கும் முதலிய கேள்விகளை அடுக்கினார்கள். இப்படிப்பட்ட உலகப் பார்வையைக் கொண்டிருந்தாலும், தாங்களும், தங்கள் சகாக்களும் காலனிய ஆட்சியால் அடிமைப்பட்டிருக்கிறோம் என்கிற சூழலையும், பழைமைவாதம் மக்களைப் பிடித்திருக்கிறது என்கிற நெருக்கடியான நிலைமையையும் உணர்ந்திருந்தார்கள். இதனால், அவர்களின் மகத்தான கனவுகளைச் செயல்படுத்துவது எளிமையான ஒன்றாக இருக்கவில்லை. இப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் இருந்தாலும், அவர்கள் விசாலமான கண்ணோட்டங்களை நோக்கிய தேடலை நிறுத்திவிடவில்லை. தற்கால அரசியல், அறம் சார்ந்த சிந்தனைகளில் மகத்தான பெருங்கனவுகளும், உடனடித் தேவைகளும் பிரித்தே கையாளப்படுகின்றன. இவர்களோ, உலகத்துக்கான லட்சியங்களை, தாங்கள் வாழும் தனித்துவமான சூழல்களோடு இணைத்துக்கொண்டு எப்படி இயங்குவது எனத் தொடர்ந்து போராடினார்கள்.

தாகூர், காந்தி, நேரு வெவ்வேறு வகையான, வேறுபட்ட கருத்துகளைக்கொண்டிருந்தார்கள் என்பதையோ, அவர்கள் அடிக்கடி முரண்பட்டார்கள் என்பதையோ மறுக்கவில்லை. அதே சமயம், இந்திய வரலாற்றில் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் நவீன அறநெறிகளை அவர்கள் ஒருங்கே அறிமுகப்படுத்த முயன்றார்கள். ஓர் அறம் சார்ந்த, முழுமையான வாழ்க்கையை நவீன காலத்தில் நேருஎப்படி வாழ்வது… அறநெறிக்கும், தனிநபர் அடையாளத்துக்கும் என்ன தொடர்பு… அறநெறிசார்ந்த எப்படிப்பட்ட பொதுவிதிகளை ஏற்பது… பொதுமக்களின் செயல்பாட்டுக்கான அற வடிவங்களை உருவாக்க எதை நாடுவது… அந்த அற வடிவங்களை எங்கே தேடுவது… நவீன அரசியலின் அமைப்பான அரசு, எப்படி அறநெறிப் பாதையிலிருந்து விலகாமல் அறக் கனவுகளை எட்டுவது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். அந்தத் தேடல்களை நோக்கித் தங்களுடைய அறிவாற்றலைச் செலவிட்டார்கள். இப்படிப்பட்ட பொதுவான சவால்கள், இக்கட்டுகள் நோக்கித் தங்களுடைய பார்வையைச் செலுத்தினார்கள்.

காந்தி, தாகூர், நேரு ஆகிய மூவரும், இந்தியாவில் அரசியல் எப்படி மேலும்மேலும் முக்கியத்துவம் பெறப்போகிறது என்பதையும், பொதுவாழ்க்கையில் வலிமையான ஊடகமாக அது எப்படி மாறப்போகிறது என்பதையும் உணர்ந்தார்கள். அரசியலில் தொடர்ந்து தலையிடுவதையும் செயல்படுவதையும் இவர்கள் மூவரும் மேற்கொண்டார்கள். எனினும் அரசியல், மக்களின் வாழ்க்கையில் நீக்கமற கலக்கும்போது, பொதுவாழ்வு ஊழல்மயமாகும் என்பதை அறிந்திருந்தார்கள். அரசியல் வெறும் சொத்துக் குவிக்கிற கேவலமான தேடலாக மாறக்கூடும் என்பதையும், அது பேரழிவைத்தரும் விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் உணர்ந்தே இருந்தார்கள். மதம் பொதுவாழ்வைவிட்டு விலகிக்கொண்டிருந்த மேற்கிலும், பல்வேறு வகையான மத நம்பிக்கைகள்மிக்க இந்தியாவிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ, நம்பிக்கை முறையோ அனைவரும் ஏற்கும்படியாக இருக்காது என்கிற புரிதல் அவர்களுக்கிருந்தது. பல்வேறு நம்பிக்கைகள்கொண்ட எல்லாரும் ஒரே அறநெறியைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பதையும் இவர்கள் உணர்ந்திருந்தார்கள். மதத்தின் தாக்கம் குறைவதாலோ, பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றுவதாலோ, ஒரு பொதுவான, அனைவரும் ஏற்கும் மத நம்பிக்கை சாத்தியமில்லை. மதம், தன்னுடைய மரபான சிந்தனைகளோடு அனைவருக்கும் உகந்ததாகத் தன்னை அறிவித்துக்கொள்ள முடியாது. அறம் சார்ந்த நம்பிக்கைகள் சார்புத்தன்மை கொண்டதாக இருந்தது. இதனால், தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, புதுமைமிக்க அறவழக்கங்கள், பொறுப்புகளைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. இதை நியாயமாகவும், அனைவருடனும் உரையாடுவதன் மூலமே சாதிக்க முடியும். இப்படி உரையாடுவதன்மூலம் அனைவரும் ஏற்கக்கூடியவை எவை… பலதரப்பும் பொருந்திப்போகும் அற அர்ப்பணிப்புகள்  எவை… இவற்றை எப்படி மேலும் விரிவுபடுத்துவது ஆகியவைகுறித்த தெளிவு, இப்படிப்பட்ட விவாதங்களால் மட்டுமே சாத்தியம்.

இதுவரை நான், தாகூர், காந்தி, நேரு ஆகியோருக்கு இடையே ஒற்றுமைகள் இருப்பதாகக் கருதிக்கொண்டு பேசினேன். இதன்மூலம் அவர்கள் அனைவரையும் ஒரே பொதுப் பகுத்தறிவு மரபின் அங்கமாகக் காட்டினேன். இப்போது அவர்கள், எப்படித் தங்களுக்குள் முரண்பட்டார்கள் என விளக்கப்போகிறேன். இதன்மூலம், நேருவின் நம்பிக்கை எப்படித் தனித்துவமானது என்கிற புரிதல் ஏற்படலாம்.

தாகூர், காந்தி மற்ற இந்தியர்களிடமிருந்து ஒரு முக்கியமான புள்ளியில் மாறுபடுகிறார்கள்; மதத்தை, அதன் மரபான பார்வையில் அப்படியே ஏற்றுக்கொண்டால், அது அனைவரும் ஏற்கக்கூடிய நம்பிக்கைக்கோ, அறநெறிக்கோ அடிப்படையாக அமையமுடியாது என உணர்ந்திருந்தார்கள். இதனால், காந்தி மீண்டும் மீண்டும் மத மரபுகளைப் பெருமளவில் போராடித் தகர்த்தார். அவற்றைத் தன்னுடைய தொடர் முயற்சிகளால் மறுகட்டமைப்புச் செய்தார். இதனால் ஏற்பட்ட அற உணர்வை மரபான இந்து மதத்தின் பார்வையில் புரிந்துகொள்ள முடியாது. தன்னுடைய தேடலை இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மதத்தின் நாட்டார் வடிவங்கள் நோக்கிச் செலுத்தியதன்மூலம், அவைகுறித்து திறந்தமனதோடு அணுகியதன்மூலம் தன்னுடைய தனித்துவமான அறநெறிப் பாதையைக் காந்தி உருவாக்கினார். அவரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கைகளைப் பெருமளவில் மரியாதையோடு அணுகி, இவற்றையும் தாண்டிப் பயணித்தது. தாகூர், பக்தி மிகுந்த பழைமைவாதியின் மதமாகவும் அல்லாமல், ஓர் ஆன்மிகவாதியின் மதமாகவும் அல்லாமல் ‘கவிஞனின் மதம்’ ஒன்றைத் தோற்றுவித்தார். இது, மத மரபுகளின் உள்ளேயும், வெளியேயும் பயணித்துத் தனித்துவமான ஆன்மிக நம்பிக்கையை உருவாக்க முயன்றது. இந்த மதத்தை, ‘மனிதனின் மதம்’ எனத் தாகூர் அழைத்தார். இது, மனிதாபிமானத்தை நம்புவதாக, மனிதனின் ஆற்றல்களின் மீது நம்பிக்கைவைப்பதாக இருந்தது. அதேபோல அனைத்தையும் கடந்த கலையின், அழகியலின் ஆற்றலை நம்புவதாக இருந்தது.

பகுத்தறிவின் ஆற்றல் என்ன, அதை எந்த அளவுக்கு மதிப்பது, அதன் தேவை என்னவென்பது குறித்து காந்தியும், தாகூரும் மோதிக்கொண்டார்கள். இந்த மோதல், பீகார் நிலநடுக்கத்தில் (1934) தெளிவாக வெளிப்படுகிறது. காந்தி, ‘பீகார் நிலநடுக்கத்தைத் தீண்டாமை என்கிற பாவத்தைத் தொடர்ந்து பின்பற்றியதற்காக, மக்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை’ என நாட்டு மக்களிடம் விளக்கம்கொடுத்தார். ‘இதைப் பெருந்தவறு’ எனத் தாகூர் கருதினார். இறைவன் நல்லவர், சமூகம் தீய செயல்களில் ஈடுபடும்போது ,அவர் தண்டிப்பவர், என நம்பிக்கொண்டு காலம்காலமாக நடக்கும் இந்த விவாதத்தின்போது தாகூர் இப்படி எழுதினார்: ‘தங்களைப் போன்ற சக மனிதர்களிடம் இருந்து வெகுதூரம் தள்ளி நிற்பவர்களை இன்னமும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இந்த நிலநடுக்கத்தில், அப்பாவி குழந்தைகளும், தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த மக்களும் மடிந்திருக்கிறார்கள். ஒரு நாகரிகம் மிகுந்த மனிதன் இப்படிக் கண்மூடித்தனமாக விளக்கங்கள் தரமாட்டான்.’ மதத்தின் பெயரில், இறைவன் என்கிற சக்தி மக்களைக் கொல்லும் பயங்கரவாதத்தை மேற்கொள்ளலாம் என்கிற அங்கீகாரத்தைக் காந்தியின் பார்வை தருவதைத் தாகூர் கண்டார். இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகளை விளக்க பகுத்தறிவும், அறிவியலுமே பிரதானம் எனத் தாகூர் கருதினார். காந்தியைவிட,  தாகூர் பகுத்தறிவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார். அதேசமயம் காந்தி, மரபுகளை… பகுத்தறிவை கூர்மையான ஆய்வுக்கும், விமர்சனத்துக்கும் தொடர்ந்து உட்படுத்தினார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

பகுத்தறிவை மதிப்போடு அணுகியவகையில் தாகூர், காந்தியைவிட நேருவுக்கே நெருங்கியவராகத் தோன்றுகிறார். தாகூர் இறந்து சிலகாலம் கழித்து அகமது நகர் சிறையில் இருந்து கிருஷ்ண கிருபாளினிக்கு நேரு எழுதிய கடிதத்தில், ‘காந்தி, தாகூரைப்போல வேறு யாரும் முரண்பட முடியாது’ என எழுதினார். அதேசமயம், அவர்கள் இருவரும் ‘ஒரே ஊற்றின் ஞானம், சிந்தனை, கலாசாரம் ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்றார்கள்’ என்றும் நேரு பதிவுசெய்தார். தனிப்பட்ட அளவில் தாகூரைவிட காந்தியிடமே நேரு கூடுதல் பிணைப்பு, நெருக்கம்கொண்டிருந்தார். நேருவுக்குக் காந்தி தந்தையைவிட மேலானவர். ஒருவகையில், காந்தி நேருவின் வாடகைத் தாய் போன்றவர். ஆனால், அறிவுரீதியாக இந்த நெருக்கம் தலைகீழானது. ‘ஆன்மிகரீதியாக நான் குருதேவுடன் (தாகூருடன்) நெருக்கமாக உணர்கிறேன்’ என்றார் நேரு. தாகூர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நேரு, ‘அவரின் வாழ்க்கை மீதான காதலை, எல்லாவற்றிலும் அழகைக் கண்டுணர்வதைக் காதலித்தேன். நான் அவரை வழிபடுபவன்’ என எழுதினார்.

நேரு

அறிவியலின்​, அறிவியல் சார்ந்த தேடல்களின் எல்லைகளைத் தாகூர் கூர்மையாக உணர்ந்திருந்தார். அறிவியல் எண்களிலும், புள்ளிவிபரங்களிலும் கேள்விகளை அணுகுவதையும், அதன் தர்க்கம் நிகழலாம், நிகழாமலும் போகலாம் என்று நிகழ்தகவாக (probabilistic) இருப்பதையும் அவர் கண்டார். அறம்சார்ந்த கேள்விகள் இப்படி, அப்படி என்று தள்ளாடுகிற பதில்களை ஏற்காது, அவை துல்லியமாக இருக்க வேண்டும் என்று தாகூர் உணர்ந்திருந்தார். நேருவைப் பொறுத்தவரை, அறம்சார்ந்த வாழ்க்கை தொடர் பயணம். பகுத்தறிவின் துணையோடு அதனைத் தொடர்ந்து சோதனைக்கும், மறு ஆய்வுக்கும் உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மைமிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவர், தீன்மூர்த்தி பவனில் 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை‘ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நேருவின் நினைவு தினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

இந்தி முதல் இன்றுவரை – வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது !


வரலாறு என்றாலே வருடங்களும், கடுப்பேற்றும் பெயர்களும் என்று நம் மனதில் பதிந்து போயிருக்கிறது இல்லையா? வரலாறு என்பது விறுவிறுப்பான ஒன்று என நம்ப முடிகிறதா? எதுக்காக வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்கணும் என்று கடுப்பாக கேட்டிருக்கிறீர்களா? ஒரு மூன்று மணி நேரத்தை மட்டும் கடன் கொடுங்கள். அப்புறம் பாருங்கள்:


Bored of textbook history? Ever wondered why history is important? Why history cannot be left unexplored? Fascinating, riveting journey guaranteed. Do lend your ears.

வரலாறு குறித்த மிக எளிய, வசீகரிக்கும் உரை இது என என்னால் சொல்ல முடியும். ஏன் இந்தித்திணிப்பை தமிழகம் எதிர்க்கிறது? அடையாள அரசியல் வரலாற்றில் எப்படி இருக்கிறது? வன்முறையும், அடையாளமும் குறித்து எப்படிப் புரிந்து கொள்வது? கடந்த கால வரலாற்றைக் கொண்டு நிகழ்காலத்தைத் தீர்மானிப்பது ஏன் ஆபத்தானது? ஔரங்கசீப் எப்படிப்பட்டவர்? மொகலாயர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்களா? வரலாறைப் புரிந்து கொள்ள சில நூல்கள் போதுமா? இந்தி முதல் இன்றுவரை ஒரு பிரமிக்க வைக்கும் பயணம். வாருங்கள். 🙂
Image result for வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோம்
Why TN opposes Hindi imposition? What is the Link between identity and violence? What are the problems in dealing with today’s problems by taking inspiration from past? How to view legacy of Aurangzeb, Mughals? From medieval to modern times a magisterial journey. Lets hear 🙂

ராமர் பாலம் என்பது ராமர் கட்டியதா? இதிகாசங்களை வரலாறாகக் கருதலாமா? ஹிட்லர் கொண்டாடப்பட வேண்டியவரா? போஸ் மகத்தான தலைவரா? காந்தி போஸுக்கு துரோகம் செய்தாரா? ஏன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது? வரலாற்றின் வழியாக விடை தேடுவோம்.

Did Rama built Ram Sethu bridge? Can epics be treated as history? Why some people celebrate Hitler? Would we have been better had Bose succeeded? Did Gandhi betray Bose? Why Israel reigns supreme in middle east? Lets explore through the lens of history.

 
மதச்சார்பின்மைக்கும் மன்னர்களுக்கும் என்ன தொடர்பு? நேரு, அம்பேத்கர், பெரியார் சந்திக்கும் நெகிழவைக்கும் வரலாற்றுத் தருணம் எது? சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்ன? பெண்ணியமும் பெரியாரும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஏன் காந்தி இன்றைக்கும் தேவை? ஏன் ராணுவ ஆட்சி ஆபத்தானது? வாஜ்பாயி நேரு குறித்து என்ன நினைத்தார்? விறுவிறுவென ஒரு பயணத்திற்குக் காதுகொடுங்கள்.

Are our kings truly secular? There was a moment when Nehru, Ambedkar and Periyar met in making history. What was that momentous occasion? What are Ambedkar’s views on caste? Why is Gandhi’s non-violence still needed? Why military rule won’t suit India? What is the link between Periyar and Feminism? Vajpayee had something interesting to say about Nehru. What is that? A riveting, surprising travel through the pages of Indian history. Do hear.

 
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வைக்கொண்டு பொதுவாழ்வை அணுகலாமா? வ உ சியின் சாதனைக்கடலின் ஒரு துளியை உணர்வோமா? எம்ஜிஆர் எப்படி ஆட்சி புரிந்தார்? அது என்ன ‘Idea of India’? வரிசைகட்டும் வினாக்கள், அசரவைக்கும் பதில்கள். செவிமடுங்கள்.
 
 
 
 
அவசியம் வாசிக்க வேண்டிய சில வரலாற்று நூல்கள் என்ன? அமர்த்தியா சென் சொல்லும் ‘Country of First Boys’ யார்? இன்னும் இன்னும்… பள்ளிக்காலத்திற்குப் பிந்தைய புத்தக வாசிப்புப் பயணம் குறித்த ஒரு ஐந்து நிமிட சிற்றுரையும் உண்டு.