பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU

என் தந்தை பாலையா


இந்தியக் கிராமங்கள் குடியரசுக்கு முழுக்க எதிரானவை. இவை ஆதிக்க ஜாதியினரால் ஆதிக்க ஜாதியினருக்கு நடத்தப்படும் குடியரசு. இங்கே தீண்டப்படாத மக்களுக்கு இடமில்லை. அங்கே தீண்டப்படாதோரால் காத்திருக்கவும், சேவகம் செய்யவும், அடங்கிப் போகவும் மட்டுமே முடியும். இங்கே ஜனநாயகத்துக்கு இடமில்லை. சமத்துவத்துக்கு, விடுதலைக்கு, சகோதரத்துவத்துக்கு இடமே இல்லை.’-அண்ணல் அம்பேத்கர்

‘My Father Baliah’ எனும் நூலை வாசித்து முடித்தேன்.. ‘ஒரு ஊரில் ஒரு தலித் இருந்தார்’ என்று ஒரு கதை துவங்கினால் எப்படி இருக்கும்? ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியை மூன்று தலைமுறை கதைகளின் ஊடாக சொல்லிச்செல்கிறார் Y.B.சத்தியநாராயணா. தொடர்வண்டிகள் என்பது ஆங்கிலேயரின் காலனியத்தை, பஞ்சத்தை, வறுமையை பரப்பியது என்பது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசின் கருத்தாக இருந்தது. எனினும், அது தலித்துகளின் வாழ்க்கையில் விடுதலையை, வளர்ச்சியை தருவதாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பை கோரிய ரயில்வே துறை பணிகளை செய்ய ஆதிக்க சாதியினர் தயாராக இல்லாத நிலையில் தலித்துகள் அவற்றை வேலை வாய்ப்புக்கான வழியாகவும், கிராமத்தின் கொடுமையான ஜாதி அமைப்பை விட்டு வெளியேறும் வாய்ப்பாகவும் பார்த்தார்கள். அப்படி வெளியேறிய நரசய்யா குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் கல்வியால் முன்னேறிய கதை தான் இந்த நூலில் விரிகிறது.
நூலில் முதல் காட்சியே அதிர வைக்கிறது. கூட யாரும் துணைக்கு இல்லாமல் தெலங்கானாவின் வங்கபள்ளி கிராமத்தில் தன்னுடைய மனைவியின் பிணத்தை சுமந்தபடி நரசய்யா தன்னுடைய மகனோடு கண்ணீர் வழிய நடக்கிறார். மதிகா எனப்படும் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் பிணத்தை தீண்டக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். ஊரில் வீடுகளும் மனுவின் மனு சாஸ்திரம் படியே இருந்தன. மேற்கிலிருந்து கிழக்காக காற்று வீசும் என்பதால் மதிகாக்களின் வீடுகளில் வீசும் காற்று தங்கள் வீட்டை நெருங்கக்கூடாது என்று பிராமணர்களின் வீடுகள் மேற்கு திசையில் கட்டப்பட்டிருக்கும்.

வெலமா எனப்படும் இடைநிலை சாதியை சேர்ந்த நிலச்சுவான்தார்கள் மதிகா பெண்களை தோன்றும் போதெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிஜாமுக்கு வரி வசூலிக்கும் பொறுப்பில் இருந்த இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட மக்களை கசக்கிப் பிழிவதோடு தீண்டாமையை விடாமல் கடைபிடித்தார்கள்.

Image may contain: text
தன்னுடைய மனைவியின் மரணத்துக்குப் பிறகு நரசய்யா ரயில்வேவில் பாய்ண்ட்ஸ்மேன் பணியில் சேர்ந்தார். ரயில் தண்டவாளங்களில் நூறு கிலோவுக்கு மேலே இருக்கும் சங்கிலிகளை வேகமாக தூக்கிக் கொண்டு ஓடி ரயில் பெட்டிகளை இணைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். சில காலம் உழைப்புக்குப் பிறகு, செகந்திரபாத்துக்கு நரசையாவின் குடும்பம் மாறியது அவரின் மகன் பாலையாவுக்கு கல்வியைத் தந்தது.
பாலையாவும் ரயில்வேவில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தினார். இரவு பத்து மணிக்கு தூங்க வைத்து, அதிகாலை நான்கு மணிக்கு எழுப்பிவிட்டு அவர்களை படிக்க வைத்தார். தான் பள்ளிக்கல்வியைத் தாண்டாவிட்டாலும் மகன்கள் கல்லூரி செல்ல வேண்டும் என்று ஊக்குவித்தார். ரயில்வேவில் கால் கடுக்க, தோள் ஓய வேலை பார்த்த பின்பு வயல்வெளிகளில் வேலை பார்த்து பிள்ளைகளை படிக்க வைத்தார்.

ஒரே குடும்பத்தில் இருந்து எழுபதுகளில் மூன்று பேராசிரியர்கள் எழுந்தார்கள். முனைவர் பட்டம் பெற்று பல உயர்ந்த மாணவர்களை உருவாக்கினார்கள். மதிகா குடும்பத்தின் முதல் ஜாதி மறுப்புத் திருமணம் பாலையாவின் திறந்த மனதால் நடைபெற்றது.

தலித் என்கிற அடையாளத்தை மறைக்க வேண்டிய தருணங்கள் வலி தருபவை. கல்லூரி அறிவிப்புப் பலகையில் உதவித் தொகை பெறும் பெயர் இடம் பெற்றால் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என ஓடோடிப் போய் க்ளார்க்கிடம் கெஞ்சுவது. ஆசிரியராக பாலையாவின் மகன் வேலை பார்க்க போன ஊரில் மதிகா என சொன்னால் வீடு கிடைக்காது என்பதால் ஜாதியை மாற்றிச் சொல்வது. பெயரின் பின்னால் இருக்கும் ஐயா என்பது தலித் என்பதைக் காட்டிக் கொடுத்தபடி இருந்ததால் பெயரை ஆசிரியரே மாற்றுவது என்று சமூகத்தின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

Image result for y b satyanarayana

வேதியியல் பேராசிரியராக பாலையாவின் மகன் சத்தியா உயர்கிறார். அவர் பணியாற்றிய கல்லூரியில் முப்பத்தி மூன்று வயதில் அவரின் திறனால் முதல்வர் பதவி வந்து சேர்கிறது. தன்னுடைய பெருந்தன்மை மூலமும், நிர்வாகத்திறமை மூலமும், மதிகா எனச் சொல்லித் திட்டியவர்களை கூட அரவணைத்துக் கொள்கிறார். கல்வியின் அடுக்குகளும், கடும் உழைப்பும் எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேல் எழுப்பும் என்பதற்கு பாலையா எடுத்துக்காட்டாக கல்வியை ஆயுதமாக்கி சாதித்தார்.

இந்த புத்தகத்தில் காதலும், துரோகமும் உண்டு. நெகிழ வைக்கும் தருணங்கள் உண்டு. போனவர்கள் திரும்பவே திரும்பாத பிரிவுகள் உண்டு. சாதியைக் கடந்து சக மனிதர்களாக பிள்ளைகளை பார்க்கும் நம்பிக்கை தரும் மனிதர்கள் உண்டு. உச்சத்துக்கு போனாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணரவே உணராத கற்றவர்கள் உண்டு. மதிகா மக்களின் திருமணங்கள், கலாசாரம், தெய்வங்கள், நம்பிக்கைகள் பற்றிய சுவையான குறிப்புகள் உண்டு. பாலையா எனும் ஒற்றை மனிதனின் கதை மட்டுமல்ல இது. ஒரு சமூகம் தன்னைத் தானே பிரதிபலிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்கள் உயர இட ஒதுக்கீடும், கல்வியும், நகர வாழ்வும் தரும் வாய்ப்புகளை உணரவும் வைக்கும் நூல். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

HARPER COLLINS வெளியீடு
பக்கங்கள்: 211
விலை: 35௦

தலித்துகளின் போலிக்காவலரான இந்துத்வம்


Fascinating Hindutva நூலை வாசித்து முடித்தேன். எந்த இந்து மதத்தினுள் தலித்துகள் ஒடுக்கப்பட்டும்,பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளானார்களோ அதே இந்து மதத்தின் அடையாளங்கள் நீங்கள்,அதன் பாதுகாவலர்களே தாங்கள் தான் என்று சொல்லி அவர்களின் ஓட்டுக்களை கவர பி.ஜே.பி. நடத்தும் சாமர்த்திய அரசியலை கள ஆய்வு,நேர்முகங்கள்,அவர்களின் தேர்தல் பிராசார யுக்திகள் ஆகியவற்றின் மூலம் அற்புதமாக இந்நூல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

90 களின் ஆரம்பத்தில் ராமரை முன்னிறுத்தி தன்னுடைய தேர்தல் அரசியலை பி.ஜே.பி. கட்டமைத்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் ஓடிய ராமாயணம் சீரியல் பெரிய உத்வேகத்தை அந்த அரசியலுக்கு தந்தது. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் உயர் ஜாதியினர் இணைந்து கிச்சடி சாப்பிடும் நிகழ்வுகள்,அவர்களுக்கென்று சிறப்பு பள்ளிகள் என்று அவர்களை தங்களோடு இணைக்கும் முயற்சிகளை பி.ஜே.பி. செய்தது. ஆனால்,ஆதிக்க ஜாதியினர் அவர்களை தங்களோடு இணைத்து கொள்ள மனம் ஒப்பாதது மற்றும் ராம ஜென்ம பூமி அரசியலின் நீர்ப்பு ஆகியன பி.ஜே.பி.யின் பாணியை மாற்றிக்கொள்ள வைத்தது. 

மாயாவதி செருப்பால் பிராமணர்களை அடிப்போம் என்று சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்ததை விடுத்து,அவர்கள் நம்மை முன்னடத்தி செல்லும் யானைகள் போன்றவர்கள் என்று தன்னுடைய அரசியல் அமைப்புக்குள் அவர்களை இணைத்து கொண்டார். பி.ஜே.பி. உள்ளுக்குள் வாருங்கள் என்றது எடுபடாமல் போகவே ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தது. பழங்காலத்தில் இந்து மதத்தை காக்கவும்,இந்தியாவை தாக்கிய இஸ்லாமியர்களை எதிர்த்து போரிடுகிற வேலையையும் செய்தவர்கள் நீங்களே ! என்று ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் கதைப்பாடல்கள் மூலமும்,வரலாற்றை திரித்தலின் மூலமும் அரசியல் செய்ய ஆரம்பித்தது. 

இஸ்லாமிய அரசர்கள் மற்றும் தலித்துகள் சில புள்ளிகளில் சண்டையிட வேண்டிய சூழல் இருந்திருந்தாலும் பெரும்பாலும் அமைதயாகவே அவர்களுக்கிடையே ஆன வாழ்க்கை இருந்திருக்கிறது. அதை குலைக்கும் வகையில் விஷம பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. ராஜ ஹரி சந்திராவின் நாடகத்தோடு லைலா மஜ்னு நாடகமும்,ஷிரி பர்ஹத் நடந்து கொண்டிருந்த ஊர்களில் அவையெல்லாம் இஸ்லாமிய நாடகங்கள் என்று அவ்வூர் ஆர்.எஸ்.எஸ். தலைகள் நோ சொல்லிவிட்டார்கள். 

சுகல்தேவ் என்கிற அரசன் கொள்ளைக்காரனாகவும் அவனிடம் இருந்து மக்களை காப்பற்றியவரான காஜி மியானை வில்லன் போல சித்தரித்து சுகல்தேவை நாயகன் ஆக்கி மக்களை ஏமாற்றுகிற வேலையை செய்வதோடு நில்லாமல் காஜி மியான் தர்காவுக்கு தொழுநோய் குணமாகிறது என்று போய்க்கொண்டு இருந்த இந்துக்களையும் தடுத்து நிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனுமானை வணங்கிவிட்டே மல்யுத்தம் சொல்லித்தருகிற பண்பை இஸ்லாமிய மற்றும் இந்து மல்யுத்த வீரர்கள் வைத்திருப்பதை மறைத்து அனுமன் மற்றும் வானர சேனைகள் தலித்துகள் தான் ! அவர்கள் மூலமே ராமன் வென்றான் என்றொரு கதை ஒரு பக்கம் என்றால்,நிஷாத் வகுப்பை சேர்ந்த குகன்,கட்டைவிரல் கொடுத்த ஏகலைவன் மகாபாரதம் இயற்றிய வியாசர்,ராமாயணம் எழுதிய வால்மீகி,ஐம்பதாயிரம் முஷாகர்கள் இருக்கும் வகுப்பை சேர்ந்ததாக சொல்லப்படும் சபரி ஆகிய அனைவரும் இந்து மதத்தை காத்த தலித்துகள். ஆகவே,நீங்கள் எங்களுடன் இணைந்து விடுங்கள் என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள். 

அம்பேத்கரை நவீன மனு என்று புகழ்ந்து அவர் எதிர்த்த இந்துத்வத்துக்குள் அவரையும் இணைத்ததோடு நில்லாமல்,பிராம்மணியத்தை தீவிரமாக எதிர்த்த புலே உங்களை மதம் மாற சொல்லவில்லை என்பதிலேயே அவரும் இந்து மதக்காவலர் என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்பதாகட்டும்,புத்தர் மகா விஷ்ணுவின் அவதாரம் எதற்கு மதம் மாறிக்கொண்டு என்றும் பரப்புரைகள் நிகழ்கிறது. மதம் மாறினால் இட ஒதுக்கீடு தராதீர்கள் என்று அத்வானி முழங்குவதை இந்த பின்னணியோடு இணைத்தே பார்க்க வேண்டும். 

தலித்துகள் என்கிற பதத்தையே உபயோகிக்க பெரும்பாலும் மறுக்கிற இந்த காவி நபர்கள் இஸ்லாமியர்கள் வஞ்சித்த மக்கள் தலித்துகள் என்கிற அர்த்தத்தில் வஞ்சித்கள் என்கிற பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் போகிற பொழுது அந்தந்த பகுதி ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக இருக்கும் புராண கதாபாத்திரத்தை இந்து மதத்தின் காவலர் என்று சொல்லி ஓட்டுக்களை கவர முயற்சிக்கிற அரசியல் பாணி இன்னமும் தொடர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை மைய சமூக நீரோட்டத்தில் இணைக்க முயற்சிகள் எடுக்காமல் அவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்யப்பார்க்கும் இந்துத்வாவின் தமிழக முகங்களும் அதையே செய்வதை நீங்கள் கவனிக்கலாம். அவசியம் படிக்க வேண்டிய சிறிய நூல் 

ஆசிரியர் : பத்ரி நாராயண் 
sage வெளியீடு 
பக்கங்கள் : 216 
விலை : 425