பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்


மறைமலையடிகள் எனும் தனித்தமிழ் இயக்கத்தந்தை பிறந்த தினம் இன்று. தமிழ் மொழியில் வடமொழி கலந்து எழுதுவது அன்றைய காலத்தில் மிக இயல்பான ஒன்றாக இருந்து வந்தது. அதையே பெருமையாகவும் பண்டிதர்களும் கருதினர். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள காடம்பாடியில் பிறந்த இவருக்கு திருக்கழுக்குன்ற இறைவனை நினைவுப்படுத்தும் வகையில் வேதாசலம் என்று பெயர் சூட்டப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் நூலுக்கு நயவுரை எழுதி இவர் அனுப்பியது சுந்தரம் பிள்ளையை வெகுவாக கவர்ந்தது. அதனால் இவருக்கு கேரளாவில் தமிழ் ஆசிரியர் பணி கிடைக்குமாறு செய்தார் சுந்தரம் பிள்ளை. அப்பணியை வெகு விரைவில் துறந்து வெளியேறிய வேதாசலம் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பரிதிமாற் கலைஞருடன் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றினார்.

”பெற்ற தாய்தனை மக மறந்தாலும் ” என்று துவங்கும் வள்ளலாரின் அருட்பா பாடலை நெக்குருக பாடிவிட்டு மகள் நீலாம்பிகையை நோக்கி ”இதில் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் ” என்று அடிகளார் பாடியுள்ளார். இதையே யாக்கை எனும் நற்றமிழ் சொல்லால் குறித்திருந்தால் இன்னமும் இனிமையாக இருந்திருக்கும்.” என்று புலம்பினார். அன்று முதல் எல்லாவற்றையும் தனித்தமிழில் பயன்படுத்துவது என்று இருவரும் முடிவு செய்தார்கள். வேதாசலம் மறைமலையடிகள் ஆனார். ‘ச‌ம‌ர‌ச‌ ச‌ன்மார்க்க‌ம்’ என்னும் த‌ம் இல்ல‌த்தின் பெயரை ‘பொதுநிலைக் க‌ழ‌க‌ம்’ என்றும், தாம் ந‌ட‌த்திவ‌ந்த‌ ‘ஞான‌சாக‌ர‌ம்’ திங்க‌ளித‌ழை ‘அறிவுக்க‌ட‌ல்’ என்றும் மாற்றினார்.

Image may contain: 1 person, sitting and text

ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலியவை மறைமலையடிகள் கொண்டுவந்ததே. வேள்வி நிகழ்த்தல், ஆரியவழிபாடு முதலியவற்றையும் எதிர்த்தார். ஆரியர் எப்படி தமிழ்நாட்டை சீரழித்தனர் என்று ஆதாரங்களை அடுக்கினார் அடிகளார்.

அதோடு நில்லாமல் சைவ சித்தாந்த பதிப்பகம் உருவாவதற்கும் முக்கிய காரணமானார் . அவரின் வாசிப்பு எல்லையில்லாதது. அவர் மாதத்துக்கு ஐம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கி வாசிக்கிற குணம் கொண்டவராக இருந்தார். அவரின் நான்காயிரம் நூல்கள் தான் மறைமலையடிகள் நூலகத்துக்கான அச்சாரம். பேச்சில்,எழுத்தில் எங்கும் தனித்தமிழை இவர் கொண்டு வந்த காலத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் ஏற்பட்டு இருந்தது. ஆரியரின் வடமொழியை நிராகரிப்போம் என்று இவரின் வழிநின்று எண்ணற்ற இளைஞர்கள் தனித்தமிழில் செயலாற்ற ஆரம்பித்தனர்.

அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரவி வைத்தீஸ்,’மறைமலையடிகள் வடமொழி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, வேதாந்த எதிர்ப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு இயங்கியவர்’ எனப்பதிவு செய்கிறார். வடமொழியில் ஆழ்ந்த புலமைமிக்க அடிகள் சாகுந்தலத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அபாரமான ஆங்கில மொழியாளுமை கொண்ட அவர் தம் நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதினார். முனைவர் இலக்குவனார் ‘மறைமலையடிகள் கவிதை, நாவல், அறிவியல், யோகா, மொழி ஆய்வு, வரலாற்று ஆய்வு, ஒப்பிலக்கயம் என அடிகளின் பங்களிப்பு பரந்துபட்டது.’ எனக் குறிப்பிடுகிறார்.

ஐம்பத்தி எட்டு வயதில் ராஜாஜி அரசு சென்னை மாகாணத்தில் ஹிந்தி திணிப்பை செயல்படுத்த முயன்ற பொழுது சிறை புகுந்தார் அடிகள். ‘பொதுமொழி என்பது மக்களால் பேசப்படுகிறது. வாழும் மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி பண்டைய மொழியாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக நெடுங்காலம் பேசப்பட்டு, இப்போதும் பேசும்மொழியாக இருக்கவேண்டும். அந்த மொழி உயரிய இலக்கிய வளம் நிரம்பியதாக இருக்கவேண்டும். அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் அரசியல் கொள்கைகள், சிந்தனை சார்ந்த சமயக் கொள்கைகள், சமூக நெறிகள் போன்ற
மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை. வட இந்தியாவில் இந்தி பேசப்படுவதிலேயே பலவித வேறுபாடுகள் உள்ளபோது தமிழர்களை இந்தியைக் கற்றுக் கொள் என்று வற்புறுத்துவது சக்தியையும் முழு நேரத்தையும் வீணாக்குவதாகும்’ என்று உறுதியாக பதிவு செய்தார் அடிகள்

மறைமலையடிகள் இல்லாமல் போயிருந்தால் இன்றைய தமிழ் உரைநடை தனித்தமிழாக இருந்திருக்காது. தவறிப்போன தமிழாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரைப்பற்றி தமிழ்த்தென்றல் திரு.வி.க. குறித்த வரிகளோடு இந்த கட்டுரையை முடிக்கலாம் ,” தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்”.

புகைப்பட நன்றி: விர்ஜினியா பல்கலைக்கழகம்